பெயரற்ற
குயிலொன்றின்
குரலை இரவல்வாங்கி
என்னிதய செய்தியொன்றை
இரங்கலாக
உன்கல்லிதய
செவிகளுக்கும்....
மயானதேசத்து
மலர்களை கொய்து
என்மன ரணங்களை
சாராக
உன்துரோகநாவின் நரம்புகளுக்கும்.....
அகோர
எரிப்பிளம்பின்
அனலெடுத்து
காற்றாக
அமைதிகுலைத்த
உன் தீயெண்ணங்களுக்கும்.....
பாடம்புகட்ட
அனுப்பிவைத்துள்ளேன்
உணர்வறுத்து உறவற்றப்போன
உன்னையது
ஒன்றும் செய்யாதெனத்
தெரிந்தும்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.