நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சகாயம் சாதனை ஆகாயம்




லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து
லட்சியம் எடுத்து நடக்கும் சிறப்பு,,,
ஊழலுக்கு உலைவைக்கும் துடிப்பு,,
முறைகேடுகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பு,,
தான்மட்டும் நேர்மை காணுவதை தவிர்த்து,,
தன்னைச் சுற்றியும் நேர்மை பயிரிடும் விதைப்பு,,
மாற்றி மாற்றி பணி
மாற்றங்களின் போதும்-தன்கொள்கையை
மாற்றிடாது முன்னேறிடும் வீராப்பு,,
சொத்துக்களை சுரண்டியொளி[ழி]க்கும்
சபையோர் மத்தியில்,,
சொந்தக்கணக்கையே பட்டியலிட்ட
மறைவில்லா ஒளிர்வு,,,
நேர்மையும் வாய்மையும்
நேர்க்கோட்டில் வைத்து,,
நெஞ்சை நிமிர்த்தி வாழும் நிதானிப்பு,,,
பெருங் காயங்களுண்டாக்கும்
புலிதோல்களுக்கு மத்தியில்,,
பிறருக்கும்
காயமேற்படாவாறு பொறுப்பேற்று -மன
பலத்துடன் வழிநடத்தி நடக்கும்,,,
சகாய சாதனையின் அணிவகுப்பு,,
சத்தியமேற்ற தன் ஒழுக்கவுயர்வு நடத்தையால்
கிடைக்கபெற்றது,
சாதனை ஆகாயமாய் சகாயத்தின் பிறப்பு....

”சகாயம் சார் தங்களின் சிறந்த பணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..
 துணிந்து தொடர்ந்திடுங்கள் துணையாய் இறைவனிருப்பான் அதனுடன் நல்லுள்ளங்களின் பிராத்தனைகளுமிருக்கும்...


====================================================
பின்குறிப்பு:

படைத்தவனைத்தவிர 
படைப்பினங்கள் அதீத புகழுக்குறியதல்ல என்பது 
எனக்குள் ஓடும் கருத்து ஆக நான் படைப்புகளை முகஸ்துதியாய் புகழ்வதேயில்லை.
இது புகழ்ச்சியல்ல மனம்நிறைந்த மகிழ்ச்சி...
நாம் நினைப்பதை நம்மால் செய்யமுடியாததை பிறர் செய்யும்போது ஏற்படும் மனநிறைவு அதுபோல்தான் இதுவும்

இன்று நான் கூகிளில் ஒன்றைத்தேடிப்போக அது ஒன்றை எனக்கு காட்டியது. முன்பே பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் இன்று இவரைப்பற்றி எழுத்தூண்டியது, நல்லதை உடனுக்குடன் செய்யனுமென்ற கோட்பாட்டில்
எனக்குள் ஓடிய எண்ணத்தை எழுத்தில் விதைத்துவிட்டேன் பிறமனங்களுக்கும் பயிராகவேண்டி.. நல்லவற்றை விதைத்தால் நல்லதை தவிர வேறெதும் விளைவதில்லை, இடையே முளைக்கும் காளான்கள் பயிராகுவதில்லை...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது