செந்தாழும் பூவும்
சின்னப் பாம்போடு ஆட
வண்ண ரோசாப் பூவும்
சின்னப்பொண்ணோடு கூட
முல்லைப் பூவும்
முகம் மலர்ந்து சிரிக்க
மொட்டவிழ்ந்த மல்லிகையோ
மஞ்சத்தில் மகிழ
செவ்வந்திப் பூவுக்கோ
மூங்கில் காற்றின் வழியே
முஹாரி ராகம் கேட்டபோது
சிணுங்கிச் சிணுங்கியழுதது
செத்த மனிதருக்காக
செக்கச்சிவந்த என்னை
சித்தரவதை
செய்யப் போகிறார்களேயென்று!
பாவம் அதற்குத்தெரியவில்லை
பணக்கார பிணத்துக்கும்
பலவித மலர்களும்
பாடாய் படுமென்று!!!!
[டிஸ்கி இரவு டீவியில் பார்த்த ஒரு காட்சியால்
பிறந்தது இக்கவி ஹா ஹா
மலரின் மனம் விம்மி அழுததாய் தோன்றியது அதான் ஹி ஹி ஹி
என்னக்கொடுமப்பா இது அப்படின்னுதானே சொல்லுறீங்க]]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்