நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓய்வு கேட்க்கும் கனவு.




கனவுக்கும் உணர்வுண்டு
கண்களைவிட்டுச் செல்லாதே!

காண்பதெல்லாம் கனவென்று
கண்களும் சொல்லாதே!

விழிகள் விழித்திருக்க
வெருங்கனவு காணாதே!

வெளிச்சத்தை விட்டு விட்டு
வேறொரு இருளுக்குள் போகாதே!

கனவுகள் மெய்படும்வரை
காட்சிகளும் நகராதே!

கனவுகள் தேயும்வரை
கருவிழியும் சடைக்காதே!

காலங்கள் தீரும்வரை
கனவுகள் ஓயாதே!

கனவுகளும் ஓயாதே
கல்லறைக்கு போகும்வரை.........

இக்கவிதை முதுகுளத்தூர்.காமில் வெளிவந்துள்ளது..
நன்றி முதுகுளத்தூர்.காம்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது