நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இது நமக்கு புதுசு.[எனக்குள் நான்]


என்ன கவிதையைக் காணோமேன்னு பாக்குறீகளா. இதோ இந்த பொட்டிய கிளிக் பண்ணுங்க வரும்.
எல்லாரும் புதுசு புதுசா யோசிக்கிறார்களே! நீமட்டும் ஏண்டி மல்லி மக்காவேயிருக்கேன்னு மண்டைக்குள் ஒரே சலசலப்பு.
 நாமெயென்ன பட்டப்படிப்பா படிச்சிகிறோம். ஏதோ அறிஞ்சதவச்சி இப்படி சும்மா பிலிமுகாட்டிக்கீனுகீறோம்.
நமெக்கென்ன தெரியும், இருந்தாலும் முயற்சிப்போமேன்னுதான்

இத செய்தேனுங்க!

நல்லாயிருக்குதான்னு கொஞ்சம் கிளிக் செய்துபார்த்து கருத்துசொல்லுங்க மக்கா. கிளிக் கிய பிறகு நல்லாயின்னா என்ன செய்வதாம். ஆங் அதை சொல்லிப்புடுங்க மக்கா. அப்பதானே அடுத்த கட்டத்துக்கு இல்லயில்ல இந்தகட்டத்தையே சரிசெய்யலாமுல்ல.

என்ன அடுத்தகட்டம் போகலாமா? இல்லை இதையே சரிசெய்யனுமா?இல்லை வழக்கம்போலதான் எழுதனுமா? எதுன்னாலும் சொல்லுங்கப்பு..

அப்பால இதான் அதுக்குள்ள இருகிற கவிதைகள்.

உன் உச்சி முகர்கையில்
என் நாசியின் வழியே
உட்செல்லும் உன்சுவாசம்
எனக்குளிருக்கும்
உயிரை குளிரச் செய்கிறது
உன் ஸ்பரிசத்தால்.

மலரைவிட இந்த
மழலையழகு-பூத்துசிரிக்கும்
மழலை கண்டு

பூரித்து விரிகிறது
தன்னிதழசைத்து
மெல்லிய புன்னகையால்.

தேனெடுக்க வண்டாய்
தன் காதலன் 
சுற்றுவது கண்டு
தேன்மொழியால் தேன் தடவி
தன்னிதழை வைத்தாள்

சொக்கத்தங்கம் இதழ்களிலே
சொட்டுகின்ற தேனைக்கண்டு
சுற்றிவரும் வண்டினமாய்

சொக்கிபோய் நின்றான்

நீந்திச் செல்லும்
நிலவொளியே வா வா
உன்னொளியால்
என்னுறக்கம் களைத்துவிட்டு

நீ மட்டும் நிம்மதியாய்
நீலவானில் நீந்துவது சரியா
உன்னொளிக்குள்
ஒளிந்துவிளையாடவேண்டும்
 வா வா

அடியே!
அழகிய மலரே
நீ, நீரில்
ஆடிபாடுவது கண்டு
எனக்குள் காய்ச்சலடிக்கிறது

நீருக்குள் நானும் வந்துவிடவா
நீயும் நானும் சேர்ந்தாடி
என் காய்ச்சல் தனிக்க.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது