நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பார்வையற்றோரின் புலம்பல்



      என்னைப்போலவே
          என் தெருவிளக்கும்

     எனக்கு கண்ணிருந்தும் ஒளியில்லை
                                            அதற்கு,,,
                      விளக்கிருந்தும் ஒளியில்லை..





சூக்களே!

உங்களுக்கும் அரசாளும்
எண்ணம் வந்துவிட்டதோ

அடிக்கடி அரியாசனத்தை
          நோக்கியே போகிறீர்களே...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வசமானது மனது



சின்னகுயிலின் கானம்
செவியை சிறைப்படுத்தியதுபோல்

சில்லென்றகாற்று செந்தூரமேனியை
சிலிர்ப்பாய் தழுவியதுபோல்

தேன்துளிகள் தெளித்து செவ்வகஇதழை
நனைத்ததுபோல்

சிறைபிடித்த கைகளுக்குள்
சிக்கிகொண்ட சின்னக்கிளியாய்

மயக்கம்தந்த விழிகளுக்குள்
மண்டியிட்டு கிடந்த வண்ணமயிலாய்

உயிர் பூ உருகுது உனக்குள் மிளிர
ஒருநாளும் மறவேன் என்னுயிரும் கரைய

கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்

வருடிவருடி வார்த்தையால் நீயும்வசபடுத்த
வசம்புக்குழைத்து தேனில் தந்ததுபோல்
வசமாய் காதலும் உன்வசமாகிப்போனது...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது