நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்றும் இளமைக்காதல் எங்களுக்குள்

உலகக்காதல்களில் முதல்முறையாக புதுமைக்காதல் எங்கள்காதல்
நான் பிறக்கும் முன்பிலிருந்தே பெண்தான் பிறக்கும் என்றநம்பிக்கையில்
என்மீது காதல்கொண்டு எதிப்பார்த்திருந்து
பிறந்தபின்னும் 10 வருடங்கள் எனக்காக காத்திருந்த காதல்.
காதாலாய் கண்களுக்குள் நுழைந்து கணவனாய் நெஞ்சதில் நிறைந்து
உயிராய் உதிரத்தில் கலந்த உன்னத அன்பு...

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பது
என்னைப்பொருத்தவரையில் நிச்சயமான உண்மை.
பெண்பிறக்கும் முன்பே ஆண்பிறந்து அவனுக்கான துணைவேண்டி காத்திருக்கிறான்..

தங்கைக்கு மகள் பிறந்தாள், அதை தன்மகனுக்கு கட்டனும். இது அண்ணன் தங்கை மற்றும் குடும்பம் எடுத்த முடிவு.
எனக்கான வருகைக்கு நான் பிறக்கும் முன்பிலிருந்தே காத்திருக்க  தொடங்கிய காதலும், குடும்பமும்.
பிறந்துவிட்ட புத்தம் புதியமலரை, அள்ளிக்கொடுக்கப்பட்டது காத்திருந்த பதினோறுவயது பிஞ்சிக் கைகளுக்குள். அன்று கண்களுக்குள் ஒற்றிக்கொண்ட காதல் இன்றுவரை கண்களைவிட்டு அகலாமல். எள்ளளவும் இதயத்தைவிட்டு விலகாமல் எனக்கே எனக்காய்.

மார்ச் 17 அன்று. திருமணநாள் இருமனங்கள் இணையும்நாள்..[அதான் பிறக்குமுன்பே இணைந்துவிட்டதே இருமனமும்]
தெருவையே வளைத்து பந்தல். ஊரும் உறவும் கூட மேளதாளம் முழங்க, மாலைமாற்றி மங்களம். அண்ணன் தங்கை கண்களில் நீர்கோலம். என்றோ முடிவெடுத்தது அன்று உறுதிசெய்யப்பட்டது.
கணவன் மனைவி என்றால் என்ன என்றே புரியாத வயது எனக்கு.
மனதில் நின்றெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் மச்சான் இவர் என்னுடைய மச்சான் அவ்வளவுதான். இன்றளவும் அதையேதான் மச்சான்.

நிறைய கணவன் மனைவியரை பார்த்திருக்கிறேன். ஈகோ ஏதாவது ஒரு சிறுபிரச்சனைக்கூட சண்டை. மனம் ஒத்துப்போகாமல் அடிக்கடி மனஸ்தாபங்கள்.என விட்டுக்கொடுக்கமனசில்லாமல் ஒருவரையொருவருர் சாடுவது என பிரச்சனையை வளர்த்துகொள்வது அப்போது தோன்றியது.

கணவன் மனைவியென்றால்தானே பிரச்சனைவரும். காலமுழுவதும் மச்சான் மச்சியாகவே இருந்துவிடலாம் காதலுடம் இருந்துவிடலாம் என திருமணத்திற்குபின், என்னங்க இங்க வாங்களேன்,,,,,,,,, போங்களேனெல்லாம் கிடையாது. மச்சான் எதற்கெடுத்தாலும் மச்சான் சாகும்வரை மச்சான் இப்படியே கூப்பிடுவதென முடிவெடுத்து அதையே கடைப்பிடித்துவருகிறேன்.[என்ன நீங்களும் இன்றிலிருந்து கணவன் மனைவியெல்லாம் மச்சான் மச்சி ஆகிவிடுகிறோமுன்னு சபதம் எடுப்பதுபோல் தெரிகிறது அப்படியே ஆகட்டும்]

கணவன் மனையென்றாலே பிரச்சனைதான் என்று, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அது அவரவர் வாழும் சூழ்நிலைகள்பொறுத்து. மன நிலையைப்பொறுத்து. விட்டுக்கொடுக்கும் தன்மையைப்பொறுத்து. பிரச்சனைகளும் வரும், வரனும். அப்போதுதான் வாழ்க்கை என்ற வண்டி சுவாரசியமாக ஓடும். இனிப்பே சாப்பிட்டாலும் சரியிருக்காது கசப்பையே சாப்பிட்டாலும் சரியிருக்காது அதனால் இடையிடையே கசப்பான பதார்தங்களையும் சாப்பிட்டால் சுவையுமிருக்கும் உடல் ஆரோக்கியமுமிருக்கும் அதேபோன்றுதான் வாழ்க்கையும் [இவுக பெரியஞானி சொல்ல வந்துட்டாங்க என்ன ஹா ஹா ஹா]

கண் நிறைந்த கணவர் அப்படியென்றால் என்ன? மனம்நிறைந்திருந்தால் கண் ஒளிர்ந்திருக்கும் ஆக மனதை நிறைவடையச்செய்வதால் கண் நிறைவடையும் அப்படித்தானே!!!!!!
ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும். எப்படி நடக்கவேண்டும் என்ற உதாரணம் மச்சானிடம் நிறைய உண்டு. விட்டுக்கொடுக்கும் தன்மை.[ஆகா என்னிடமும் உண்டுங்கப்பா, ஆனாகொஞ்சம் குறைவு] பெண்ணுக்கும்
மனசு உண்டு அதில் ஆசை. எண்ணம். என அனைத்தும் உண்டு அனைத்தையும் நிறைவேற்றமுடியாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவு முயற்ச்சி செய்யனும் என நல்ல எண்ணங்கள் நிறைய உண்டு.
அப்புறம் எங்க மச்சானுக்கு சூப்பராக சமைக்கவும் தெரியும். சில ஆண்கள்போல் இதை நீதான் செய்யனும். நீ இதைசெய் அதை நான் செய்கிறேன் அப்படியெல்லாம் இல்லவே இல்லை

ஆண்பாதி பெண்பாதி இருவருமே சரிபாதி என்பதைபோல்.ஆபீஸ்போய்விட்டுவந்து எங்களுக்காக எங்கள் வேலைகளையும் செய்துதருவதில் மச்சானுக்கு ஒரு மனதிருப்தி. மொத்தத்தில் மச்சான் மிகவும் ஒரு நல்லகுணமுள்ள மனமுள்ளமனிதர்.
இவரைபோலவே [அச்சோ இவரையே அல்ல ஆங் அஸ்கு புஸ்கு] அனைத்து பெண்களுக்கும் கணவர்கிடைத்தால் கிடைத்திருந்தால் சந்தோஷமே!
என் எழுத்துக்களுக்கும் சரி. என் எண்ணங்களுக்கும்சரி. என்றுமே எதற்குமே எவ்விததடையும் சொல்லியதில்லை. தடையில்லையே என்பதற்காக நானும் அதை தவறாக பயன்படுத்தியதுமில்லை.

\சிறிய சம்மவம். துபையில் ஒரு பெரியஹோட்டலில் ஃபேம்லி
பார்ட்டி மச்சானின் டிப்பாட்மெண்ட் வைத்தது. அதில் கலந்துகொண்ட அத்தனைபேரும் வசதியிலும் சரி பொருப்புகளிலும் சரி பெரும் பெரும் மனிதர்கள் முக்கியமாக அரபியர்கள். அக்கூட்டத்தில் நாங்களும் எங்களோடு சில இந்தியர்களும்.


எல்லாரும் போய் போய் தானாகவே பெரியவர்களான அவர்களிடன் கைகொடுப்பதும் தன்னை அறிமுகப்படுத்துவதுமாக இருக்கும்போது மச்சான்மட்டும் எங்களோடவே இருந்தார்கள். மனதுக்குள் நினைத்தேன் ஏன் இவர்கள்மட்டும் போகமால் இருக்காங்க என்று, சிறிது நேரத்தில் யார் அங்கே ரொம்ப பெரியவராக கருத்தப்பட்டதோ அவர்களே எங்களருகில்வந்து மச்சானின் முதுகைதட்டிக்கொடுத்து கைகளைப்பிடித்துக்கொண்டு [ஃபாரூக் ஈஸ் வெரி வெரி ஜென்டில்மேன் அன் நைஸ்மேன்] என இங்லீஸில் புகழ்ந்து தள்ளிவிட்டார். அடுத்தடுத்து மூன்று நான்குபேர்கள் வந்து மச்சானிடம் பேசியவிட்டு எங்களிடமும் இவர்மிகவும் நல்லவர் சிறந்தவர் வேலையில் மிகுந்த கெட்டிக்காரார்..என பாராட்டியபோது எப்படியிருந்திருக்கும் ஒரு மனைவியான எனக்கும். குழந்தைகளான என் பிள்ளைக்கும்.சந்தோஷம் தத்தளித்தது தன்கணவரை பிறர் அதுவும் பெரிய பதவியிலிருக்கும் பெரியப்பெரியமனிதர்களே பாராட்டக்கேட்கும்போது ஆனந்தத்தில் திளைத்தோம். நிறைய பரிசுகளும் வழங்கப்பட வாங்கிக்கொண்டு மனம் நிறைந்து வீடுவந்தோம்./

மனைவியென்பவள் தன்கணவருக்கு சிறந்த மனைவியாக. சேவையில்தாயாக. சிலநேரம் தந்தையாக. நல்ல தோழியாக. பழக்கத்தில் குழந்தையாக. என சகலமுமாக வாழவேண்டும் என நினைக்கிறேன், பலநேரம் நடக்கிறேன். சில நேரம் நானே குழந்தையாக மாறிவிடுகிறேன் பிடிவாதத்தில்..சிறு சிறு சண்டைகள்கூட வேண்டுமென்றே போட்டுக்கொள்வோம் அதிலும் நானிருக்கேனா அப்பாடி சும்மாவாச்சிக்கும் மச்சானை வம்புக்கு இழுத்து தொனதொனவென பேசுவேன் பாவம் மச்சான் இல்லல்லலல.

இதோ இன்றோடு பதினெட்டைக்கடந்து, பத்தொன்பதாம் ஆண்டை வெற்றிக்கரமாக தொடங்கப்போகிறோம். அழகிய அன்பான இரு குழந்தைகளோடும். கனிவான குடும்பத்தோடும்...
வாழும் காலம்வரை மனநிம்மதி, மனசந்தோஷம் மனதிருப்தி. இருந்தால்போதும் எங்களுக்கு.
நிச்சயம் எங்களுக்குள் அது என்றும் நிலைத்திருக்கும்.
இருக்கும்படி செய்துகொள்வோம் என்ற நம்பிக்கையில். மீண்டும் இருவரின் கைகளும் இருவர் கைகளுக்குள்ளும். இளமைக்காதல் இதயத்துக்குள்ளும்.


பச்சிளம் வயது பவளம்
பாசம் கொண்டது பருவம்
நிச்சயம் செய்தது குடும்பம்
நினைத்தது நடந்தது குதூகலம்

மாலைப்பொழுதின் வேளை
மாலை சுமந்தாள் மங்கை
மச்சானென்ற கணவன்
மனத்துக்குள் நிறைந்து
கலந்தான் உயிரில்

அன்றுமுதல் இன்றுவரை
உள்ளம் நோகும்படி
ஒருவார்த்தை சொன்னதில்லை
ஊரார் பேசும்படி
ஒருபோதும் நடந்ததில்லை

வேதனைகள் வந்தபோதும்
வருத்தப்பட வைத்ததில்லை
கடிந்து பேசினாலும்
கோபங்கள் கொண்டதில்லை

அணைத்துப்பேசும்போது
அன்னையானான்
அதட்டிப்பேசும்போது
அண்ணனான்

தட்டிக்கொடுக்குபோது
தந்தையானான்
கொ[கு]ட்டிப்பேசும்போது
தங்கையானான்

கொஞ்சி நடிக்கும்போது
குழந்தையானான்
தோளில் சாயும்போது
தோழியானான்

மார்பில் சாயும்போது
மச்சான் ஆனான்

ஆக மொத்ததில் எனக்கு
அனைத்துமானான்
ஆதலால்
மொத்தமாய் நான்
அவனுக்கே அவனுக்கானேன்...

இதோபோன்றதொரு வாழ்க்கையை அமைத்துத்தந்த என் இறைவனுக்கே புகழனைத்தும். அதோடு என்தாய் மாமன் அவர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன் கண்ணீர் வழிய [தற்போது அவர்கள் உயிரோடு இல்லை] என் தாய் தந்தைக்கும் என் தாய்மாமன் அவர்களுக்குக்காவும் நான் என்றென்றும் துஆசெய்யக்கடமைப்பட்டவள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது