நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விசித்திர இயந்திரம்.

கண்ணுக்குள் குடிகொண்டு
காணும் காட்சியாவும்
நீயாகிப் போனாய்-எனைவிட்டு
நீங்காமலே

நினைவுகளை சுமந்துக்கொண்டு
நிலாவின் வெளிச்சத்தில்
நித்திரையின்றித் தவித்தேன்

நான்போகும் வழியெங்கும் -உன்
நிழலில் பிம்பம் எனைத்தொடர்ந்து
நீந்திவர
நீயாகவேயானேன் நான்

எனையும் உனையும்
இணைத்தது எதுவென
என்மனதிடம் கேள்விகேட்டால்
எதுகை மோனையோடு
எகத்தாளமாய் பதிலளிக்கிறது

இதுகூட தெரியா ஏமாளியா நீ
கோடையில்லாமல் எரியும்போதும்
வாடையில்லாமல் குளிரும்போதும்
தெரியவில்லையா!
இது அதுதானென

ஆணானப்பட்ட ஆட்களே இதனால்
ஆடிநிற்கும்போது
அடிப்பெண்ணே நீமட்டுமென்ன
விதிவிலக்கா?

விரட்டாமல் மூச்சுவாங்கி
விழாமல் அடிவாங்கி
விளக்கம் தெரியாமல்
விழித்து நிற்கவைக்கும் வினோதம்

அதுதானுனக்கு அவஸ்தையாய்
அதிசயமாய் தெரியும் விசித்திரம்
அதுதான் காதலென்னும்.
அன்பை இயக்கும் இயந்திரம்..

டிஸ்கி//கடல்கடந்து வந்து கானகத்தில் தங்கி மீண்டும் கடல்கடந்து
தாயகம் சென்று திரும்பிவரும்வரையில். கவிதைகள் வந்துகொண்டிருக்கும்.அதற்கு கருத்துக்களென்னும் ஊக்கம் தந்துகொண்டிருங்கள்.
வந்ததும் உற்சாக பதிலளிக்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அன்புள்ள தமிழ்நாடே...

இரண்டு வருடங்கள் கழித்து
இளைப்பாற வருகிறேன்
இனிப்பாய் இளநீர் தந்து
இன்பமுறச் செய்வாயென

தங்கத்தமிழ்நாடே உனைக்கான
தகதகக்கும் வெயிலை
துடச்சி எரிஞ்சிவிட்டு
தவிப்பாய் ஓடிவருகிறேன்

தாய் தங்கைகண்டு எனைத்
துரத்தி விளையாண்ட
தோழிகளைக் கண்டு
சுகத்தையும் சோகத்தையும்
பகிர்ந்துவிட்டு

மீண்டும்
பாலைவனம் வந்துசேரவேண்டும்
பட்டினியில்லா சோறுதிங்கவும்
பந்தங்கள் பாசமாய் எங்களோடு
ஒட்டி உறவாடவும்

மீண்டும்
ஓடிவரவேண்டும்
ஓயாது உழைக்கும் என்னவனுக்கு
ஒத்தாசையாக இருக்கவேண்டும்

ஆகையால்

அன்புள்ள தமிழ்நாடே-என்னை
ஆசையாய் வரவேற்று
அன்போடு உபசரித்து
இன்முகத்தோடு திரும்ப அனுப்பிவை

ஏனெனில் நான் என்றுமே
என் தாயகத்தின் திருமகளே....
நீரோடையில் நீந்த மீண்டும் 15 நாள் கழித்து வருவேன் அதுவரை மறந்துவிடாதீங்கப்பா நீங்க மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். மீண்டும் வருவேன் எழுத்தாய். வரியாய். கவிதையாய். கவிதைகள் அப்பப்ப வந்துகொண்டிருக்கும். கருத்துக்கள் எழுதாமல் போய்விடாதீர்கள். அனைத்துக்கும் திரும்பியதும் பதில் தருவேன்.
அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுவது

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனைநேசி இன்பம் பெறுவாய்.

வாசலாக்கி....

இளைய பெண்ணின்
இமைகளை வைத்துவிட்டு
விழிகளை எடுத்துச் சென்றான்

ஈரநினைவுகளை புதைத்துவிட்டு
இதயத்தை எடுத்துச் சென்றான்

விழிவழியே தூதுவிட்டு -காதலை
விதைத்து சென்ற காதலனை

விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
விட்டுச்சென்ற நினைவுக்காக

பட்டுமேனி பதறாமல்
பார்வை தொட்ட ஸ்பரிசத்தால்

பாவையுள்ளம் பதறிப்போய்
பாசநோயால் வாடுகிறாள்

விழியையே வாசலாக்கி
வஞ்சியவள் பார்த்திருக்கிறாள்

காதலன் வரும்நாளை எதிர்நோக்கி
காதலோடு  காத்திருக்கிறாள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

உயிரின் வேர்கள்.

பதுமையே பதுமையே-உன்

பட்டுமேனி தொட்டிடவா
பஞ்சுக் கன்னம் தொட்டிடவா
பிஞ்சு விரல் தொட்டுமீட்டி
பிள்ளையுன்னை கொஞ்சிடவா

பூப்போன்று முடிவைத்துக்கொண்டு
பொசுபொசுவென கிடக்கின்றாய்
காதுமடல் நான்தொட்டால்
கைகால்கள் ஆட்டுகின்றாய்

நெற்றிரோமம் நீக்கிவிட்டால்
நெளிந்து வளைந்து கூசுகின்றாய்
இறுக்கி இமைகள் மூடிக்கொண்டு-எனை
இமைக்கவிடாது செய்கின்றாய்

உச்சிமுகர்ந்து பார்க்கையிலே-என்
உச்சிகுளிர வைக்கின்றாய்-என்
உள்ளங்கையில் ஏந்துகையில்-இந்த
உலகே நீயென உணர்த்துகின்றாய்

கருவறையில் இருந்தவரை
காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
கண்மணியே என் காலம்வரை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

ஒளியற்ற விழி!

நன்றி கூகிள்
கலர்கனவுகளை சுமந்து
கானலைக்கூட
காணமுடியா காரிருள் சூழ்ந்த
கருவிழிகள்

வெளிச்சமென்றால் என்னவென்று
விபரமறியா கேள்விக்கேட்டு
வெளிறிக் கிடக்கும்
வெள்ளைவிழிகள்

வண்ணத்தை பார்க்கிறதா?
வடிவத்தை பார்க்கிறதா?
விளங்காமல்
விழிக்கும் இருவிழிகள்

வாழ்கையை பார்க்கமுடியா -தன்
வதனத்தை பார்க்கமுடியா
வேதனையில்
வேகிறது  மனச்செல்கள்

விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்டும்
விதிவிலக்கானதே விடியல்

காலங்கள் கடக்கிறது
கறுமையின் வெறுமையில்
காற்றோடு கேட்கிறது
கண்ணொளியின் உணர்தல்

கலிகால யுகத்தில்
கண்ணிருந்தும்
குணத்தளவில்
குருடனாயிப்பதைவிட

குருடனாயிருந்து
காலத்தை கழிப்பதே மேலென
கருதுக்கும் சொன்னாலும்
கலங்குகிறது நெஞ்சம்

மனம் கல்லானவருக்கெல்லாம்
மங்கள ஒளியிருக்கும்போது
மென்மையான மனகொண்டோருக்கு
மங்கிய ஒளிகூட முன்னுக்குவர
மறுக்கிறதே யென!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

தூதுபோ..




பாலைவனம் சென்றுவிட்ட
பாவையின் காதலனை

பால்நிலாவே பார்த்துவா
பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா

வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு

வான்மழையின் தூறல்கண்டு-மண்
வாசம் வெளியேறி

காற்றோடு கலந்து -என்
காதல்கணவன் நாசியில் ஏறட்டும்.

நான் தூதுவிடும் சுவாசக்காற்று
பால்நிலாவின் ஒளியோடு இணைந்து

மண்வாசத்தோடு கலந்து அவன்
மனதுக்குள் கலக்கட்டும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வேர்கள் தமிழில் விழுதுகள் உலகெங்கும்.

அன்னைமொழி தமிழை
அமுதமாய் அருந்தி
அனுதினமும் வளர்ந்து

அயல்தேச மண்ணில் வந்து
அயராது உழைக்கும் போதும்

அலுப்புகள் இல்லாது
அடிமனதில்
அப்பப்ப தோன்றும் ஆசைகளெல்லாம்

அழகிய தமிழ் தனிலே
அடுக்கடுக்காய் எழுதி வைத்து

அடிநெஞ்சில் அச்சிட்டு
அழியாமல் காத்து

சேத்து வைத்த காத்ததெல்லாம்-இப்போ
செந்தமிழில் பாடிட வா

தேசம்தாண்டி வந்தபோதும்
நேசக்கரம் நீட்டிட வா

தாய்தமிழைத் தாலாட்டி
தாளம் ஒன்று போட்டிட வா

முத்தமிழாம் மும்மொழியை
மூச் சுள்ளவரை மொழிந்திட வா

பைந்தமிழாம் பசும்பொழியை
பாரெங்கும் போற்றி பரப்பிட வா

செம்மொழியாம் தமிழ்மொழியை
சிறப்பாய் சிகரத்தில் ஏற்றிட வா

என்னுதிரத்தில் கலந்திட்ட
தமிழ்தனையே
வேராக பயிரிடுவேன்

இந்த உலகெங்கும்
விழுதாக்க
இயன்றவரை உழைத்திடுவேன்

தமிழ்நாட்டில் பிறந்ததற்கு –என்
தாய் தந்தைக்கு
நன்றி சொல்லிடுவேன்

உடல்தந்து உயிர்தந்து
தமிழ்தந்த என் இறைவனுக்கு
தலை வணங்கிடுவேன்..


அமெரிக்கத் தலைநகரில் செர்மன் டவுன் நகர உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜூலை 10, 2010 சனி மாலை.தோழி விஜி சத்தியா அவர்களால் வாசிக்கப்பட்ட என் கவிதை
தோழி விஜி அவர்கள் எனக்கு தமிழ்குடும்பத்தில் அறிமுகம்.[நேர்முகம் இல்லை ]
விஜி கிச்சன் என்று வலைப்பூவும் நடத்துறாங்க.
ஜூலை 10, 2010 விழா இருப்பதாவும் அதில் கவிதை வாசிக்கவேண்டும் எனக்கு ஒரு கவிதை எழுதிதாருங்கள் தலைப்பு இதுதான் //வேர்கள் தமிழில் விழுதுகள் உலகெங்கும்/. 5. நிமிடத்திற்க்குள் கவிதையிருக்கனுமாம் என்றார்கள். எழுதியனுப்பினேன்.//உங்க கவிதை ரொம்ப நல்லாயிருக்கு என்று பாராடுக்கள் கிடைத்திருக்கு, நான் தான் ஐந்து நிமிடம் என்று சொன்னதினால் நீங்க தந்திங்க. இப்ப சொல்கிறார்கள், இன்னும் கொஞ்சம் கூட சேருங்க என்று, முடிந்தால் கொஞ்சம் கூட சேர்த்து தர இயலுமா?
இது சின்னதாக இருக்கு என்றும் சொன்னாங்க///என்று
மீண்டும் மெயில்.மீண்டும் பத்துவரிகள் இணைத்து அனுப்பினேன்.

அந்த கவிதைதான் நீங்க மேலே படிப்பது. [அவங்க இணைத்த வரிகள் இதில் இல்லை]
விஜிஅவர்கள் மேடையில் வசித்து கவிஞர்.தாமரை கைகளால் சர்டிப்பிக்கேட்டும் வாங்கியுள்ளார்கள்.


 இன்று அவர்களின் மெயில்கண்டதும்.மனதில் சந்தோஷம் அளவிடமுடியாமல் நானே வாங்கிய மகிழ்ச்சியை உணர்ந்தேன்.[அதை உங்களோடு சேர்ந்து மகிழ்ந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று நினைத்து இதில் வெளியிடுகிறேன்] என்தோழி வாங்கினால் என்ன நான் வாங்கினால் என்ன! எல்லாம் ஒன்றுதான்.என் எழுத்துக்கள் பிறருக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையுமே தரவேண்டுமென்ற எண்ணம் அப்ப அப்ப நிஜமாகி என்னை உற்சாகப்படுத்துகிறது.
கடல்கடந்து கடல்கடந்தும் காற்றோடு கலந்து என்சிந்தனைகள் கவிவழியே இந்த பிரபஞ்சம் முழுவதும் வலம்வர வேண்டும்[இதுகொஞ்சம் ஓவருதான்] இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அடுத்தது ஊக்கம்தரும் உங்களுக்கும் நன்றிகள்.

இக்கவிதையை வாசித்து வந்தபின் சொல்லுங்கள் என் தளத்தில் வெளியிடுகிறேன் என அவர்களிடம் சொல்லியிருந்தேன். இதோ செய்துவிட்டேன் மனநிறைந்த சந்தோஷத்துடன்.
தமிழை உலகெங்கும் பரப்பிட முயற்சிக்கும் வண்ணமாக....

அன்புத்தோழி விஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
விஜி அவர்கள் எனக்கு அனுப்பிய நன்றிக்கடிதம்.
//நன்றி. நன்றி நன்றி....
விழா நன்றாக நடந்தது. எல்லாரும் என் கவிதையை கேட்டு ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். மீண்டும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் அதில் 7 வரிகள் இணத்து படித்தேன்.
கவிஞர் தாமரை அவர்கள் முன்னிலையில் நடந்தது எங்க கவியரங்கம்.
மிக்க நன்றாகவே இருந்தது. தாமரை அவர்கள் எங்களுக்கு சர்டிப்பிக்கேட் தந்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
அன்புடன் தோழிவிஜி..//

கவிதையின் விதிமுறை நோட்டிஸ் விஜிசத்தியா அவர்கள் அனுப்பியது
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, கவியரங்க நெறிமுறைகள்
நோக்கமும் குறிக்கோளும்:
தமிழ் இன, மொழி, பண்பாடு காத்தலும் போற்றுதலுமே கவியரங்கத்தின் தலையாய நோக்கமாகும். அதைக் கருத்திற் கொண்டு, தலைப்பைப் பிரதிபலிக்கும் விதமாக இலக்கியச் சுவையோடும் சொல் வளத்தோடும் கவிதை நயம் வெளிப்படுதலே இந்நிகழ்ச்சியின் சீரிய குறிக்கோள்.

நெறிமுறைகள்:

.கவிதையின் பாடுபொருள் தலைப்பை ஒட்டியே இருக்க வேண்டும்.

· கவிதையானது நான்கு மணித் துளிகளுக்குள் முடிவுறும்படியாக, இருபத்து ஐந்து வரிகளுக்கு மிகாது இருத்தல் வேண்டும்.

· தனிமனிதத் தாக்குதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி, சாதி, மதம் மற்றும் இன்னபிற ஒவ்வாதன இல்லாதிருந்து, பேரவையின் மாண்பு காக்கும்படியாக இருத்தல் மிக அவசியம்.

· கவிதைகள் வேறெங்கும் வெளிப்படாதனவாக இருத்தல் வேண்டும்.

· இன எழுச்சி கொள்ளும்படியான மேன்மைக் கருத்துகளை, நறுக்கெனத் தைக்கும்படியாக வெளிப்படுத்துதல் சிறப்பைக் கூட்டும்.

· விமர்சனத்திற்கான களம் என்பதைவிட, உணர்வை ஊட்டுவதற்கான மேடை இது என்பதைக் கருத்தில் கொண்டு கவிதை வடித்தல் நிகழ்ச்சிக்கு மெருகூட்டும்.
· ஜூன் 19, 26 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் பல்வழி அழைப்பில் தவறாது கலந்து கொளல் வேண்டும்.
· ஜூன் பதினொன்பதாம் தேதிக்கு முன்னரே, உங்கள் கவிதையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு செய்வது கவிதைக்கு நயம் கூட்டவும், ஒரே கருத்து மற்றவர்களிடத்தும் வெளிப்படுவதைத் தவிர்க்க வழி வகுக்கும்.
· விழா அரங்கிற்கு வருமுன்னர், தாம் வாசிக்க இருக்கும் கவிதையை ஏற்ற இறக்கத்துடன் வாசித்து ஒத்திகை பார்த்திருத்தல் அவசியம். விரைவாகத் தங்கு தடையின்றி இயம்புதல் என்பது வெளிப்படுதிறனைச் செம்மைப்படுத்தும்.
· கிடைக்கும் நான்கு மணித்துளியில் நிறைவான கருத்தைச் சொல்லிக் கரவொலி பெறுவதே எளிதானது. நீண்ட நேரம் வாசிக்க வாசிக்க, கவிநயத்தின் வீரியம் தளர்ந்து நலிந்து போக வழி வகுக்கும். எனவே, நயமுடன் சுருங்கச் சொல்லி நிறைவை எட்டுதலே கவிஞருக்கு அழகு!
நிகழ்ச்சி பற்றிய மேலதிகத் தகவலுக்கு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரை எவ்விதத் தயக்கமுமின்றி நாடவும். ///

என்றும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

விழி வழியே ஒளி!

நன்றி கூகிள்
இரவுநேர வானம்
இருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்

விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்

விழிமூடிய நீ
விருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது விண்மீன்கள்

விடிவது தெரியாமலே! -என்
விழிகள் ஒளிர்வது அறியாமலே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கருப்பையின் கதறல்.

நன்றி கூகிள்
தளிர்க்கும் தளிரை
தழைக்கவேண்டிய உயிரை
தாய்மையின் தரமறியா
தான்தோன்றித் தனத்தால்

உள்ளங்கள் சந்தித்து
உடல்கள் சங்கமித்து
உலகிற்கு ஓர் உன்னத உயிர்
உலாவரத் துடிக்க

உடலுக்குள் இருக்கும்
உறுப்பென்னும் கருப்பையில்
உலவிடும் ஊதாப்பூவை
உருத்தெரியாமல் அழிக்க

கருப்பையைக் கதறக் கதற
கருவறுக்கும் கூட்டமே
காதில் கேட்குதா
கர்பப்பையின் கதறல்

உயிர்வதைச் சட்டம்-உலவும்
உயிர்களுக்கு மட்டும்தானா!
உடல் உறுப்புக்குள்
ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!

சங்கமிக்கும் முன் சற்றே
சிந்தித்து உடல்கள் சந்தித்தால்
சங்கமம்
சரித்திரம் படைக்கவில்லையென்றாலும்
சாந்தியடையுமே சதையென்னும் உயிர்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

நானும் கவிதையும் 200,ரையும் தாண்டி...

அன்பு நெஞ்சங்கள் அனைவரையும் என்னுடைய 205 வது [நீரோடையில் மட்டும்]பதிவில் அன்போடு வரவேற்கின்றேன்.

இது நூறாவதுபதிவு நேரமிருப்பின் கிளிக் செய்யவும்
கவிதையும் நானும் 100 ,ரையும் தாண்டி

தகதகவென ஜொலிக்கும் தங்கமகன் விருதை அளித்த ஜெய்லானி அண்ணாவின் துஆக்களோடு இருநூற்றி ஐந்தாவது பதிவில் அடியெடுத்துவைக்கிறேன். தங்கமங்கையாக [அச்சோ தங்கம் விற்கும் விலைக்கு கடத்திடப்போறாங்க பாத்து இருங்கோன்னு ஆரோ சொல்லுறது காதில் கேட்குது அதெல்லாம் கவனமாக இருப்போமுல்ல தங்க கிரில்போட்ட கூட்டுக்குள்..ஹி ஹி ஹி]


வலையில் விழுந்து இன்றோடு 11 மாதங்களாகிறது.
ஆரம்பத்திலிருந்தே என் பதிவுகளுக்கு ஆதரவும், கருத்துக்களும், என்னை மென்மேலும் எழுத்தூண்டியது. அதன்காரணமாக. பலமேடைகளில் கவிதைகள் வாசிப்புகள். நாளேடுகளில். மற்றும் பலபுத்தங்களில் என் கதை. கவிதைகள்.பல தளங்களில் என்கவிதைகள். 100 கவிதைகள் குறுகியகாலத்தில் எழுதியதற்காக வாங்கிய விருது மற்றும் என் அன்புவலைப்பதிவாளர்கள் அள்ளிதந்த விருதுகளென அதீத சந்தோஷத்தோடு ஆரவாரமில்லாமல் அன்போடு அடியெடுத்து வைக்கிறேன். இருநூற்றி ஐந்தாவது பதிவில்.

என் எழுத்துக்களால் அதிரை யுனிக்கோட் உமர்தம்பி அவர்களுக்காக முயற்சிசெய்து வெற்றியடைந்தது. என் கவிதைவரிகளால் 2.வருடங்கள் பிரிந்திருந்த[குழந்தையில்லாததால்]செல்வி,முத்தையா தம்பதியர்கள்.
முத்தையா வெளிநாடு சென்றுவிட்டு கடிதப்போக்குவரத்தோ தொலைபேசித்தொடர்போ இல்லாதிருந்தவர்கள். எதேச்சையாக தளங்களில் என்கவிதைகளை படிக்கநேர அடுத்தடுத்தும் படித்துவிட்டு தபால் போட்டதாகவும்.என் எழுத்துக்களில் ஏதோ இருந்து அவர்களை மீண்டும் இணைத்ததாகவும் தெரிவித்திருந்தார்கள். மனமார பாராட்டியிருந்தார்கள்.

அதேபோல் ஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் நாத்தனார் என்றபெயரில் அண்ணனை பிரித்துவைத்து வெளிநாடு அனுப்பிவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழ்குடும்பத்தில் என்கவிதைகளை படித்து அதை அவருக்கு அனுப்பிவைக்க நெடுநாள்களாக பேச்சிச்தொடர்பே இல்லாதிருந்தவர்கள் யார் இதை எழுதியது என பேசத்தொடங்க அதிலிருந்து தற்போது நல்லபடியாக இருப்பதாகவும். மனமகிழ்வுடன் நன்றியும் சொன்னார்கள். அப்பெண்ணைப்போல் மற்றவர்களும் ஆகக்கூடாதென கவிதையும் எழுதச்சொன்னார்கள். எழுத்துக்கள் எல்லாம் செய்யும் என்பதை உணர்ந்தேன். [உணரவைத்தார்கள்]. என்எழுத்துக்கள் என்மனதை சந்தோஷங்களைக்கொண்டு நிரப்பிய செயல்களைக் கண்டு வியந்தேன்.

என் எழுத்துக்களால் சிலராவது பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் எழுதவே தொடங்கினேன். பயன் கிடைத்தது. அதிலும் உறவுகள் நட்புகள். சகோதர சகோதரிகள் தாய்தந்தைகள் என வலையுலகில் என்னைச்சுற்றி பந்தங்களும் சொந்தங்களும் வலைபோல்பின்ன அதில் கட்டுண்டுக் கிடக்கிறேன். இது ஒன்றுபோதாதா என் எழுத்துகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
தாய் தந்தையாய் எனைத்தேற்றுவதும். சகோதர சகோதரியாயிருந்து வளர்ச்சிக்கு தூண்டுகோளாயிருப்பதும். நட்புகளாய் தோள்கொடுப்பதும் என சகலமுமாய் எனக்கு நீங்களனைவரும் கிடைத்து பாக்கியமே!

நான் இதுவரை எழுதிய பதிவுகளில் எந்தவொரு கருத்துரைகளும் என்னை பாதித்ததில்லை அப்படியாரும் என்னை பாதிக்கவைத்ததில்லை.
பலதளங்களுக்கு செல்கிறேன் அனானி என்ற பெயரில் தரகுறைவான வார்த்தைகளால் வசைப்பாடியிருப்பார்கள். அப்போதெல்லாம் மனதில் பயம்தோன்றும். இதுபோன்று எக்குதப்பாக யாரும் நமக்கு கருதுரையிடுவார்களோ என, ஏனென்றால் நான் எழுதிய பதிவும் அதேபதிவும் சிலசமயம் ஒன்றாக இருக்கும் வார்த்தைகள்தான் வேறுபட்டிருக்கும். அதிலிருந்தே புரிந்துகொண்டேன்.நம்முடைய எழுதுக்களில் நம்மையறியாமல் நன்மையிருக்கிது. அதைவிட இங்கே வந்துசெல்லும் அனைவருமே ரொம்ப ரொம்ப நல்லவங்க எனவும் அறிந்துகொண்டேன்.

யாரையும் எவ்விததிலும் நம்முடைய எழுத்துக்களால் நோகடித்துவிடக்கூடாதென்று மிக கவனமாக எழுதுகிறேன். இனியும் எழுதுவேன்.இதுவரை நான் எழுதியதில் எதுவும் தாங்களின் மனது சங்கடப்படும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என் தவறை மனதார மன்னித்துவிடுங்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவு என்றென்றும் வேண்டும் அதை தருவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது. இன்னும் நான் நிறைய நல்லவைகளுக்காக, நல்லதையே, எழுத இறைவனிடம் பிராத்தியுங்கள். உங்களோடு என்னையும் ஒரு தோழியாய். சகோதரியாய். மகளாய். ஏற்றுக்கொள்ளுங்கள்...
என் பாசமுள்ள அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் பல பல பல.

அப்புறம் ஒரு முக்கியச்செய்தி. நான் சட்டம்படித்தவள் இல்லை. பள்ளிப்படிப்பே அறைகுறைதான். நான் சட்டம் பயின்றவளென நினைத்து சிலர் உதவிகேட்கிறர்கள். இப்போது நினைக்கிறேன்,நாமும் படிதிருக்கலாமேயென. இருதோழிகளிகளும். ஒரு சகோதரரும்.[பெயர் வேண்டாம்].தாங்களின் நல்ல மனதுக்கு எல்லாம் நன்மையாக முடியும். எதற்கும் கவலைப்படாதீர்கள் இறைவன் இருக்கிறான் வெகுவிரைவில் தாங்களுக்கு நல்லது நடக்கும் நானும் இறைவனிடம் பிராத்திக்கிறேன்.


நான்காம் வகுப்புத் தாண்டா
நங்கை யொருத்திய
நல்லெண்ணெத்தோடு
நடைபயின்றாள்
வலைதளத்தில்

அன்னை மொழிக்கொண்டு
அழகுக் கவிகிறுக்கி
அன்போடு நடைபோட்டாள்
வலைகளத்தில்

வாசித்த நெஞ்சங்கள்
வாழ்த்திடவே
வாகைசூடிய கருத்துக்கள்
வழங்கிடவே

இருநூறு படைப்புகள் படைத்திட்டாள்-பல
இதயக்கூட்டுகுள் நுழைந்திட்டாள்
தலைக்கணம் ஏதும்வேண்டாமென
தன் இறையிடம் அழுது வேண்டிட்டாள்

மகிழ்ச்சி கடலில் குதித்திட்டாள்
மனமார நன்றிகள் தந்திட்டாள்
மேலும் மேலும் எழு[ந்]திடவே
மனதார வாழ்த்துக்கள் கேட்கின்றாள்

குறைகள் ஏதும் இருந்ததென்றால்
தயங்காமல் தட்டிக் கேட்டிடுங்கள்
நிறைகள் நிறைந்து இருந்ததென்றால்
நெஞ்சார தட்டிக் கொடுத்திடுங்கள்....

என்றும் உங்கள் நினைவுகளோடு
நிலைக்க விரும்பும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்களுக்கு
தொடர்ந்து ஊக்கம் தாருங்கள் அன்போடு.

சுதந்திரக் கிளிகள்.

முக்காட்டிட்டே
முடக்கப்படுகிறார்களென
முணுமுணுக்கும் சிலபேர்கள்
சிறகொடித்து கூண்டுகிளியாய்
சிறையில் வைத்துள்ளதாய்
சித்தரிக்கும் பலபேர்கள்.

முழுவதுமாய் மூடியிருப்பது
உடலையே தவிரை
உள்ளத்தையல்ல!
அதை செயல்படுத்தும்
மூளையையுமல்லவென-

முன்னேறிக் காட்டுகிறது
முக்காடிட்டபடியே
முன்னுக்கு வந்தும்
முழங்கால் கட்டாமல்
முகம் நிமிர்த்தி நின்றும்

சுதந்திரம் பறிக்கப்பட்ட
கூண்டுக் கிளிகளென
கூக்குரலெழுப்படுகிறது
கோடிட்டுக் காட்டப்படுகிறது
உண்மையறியாமல்

சுதந்திரம் கொடுக்கப்பட்ட கிளிகளாய்
சிறகை விறித்து பறக்கிறதே தவிர
கிளிகளையொன்றும் சிறகையொடித்து
சிறைப்படுத்தி வைக்கப்படமில்லை

கூண்டுக்கிளிகளாய் பறப்பதிலும்
கிளிகளுக்கொன்றும் பாரமில்லை
ஏனெனில்! சிலபல பார்வைகளில்
சினேகமுமில்லை   சத்தியமுமில்லை

பலங்காலத்து நாகரீகம்போல்
பின் நவீனத்திலும் ஆடைகளற்றும்
அரைகுறையாய் திரியும் மக்களிடையே
அகிலத்தை அறிவோடு வலம்வந்து
அசிங்கத்தை அவமதிக்கும்
இதேக் கூண்டுகிளிகளாய்
கூண்டுக்கிளியென்றபோதும்
யாருக்குமிங்கே அடிமையில்லை
சுதந்திரமாய் உலகத்தில்
சுற்றித்திறிய தடையேதுமில்லை

குறைக்கூறி கூக்குரல்
எழுப்பத் தேவையில்லை -மார்க்க
கோட்பாடுகளை குறைச்சொல்வதில்
சிறிதளவும் நியாயமில்லை

பர்தாஅணிவதில் தவறேதுமில்லை
இதனால் பாதகங்கள் எவருக்குமில்லை
பசுந்தோல் போர்த்திய புலிக்கும்
பச்சோந்திப் பார்வைக்கும் விருந்தாக
இப்பாவைகளுக்கு விருப்பமில்லை

மறையோன் சொல்லாத ஒன்றை
மனிதனுக்காக செய்யவேண்டுமென்ற
அவசியமுமில்லை
மாண்புடையோன் சொன்னசொல்லை
மறுத்திட மனதுக்கும் அனுமதியில்லை

கூண்டுக்கிளிகளாய்
இருப்பதில் சிறிதளவிலும்
வருத்தமுமில்லை
இறைவாக்கை மீறிட
எள்ளளவும் விருப்பமுமில்லை
இவ்வுலம் மட்டுமே
வாழ்க்கையுமில்லை

இதைத்தாண்டியும்
வாழ்க்கை உண்டென்பதே உண்மை
இதையறிந்து நடந்தால்
வசந்தமாய் கிடைத்திடும் நன்மை...

டிஸ்கி// ஆங்காங்கே உண்மை புரியாமல் எழுத்துக்கள்தானே  என வாரிக்கொட்டப்படுகிறது. நோகடிக்கும் வார்த்தைகள்.
தவறுதலாய் சிதறிய சோற்றை அள்ளிவிடலாம் ஆனால் வேண்டுமென்றே
தாறுமாறாய் சிந்தும் சொல்லை அள்ள முடியாது.
மல்லுக்கு நின்று மனதை நோகடிக்கும் சொல்லுக்கு மன்னிப்புதர மனம்மறுக்கும் சந்தர்ப்பதை யாரும் உருவாக்கிக்கொள்ளவேண்டாம்.

இந்தக்கவிதைக்கூட யாரையும் நோகடிக்கவல்ல.
உண்மை என்னவென்று சிலரேனும் விளங்கிக்கொள்வார்களென்றுதான்.
இதில் கருத்துக்கள்கூட யாரும் கடினவார்த்தைகள்கொண்டு கருத்திடவேண்டாம் பிறர்மனம் நோகும்படி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அடி ஆத்தி!



அத்த வித்தேன் இத்த வித்தேன்
தேரலையேக் காசு
அத்தனையும் பாலப்போச்சே
மிஞ்சலையே நோட்டு

நஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும்
நாதியத்த பொலப்பு
மாரடிச்சி மாரடிச்சி
மண்ட வீங்கிப்போச்சே!

அடுக்கடுக்கா பன்னவச்சி
அள்ளுறாங்க காசு
அதப்பாத்து பாத்து கெடந்துயிங்கே
அடிச்சிக்கிடுதே மனசு!

பன்னுமேல எள்ளபோட்டு
மேலும் கீழும் வச்சி
அடுக்கடுக்கா அதுகுள்ளேயே
அரச்சக்கறி பச்சகீரயும் வச்சி

அதுமேல வெண்ணயின்னு
ஏதோ ஒன்னத் தடவி
அத துண்ணும்போது விக்கிடாம
டின்னில் காக்கித் தண்ணி

விக்கிறாக வெதவெதமா
வெளிநாட்டு ஆளு
அத வாங்கித் துண்ண
வரிசையில நிக்கிறாக
நம்மஊரு ஆளு

அதபாத்த எனக்கு ஒரு
யோசனையும் தோன
நானும் இப்போ மாறிக்கின்னேன்
நாட்டு நடப்புக்கூட

ஆயா சுட்ட பன்னெடுத்து
அடுக்கடுக்கா வச்சி
அதுகுள்ளே எனக்குத்தெரிஞ்ச
அத்த இத்த வச்சி
அப்படியே வித்துப்புடுவேன்
ஆயா பெத்த பொண்ணு

துண்ணுகிட்டே இருக்கையிலே
விக்கலெடுத்துச்சின்னா
நம்மகிட்டயிருக்குதுல்ல
நாளுமாசம் முந்தி புடிச்சி
அடச்ச வெச்ச
ஊத்து தண்ணி டின்னு...

டிஸ்கி//இந்த போட்டோ மெயிலில் வந்ததுங்கோ
அதபாத்த ஏன் மண்டைக்குள்ள இந்த பாட்டு ஓடிச்சிங்கோ
அதேன் அத இங்கே வந்து  கிறுக்கிப்புட்டோமுங்கோ எப்புடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது