நினைத்தவைகள் அத்தனையும்
நினைத்தடங்குமுன் என்கண்ணெதிரில்
நிறுத்தும் என்னவனே
நினைத்து நினைத்துதான் கரைகிறேன்
நிகழவில்லையே உன்னால் அந்த
ஒன்றுமட்டும்
அந்தடியை மறந்துவிடாதே என்றுசொல்லி
அன்றொரு தோழி அடித்த ஞாபகம்
ஆனால்
என்னையாளும் உன்கையால்
என்றாவது விழவேண்டுமே
ஒரு அடி
அந்தடியை மறக்கமால் அடிநெஞ்சுக்குள்
அழுத்திப்பூட்டிக்கொள்வேனே இந்த
அகிலம்விட்டு போனபின்னும்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்