குயிலின் கூட்டில்
கள்ளத்தனமாய்
கருநாகம் குடியேறி
குடிலை கலைக்க நினைக்கிறது
வீதியில் செல்வோரை
வேசியென வாய்கூசாமல் ஏசி
வேசியென வாய்கூசாமல் ஏசி
வேடதாரிகளாய்
வெளிவேசம் போட்டுத் திரிகிறது
கழிசடையெல்லாம்
சாக்கடையில் ஓடாமல்
கள்ள உள்ளம் கொண்ட மனதுக்குள்
கரைபுரண்டு ஓடுகிறது
வாழை வீழ்ந்தாலும்
தன் வம்சம் தளைக்க
தன் வம்சம் தளைக்க
தன் வாழையடியை
விட்டுச்செல்கிறது
”ஆனால்”
பச்சோந்திகளாகும் மனங்கள்
தன் வாழ்க்கையை நிறம் மாற்றி
தன் வம்சத்தின் வாழ்வுக்கும்
பழிச்சாயம் பூசுகிறது.
அற்பங்களுக்கு ஆசைப்பட்டு
அடுத்தவர் வாழ்வையும் கெடுத்து
தட்டுக் கெட்டு தடுமாறி
தன் வாழ்வை
தானே சூன்யமாக்கிக் கொள்கிறது
மாற்றாளின் கணவனை
மயக்கும் மனைவியாய்!
மாற்றானின் மனைவிக்கு
மயங்கும் கணவனாய்!..
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.