என்ன எல்லாரும் வந்தாச்சா ஒன்னுமில்லைங்கோ பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் வேணுமுன்னு சின்னப்புள்ளைங்க கேட்டுகிட்டாகளா. நாமளும் அவங்களோட கூட்டாச்சா அதாங்க [சின்னப்புள்ளையாச்சே] அதான் அவங்களோட கூட்டுசேந்துட்டேன் அப்படியே அவங்க சொன்னதையும் நம்ம ரசனைக்கு தகுந்ததுபோல் தேர்ந்தெடுத்துட்டேன் நல்லாக்குதான்னு கேக்கதான் கூப்பிட்டேன் நால்லாக்குதா
ஆசை
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி வந்து
தூங்குது தூங்குது பாராம்மா அதை
சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இலைகளில் ஒளிர்கின்ற பூக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசைமீட்டும்.
இயற்கை ரசித்து ரசித்து ஆனந்தப்படவைத்து அதனுள் மூழ்கவைக்கும் கானம்..
மேமாதம்.
மார்கழிப்பூவே மார்கழிப்பூவே உன்
மடிமீது ஓரிடம் வேண்டும்.
மெத்தைமேல் கண்கள் மூடவுமில்லை
உன்மடிசேர்ந்தால் கனவுகள் கொள்ளை
வாழ்க்கையின் ஒருபாதி நானிங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நானிங்கு ரசிப்பேன்
காற்றிலொரு மேகம்போல் நான் என்றும் மிதப்பேன்.
தனக்குள் எழும் எண்ணத்தையெல்லாம் வர்ணனையோடு
வடிக்கும் வண்ணமிகு கானம்.
மெளன ராகம்.
சின்ன சின்ன வண்ணக்குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாட்டும் தேன்மொட்டு நானா நானா.
சொல்லதான் எண்ணியும் இல்லையே பாசைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்..
விலகிய அன்பு நெருங்கும்போது ஏற்படும் உணர்வை
வெளிச்சமிட்டுகாட்டி வெக்கப்படவைத்து புரியவைக்கும் கானம்
அலைபாயுதே.
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதை
தவனை முறையில் நேசிக்கிறேன்.
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
அழகாய வரிகளால் இதயசெய்திகளை
இளகியகுரலில் சொல்லும் கானம்.
ஆட்டோகிராஃப்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒருகனவுகண்டால் இதை தினம் முயன்றால்.
சோர்ந்துகிடக்கும் மனஉணர்வுகளை தட்டி எழுப்பும் கானம்
மெல்லத் திறந்தது கதவு
ஊருசனம் தூங்கிருச்சி
ஊதக்காத்தும் அடிச்சிருச்சி
பாவிமனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே!
உன்னெ எண்ணிநானே உள்ளம் வாடிபோனேன்
கன்னிபொண்ணுதானே ஏன்மாமனே
ஏன் மாமனே!
தன்மன எண்ணத்தை ஊரடங்கியபின் உரக்கபாடி
உள்ளத்தில் உள்ளத்தை ஊரறியச்செய்யும் கானம்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
எங்கே எனது கவிதை
கனவிலே! எழுதிமடித்த கவிதை.
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதோ
கவிதைதேடிதாருங்கள் இல்லையென்
கனவை மீட்டுத்தாருங்கள்
தொலைத்த காதலை தொலைக்கமுடியாமல்
தவிக்கும் தவிப்பை உணர்த்தும் கானம்
தீபாவளி
கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் ஒருமயக்கம் அதை ஏற்று நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
ரெக்கை விறிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே!
காதலுக்கான எதிர்பார்ப்பில் தன்காத்திருத்தலை
வெளிப்படுத்தும் காதல் கானம்
ரோஜா
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவைத்த ஆசை
வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை
நிறைவேறா ஆசையென்றபோதும் அதை நிறைவேற்ற
துடிப்பதுபோல் தூண்டிவிடும் கானம்.
வைதேகி காத்திருந்தாள்
அழகு மலராட அபிநயங்ககூட
சிலம்பொலியும் புலம்புவதைக்கேள்.
விரல்கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பலயிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது..
பூங்காற்று மெதுவாக தொட்டாலும்கூட
பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றதே!
ஓர் விதவையின் உணர்வுகளையும் வலிகளையும்
வழியும்கண்ணீரோடு வதைவதை உணர்த்தும் கானம்..
டிஸ்கி// இந்த தொடரை எழுத அழைத்த ரோஜாப்பூந்தோட்டம்...
மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி
மாணவியரின் படைப்புலகம் அவர்கள்.அழைத்த அழைப்பையேற்று
இத்தொடர்..
ஏதோ நமக்கு தெரிந்தவரை எழுதியாச்சி கவிதை ரசனைகளோடு கலந்த கானங்கள் மிகப்பிடிக்கும். ஆனால் நமக்கு அவ்வளவாக சினிமா சம்மந்தான தொடர்பு கிடையாதுங்கோ.
தொடரில் பங்குள்ள விடுத்த அழைப்பையேற்று இவைகளை தொகுத்துள்ளேன் பிடித்திருந்தால் கருத்திடுங்கள்
அவர்கள் சவாலுக்கு அழைத்த கவிதை இங்கே பதிந்துள்ளேன் அதையும் பாருங்க
அட என்ன போறீங்க நில்லுங்க நில்லுங்க விதிமுறையே இதை தொடரனுமுன்னுதான். இத்தொடரை எழுத நான் அழைப்பது
ஆமினா [க்கா]
ஜெய்லானி அண்ணாத்தே!
வினோ!
வெறும்பய.
அப்பாடா நம்ம வேலை முடிஞ்சது இப்ப கிளம்புங்கோ வர்ட்டா...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.