உணர்வுக்கவிதைகள்= லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணர்வுக்கவிதைகள்= லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் ஒரு குரங்கு
நிலையில்லா உலகில்
கிளையில்லா மரத்தைத்தேடி
இளைப்பாற நினைக்கும் மனம்
தட்டுத் தடுமாறி
தன்நிலை திசைமாறி-சிலநேரம்
தற்கொலையிலும் போய் நிற்கும்
நினைவுகளை சுமந்தபடி
நீரோடையில் நீச்சலடிக்கும்-
நினைவிழக்கும் வேளை வந்தால்
நீச்சல் தெரிந்திருந்தும்
நீருக்குள் மூழ்கியிறக்கும்
எவரும் தொடா எல்லயைத் தொட
எத்தனித்து -
எட்டுத்திக்கும் தான் பறக்கும்
எதுவும் முடியாது போக
ஏறிய இடத்திலேயே வீழ்ந்திருக்கும்
திசைகள் பல
தேடித் தேடி திரிந்து வரும்
தேடியது கிடைக்க வில்லையெனில்
திகைத்துபோய் சோர்ந்துவிடும்
தன்னாசையைப் போக்க
தாவித் தாவி தான் குதிக்கும்
தடுமாற்றம் கண்டு விட்டால்
தடம்மாறிப் போய்விடும்
குரங்கைவிட படுவேகம்
மனித மனம் - குரங்கோடு
மனிதனைச் இணைத்துச் சொன்னால்
கடுஞ்சினம் கொள்ளும்
குரங்கின் இனம்....
டிஸ்கி// இது சிங்கபூர்ல நடக்கும் கவியரங்கத்திற்காக எழுதியதுங்கோ. என்ன ஒன்னு இத நாம அங்கேபோய் படிக்கனுமாம்.[அடியாத்தி நமக்கு அங்கெல்லாம் எப்புடி இப்ப போகமுடியும்] இநத தலைப்ப குடுத்து எழுதச்சொல்லியிருந்தாங்கோ ஒருதளத்தில்.. அதபார்ததும் நம்ம மூளை சும்மா இருக்குமா! அதான், மூளையை முடுகிவிட ஏதோ வந்தது கவிதையின்னு. இது எப்புடிக்கீதுன்னு நீங்க சொன்னாத்தானே தெரியும்.
அதுசரி ஏன் எதுகெடுத்தாலும் குரங்கு. நாய். என பாவம் அதுகளையேன் மனிதர்களோடு ஒப்பிடுறாங்க அதுகும் நமக்கும் நிறைய கனெக்ஷன்கீதோ..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
ஒளியற்ற விழி!
நன்றி கூகிள்
கலர்கனவுகளை சுமந்துகானலைக்கூட
காணமுடியா காரிருள் சூழ்ந்த
கருவிழிகள்
வெளிச்சமென்றால் என்னவென்று
விபரமறியா கேள்விக்கேட்டு
வெளிறிக் கிடக்கும்
வெள்ளைவிழிகள்
வண்ணத்தை பார்க்கிறதா?
வடிவத்தை பார்க்கிறதா?
விளங்காமல்
விழிக்கும் இருவிழிகள்
வாழ்கையை பார்க்கமுடியா -தன்
வதனத்தை பார்க்கமுடியா
வேதனையில்
வேகிறது மனச்செல்கள்
விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்டும்
விதிவிலக்கானதே விடியல்
காலங்கள் கடக்கிறது
கறுமையின் வெறுமையில்
காற்றோடு கேட்கிறது
கண்ணொளியின் உணர்தல்
கலிகால யுகத்தில்
கண்ணிருந்தும்
குணத்தளவில்
குருடனாயிப்பதைவிட
குருடனாயிருந்து
காலத்தை கழிப்பதே மேலென
கருதுக்கும் சொன்னாலும்
கலங்குகிறது நெஞ்சம்
மனம் கல்லானவருக்கெல்லாம்
மங்கள ஒளியிருக்கும்போது
மென்மையான மனகொண்டோருக்கு
மங்கிய ஒளிகூட முன்னுக்குவர
மறுக்கிறதே யென!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
நாயா? நானா?
அம்மா அம்மா என்னப்பாரு
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!
அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!
பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!
பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!
நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே
பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?
உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!
அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...
டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..
அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..
இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை
ஏ.. நிலவே
பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.
துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.
ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!
அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!
பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!
பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!
நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே
பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?
உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!
அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...
டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..
அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..
இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை
ஏ.. நிலவே
பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.
துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.
ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
விசா பறவைகள்!!
விழிநிறைய கனவுகளோடு
விமானமேறிய விசாபறவைகள்
விபத்துக்குள்ளாவது அறியாது
வானத்தில் சென்றன
எத்தனை எத்தனை கனவுகள்
எத்தனை எத்தனை நினைவுகள்
எண்ணங்களுக்கு
சிறகடித்துப் பறந்திருக்கும்
எல்லாம் முடிந்திருக்கும்
விமானம்
வெடித்து சிதறி-வீசி
எரியப்பட்டபோது
நாடுவிட்டு நாடுவந்து
நாடோடிகளாய்
நாமிருக்கும் வேளையில்
நாளை நடப்பதை நாமறியோம்
வயிறுப் பிழைப்புக்கும்
வசதிக்கும்
வழிபோக்கர்களாய் வெளிநாடு
வந்திருக்கும் நாம்
வீடு திரும்பும்வரை
வியர்வை வழிய உழைத்து
விழிகள் வலிக்க அழுது
விடியலிலும் தொழுது
இப்படி
எதிர்பாராமல் வரும்
இன்னலையும் இரங்கல்ளையும்
எதிர்கொள்ளமுடியாமல் தவித்து
விசா பறவைகளாய்
வீட்டைவிட்டு வெளியேறி
வேலை தேடிவரும்
மனிதப் பறவையாய்
மர நிழலென்னும்
தன்கூடுக்குள் திரும்பும்வரை
மனதிலும் நிம்மதியில்லாமல்
தன்னுள்ளதிலும் உணர்வில்லாமல்
பெற்றது பாதி
பெறாதது மீதியென
புறப்பட்டு போகும் வழியில்
பறந்துவரும் விமானம்
விதிவசத்தால் விபத்துக்குள்ளாகி
விகாரமாய் வீசியெறிப்படும்போது
விதவிதமாய் கண்ட கனவுகள்
விழிநிறைந்த விஸ்வரூப நினைவுகள்
எல்லாம்,,,, எல்லாம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணெதிரே களைந்து
எரியப்பட்டு உயிர்களைனத்தும்
காற்றோடு கலக்கப்படுகின்றன
விசயம் அறிந்ததும்
வீறிட்டு அழுது
விம்மி வெடிக்கிறது
உள்ளம்
மரணத்தை தழுவியவர்கள்
முகமறியாதவர்கள் என்றபோதும்
மனதுக்குள் வந்து சென்றதுபோல்
நினைவைத் தருகிறது சோகம்
எதிர்பார்ப்புகளோடு வந்தவர்கள்
எதிர்பாராமல் இயற்கை
எய்திவிட்டார்கள் -இருகரம்
ஏந்தி
இறைவனிடம்
இறைஞ்சி வேண்டிடுவோம்
இறந்தவர்களின் ஆன்மாவை
இரச்சிக்கச்சொல்லி.....
//மங்களூர் விமானவிபத்து இன்று செய்திபார்த்தேன்.
மனம் தாங்கமுடியவில்லை
இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறுவழியில்லை.
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நாம்படும்பாடு.
சிலநேரம் சுகமோடு சிலநேரம் சோகத்தோடு.
இறைவா!
உன்னாலே உயிர்பெற்றோம்.
உன்னிடமே திரும்பவருவோம்.
எங்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
ஆமீன் ஆமீன் ஆமீன்..//
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
தாயும் சேயும்
சங்கடங்கள் சருகாய் சடசடத்தபோது
சற்றேசாய்ந்தது தலை தாய்மடியைத்தேடி
சகலமும் சலசலத்தது கண்ணீராய் மாறி..
அள்ளியணைத்து முகர்ந்தபோது
அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
கோடைகுளிருமா -வாடை வருடுமா
வாழ்வைத்தேடி வயல்வரப்புகளை
விற்றுவிட்டுவந்த நாங்கள்
வறுமையைபோக்க வாலிபத்தை
தொலைத்து வீடுதிரும்பும்போது
வயோதிகத்தையும் வியாதியையும்
கொண்டுசெல்லும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
கோடைவெயில் கொடூரமாய்
கொழுந்துவிட்டு எறிய –அதன்
கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி
குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக
கட்டிடம் கட்டும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கானல்நீர் கரைபுரண்டு ஓட
உச்சிமுதல் பாதம்வரை
உதிரம் வியர்வைகளாய் நனைய
சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி
களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
அதிகாலை குளிரில்
நாடியெல்லாம் நடுநடுங்கி
நரம்புகள் விறைத்துக்கொள்ள
சாலைகளை சுத்தப்படுத்தி
அடுத்தவர்களின் அசிங்கங்களை
அப்புறப்படுத்தும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
வாடைக்காற்று வதைப்படுத்த
வாதநோய் வருத்தப்படுத்த
எங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா
[குப்பை] தொட்டிக்குள் கைவிட்டு
பிளாஸ்டிக் தனியே, தகரடின் தனியே,
என பிரித்தெடுக்கும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
பாலைவனமணலிலே!
புழுதிபறக்கும் அனலிலும்
உறையவைக்கும் குளிரிலும்
ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
நாங்களும் காத்திருக்கிறோம்,,
எதிர்பார்த்திருக்கிறோம்!!!
கோடை என்றாவது குளிருமென்றும்
வாடை என்றாவது வருடுமென்றும்...
[முதன்முதலாக நான் மேடையில் வாசித்தை முதல் கவிதை! அமீரகத்தில் வெளியாகும் தமிழ்த்தேர் இதழில் கோடையும் வாடையும் என்றதலைப்பிற்காக தொழிலாளிகளின் மனஉணர்வுகளை சொல்லும் விதமாக நான் எழுதிய வரிகள்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
விற்றுவிட்டுவந்த நாங்கள்
வறுமையைபோக்க வாலிபத்தை
தொலைத்து வீடுதிரும்பும்போது
வயோதிகத்தையும் வியாதியையும்
கொண்டுசெல்லும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
கோடைவெயில் கொடூரமாய்
கொழுந்துவிட்டு எறிய –அதன்
கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி
குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக
கட்டிடம் கட்டும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கானல்நீர் கரைபுரண்டு ஓட
உச்சிமுதல் பாதம்வரை
உதிரம் வியர்வைகளாய் நனைய
சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி
களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
அதிகாலை குளிரில்
நாடியெல்லாம் நடுநடுங்கி
நரம்புகள் விறைத்துக்கொள்ள
சாலைகளை சுத்தப்படுத்தி
அடுத்தவர்களின் அசிங்கங்களை
அப்புறப்படுத்தும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
வாடைக்காற்று வதைப்படுத்த
வாதநோய் வருத்தப்படுத்த
எங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா
[குப்பை] தொட்டிக்குள் கைவிட்டு
பிளாஸ்டிக் தனியே, தகரடின் தனியே,
என பிரித்தெடுக்கும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
பாலைவனமணலிலே!
புழுதிபறக்கும் அனலிலும்
உறையவைக்கும் குளிரிலும்
ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!
நாங்களும் காத்திருக்கிறோம்,,
எதிர்பார்த்திருக்கிறோம்!!!
கோடை என்றாவது குளிருமென்றும்
வாடை என்றாவது வருடுமென்றும்...
[முதன்முதலாக நான் மேடையில் வாசித்தை முதல் கவிதை! அமீரகத்தில் வெளியாகும் தமிழ்த்தேர் இதழில் கோடையும் வாடையும் என்றதலைப்பிற்காக தொழிலாளிகளின் மனஉணர்வுகளை சொல்லும் விதமாக நான் எழுதிய வரிகள்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இப்படியும் சில
வெட்டிக்கொண்டே
இருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள்..
மடித்துக்கிடந்த
எச்சில் இலையில்
மிச்சம் மீதீ தேடிய
பிஞ்சுவிரல்கள்..
சாக்கடைநாத்தத்தில்
முக்குளிப்பதால்
சந்ததிகளின் தேகத்தில்
சந்தனவாசம்..
இடையோரத்தில் குறுகுறுத்தது
முதலாளியின் கண்
இழுத்துமூடிய முந்தானையில்
இருமழழையின்முகம்..
ஆறடிஉயரம் அந்தரத்தில்
தொங்கியது
அரைசாண் வயிற்றுக்கு
ஆகாரம் வேண்டி..
விடியவிடிய கத்தியது
காவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..
தன்வம்சத்தை
விருத்தியாக்கிவிட்டு
தன்னை சாய்த்துக்கொள்ளும்
வாழை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
எதுவும் நடக்கலாம்
அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்
காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்
அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்
பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்
அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்
அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி
அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி
அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்
சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்
எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி
எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை
இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
சமையலறையில்
காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்
அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்
பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்
அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்
அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி
அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி
அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்
சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்
எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி
எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை
இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
எதைத்தொலைத்தோம்
எதையோ தினம் தினம் தேடுகிறோம்
அப்படி எதை தொலைத்தோம்?
நித்தம் நித்தம் கனவில் வருவதை
நிஜங்களாக்க துடிக்கிறோம்.
கண்ணுக்குள் வலம்வந்து
நெஞ்சுக்குள் குடிகொண்ட
குடும்பத்தை விட்டு விட்டு-
காகிதபணத்திற்காக கடல்கடந்து
கானகம் வந்தோம்
நாடுவிட்டு நாடுவந்தும்-நாம்
நினைத்தது நடக்கலையே! என
நம்மை நாமே தேற்றித்தேற்றி நம்
கவலைகளை மறக்கிறோம்
பாலைவனம் வந்தபின்னே நம்
குடும்பம் சோலைவனம் ஆனபோதும் நாம்
இழந்தது எல்லாம் திரும்பிடுமா?
நம் இளமை மீண்டும் வந்திடுமா? என
ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும்
மனதிடம் ஆறுதலும் சொல்லுகிறோம்
அமைதியை தேடித்தேடி தினம்
ஆளாய்ப்பறக்கிறோம் அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்
எதையோ தொலைந்ததாய் நினைத்து நினைத்து
நித்தம் நித்தம் தேடுகிறோம் ஆனால்
எதைத்தொலைத்தோம் என்றுதான்
“விடை தேடுகிறோம்”
[இந்த கவிதை /எதை தேடுகிறோம்/ என்ற தலைப்பிற்காக அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதியது]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அப்படி எதை தொலைத்தோம்?
நித்தம் நித்தம் கனவில் வருவதை
நிஜங்களாக்க துடிக்கிறோம்.
கண்ணுக்குள் வலம்வந்து
நெஞ்சுக்குள் குடிகொண்ட
குடும்பத்தை விட்டு விட்டு-
காகிதபணத்திற்காக கடல்கடந்து
கானகம் வந்தோம்
நாடுவிட்டு நாடுவந்தும்-நாம்
நினைத்தது நடக்கலையே! என
நம்மை நாமே தேற்றித்தேற்றி நம்
கவலைகளை மறக்கிறோம்
பாலைவனம் வந்தபின்னே நம்
குடும்பம் சோலைவனம் ஆனபோதும் நாம்
இழந்தது எல்லாம் திரும்பிடுமா?
நம் இளமை மீண்டும் வந்திடுமா? என
ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும்
மனதிடம் ஆறுதலும் சொல்லுகிறோம்
அமைதியை தேடித்தேடி தினம்
ஆளாய்ப்பறக்கிறோம் அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்
எதையோ தொலைந்ததாய் நினைத்து நினைத்து
நித்தம் நித்தம் தேடுகிறோம் ஆனால்
எதைத்தொலைத்தோம் என்றுதான்
“விடை தேடுகிறோம்”
[இந்த கவிதை /எதை தேடுகிறோம்/ என்ற தலைப்பிற்காக அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதியது]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
ஒரே தவிப்பு
மஞ்சத்தின் கட்டிலில் கிடந்துகொண்டு
வெற்றுமடியையே உற்றுப்பார்த்தபடி
மனம்குமுறி அழுதாள் மங்கை
மழழை வரம் கேட்டு
குப்பைத்தொட்டியில் கூளங்களுக்குநடுவில்
குட்டிக் கைகால்களை உதைத்தபடி
கூக்குரலிட்டுஅழுதது மழழை
அன்னை வரம் கேட்டு......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
வெற்றுமடியையே உற்றுப்பார்த்தபடி
மனம்குமுறி அழுதாள் மங்கை
மழழை வரம் கேட்டு
குப்பைத்தொட்டியில் கூளங்களுக்குநடுவில்
குட்டிக் கைகால்களை உதைத்தபடி
கூக்குரலிட்டுஅழுதது மழழை
அன்னை வரம் கேட்டு......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
என் கண்ணே
கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால்
என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்
ஸ்கேன் என்னும்
கருவியோடு
என் வயிற்றுக்குள்
நடக்குது போராட்டம்
பார்க்க
என்உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு
உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்
அன்னை
அழுது புலம்புகிறேனே
அமுதே
என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா
புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே
என் தவிப்பு
உனக்கு புரியலையா
பூமியைப்பார்க்க
உனக்கு விருப்பமில்லையா
இல்லை
இந்த அப்-பாவித்தாயை
பார்க்கபிடிக்கவில்லையா
மருவித்தவிக்கின்றேன்
மன்றாடிதுடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக உருகித்தான்போகின்றேன்
பதுமையே பதுமையே
எனை காணவருவாயா
பட்டுப்பூவினமே
என்னை
பதறவைப்பாயா
காத்திருக்கிறேன்
கண்மணியே உயிருக்குள்
உருகியபடி
வசந்தமான உனைக்காண
என்வயிற்றை வருடியபடி
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மைதான்
முழுமையின் அடையாளம்
அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும்வரம்..
[ஏழு வருடங்களுக்கு முன் மனம்பட்டபாடு
அதை கிறுக்கலாய் வடித்தேன் என் எழுத்துக்களோடு]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
பரிசு

தேடி தேடி பெற்ற சுகத்துக்கு
தனக்குத்தானே தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்
இறைவன் வகுத்த நியதியை மீறி
திகட்டாமல் தேடிய இன்பத்திற்கு
இறைவைன் தந்த பரிசு
திக்குமுக்காடவைக்கும் வியாதி

மாற்றான் தோட்டத்து மல்லிகையில்
தேனெடுக்க சென்ற வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
இந்த எய்ட்ஸ்
தவறென்று தெரிந்தும் தத்தித்தாவி
தவறிப்போகும் மனங்களே
உயிருள்ளவரை உள்ளச்சத்துடன் வாழுங்களேன்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இருளும்!!!ஒளியும்

எதற்கு
இறைவனின் அருளை- நாம்
பெறவேண்டுமே
அதற்கு
மனிதா!
உன் கருவறை தொடங்கி
உன் கல்லறை வரையில்
உன்னை இருளென்னும்
சோதனையைக்கொண்டு
சோதிப்பதே இறைவனின் வேலை!
அதை
தன்னம்பிக்கையென்னும் மனதில்
இறைநம்பிக்கையென்னும்
உறுதியைக்கொண்டு
வெற்றிபெறவே வைத்துள்ளான்
மனிதனுக்கு மூளை!
வெளிச்சத்தில்
அமர்ந்திருக்கும் மனிதனுக்கு
திடீரென்று
இருட்டு சூழ்ந்துகொள்கிறது-உடனே
மனதில் பயம் புகுந்துகொல்[ள்]கிறது
உள்ளத்தில் உதறல் எடுத்தபோதும்
இருட்டிய இருளுக்குள் அமர்ந்து
அதை உற்றுப்பார் உற்றுப்பார்-
இன்னும் உற்றுப்பார்
அப்போது தோன்றும் ஒரு சிறு ஒளி
அதுதான் உன் ”மனஉறுதி”
மனிதனாய் பிறந்து
மனசாட்சியோடு வாழ்வதற்கும்
மனிதனாய் பிறந்ததற்காக
மனிதத்துடன் இறப்பதற்கும்
மனிதனுக்கு நிச்சயம் வேண்டும்
மனஉறுதி!
அந்த வெண்நிலவை
சற்று கவனித்துப்பார்
அதிலும்கூட
இருளின் கலவை இருக்கும்
தனக்குள்
இருளுள்ளதே என்பதற்காக
ஒளிராமல் இருக்கிறதா
இல்லையே!
வாழ்க்கை முழுவதும்
சோதனையில்லாமல்
வாழ்ந்தவர் எவருமில்லை
அப்படி இருந்தால்
அவரிடம் கேட்டுப்பார்
ஏதோ ஒருவகையில்
இருளென்னும் சோதனைக்குள்
இன்னுமும்
ஏதோஒரு வெளிச்சமென்னும்
வெற்றியை
தேடிக்கொண்டிருப்பதை
விவரிப்பார்
இருளைவிட்டு உடனடியாக
ஒளியை கண்டால்
உன் கண்கள் உடனே மூடிக்கொண்டு
இருளைத்தேடும்
அதை உணர்ந்தபின்னே
ஒளியையை நாடும்
இருளில்லாமல் ஒளியில்லை
சோதனையில்லாமல்
வாழ்க்கையில்லை
ஆதலால்
சோதனையிலும்
வெற்றிபெற்றுவாழ்க்கை
வாழ்ந்திட
இருளை உணர்ந்து
ஒளியை பெற்றிட
இருளிலும் ஒளியிலும்
இறைவனை நினைத்திடு
ஈருலகிலும் மகத்தான
வாழ்வினை பெற்றிடு...
இக்கவிதை அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் மாதஇதழில் வெளிவந்த
என்கவிதை
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
உணர்வோடு உறவாடு

இது வெரும் வார்த்தகளுக்காக மட்டுமல்ல
நாம்வாழும் வாழ்க்கைக்காக,,வும்
உதிரம்தந்து உழைப்பும்தந்து
உயிரைக்கூட தரதுணிந்த
உறவுகளை உதறிவிட்டு
ஒதுங்கி வாழ்வதற்காக
பிரிவை தேர்ந்தெடுத்து
தனிமையை தேடிப்போகும்
உறவுகளே!
உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை
பிரிவுகள் கொடுக்கிறதா?
உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள்,
பிரிவுகளில் கிடைக்கிறதா?
உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை
பிரிவுகளில்தான் உண்டாகிறதா?
நாமென்ன வானதில்
விளிம்பிலிருந்தா குதித்தோம்
இல்லையே
தந்தையென்னும்
உறவின் உதிரத்தில் உதித்து
தாயென்னும்
உறவின் கருவில் ஜனித்தவர்கள்தானே!
நம்கூடபிறந்தவர்களிடம்கூட எதற்கு பிணக்கு
நம்உறவுகளோடு ஏன் வம்பு வழக்கு
பிறப்பென்னும் பிரிவுமட்டும்போதுமே
கர்பத்திலிருந்து வெளியேவந்த நமக்கு,
விட்டுகொடுத்துப்போவதென்பது
அற்றுபோய்வருவதால்
உறவுகளெல்லாம்
வெட்டிக்கொண்டேபோகிறது
உணர்ச்சிவசப்பட்டு
உறவுகளை பிரிந்துவிடுவதால்,
உடல் உணர்வுகளை
இழந்துநிற்கும் நிலையில்
உள்ளம் உறவுகளை
தேடிக்கொண்டேஇருக்கிறது.
உயிரோட்டமுள்ள உறவுகளை
உதாசிணப்படுத்திவிட்டு
உயிரற்ற காகிதபணத்தின்
உறவைத்தேடி ஓடுகிறது மனிதஇனம்
ஓ உறவே;
உன் உயிர் உன்னைவிட்டு
விலகிவிடும்போது
நீ ஓடித்ஓடி தேடிய உயிரற்ற காசால்
கலங்கத்தான்முடியுமா--இல்லை”
ஒருசொட்டுகண்ணீர் விடதான்முடியுமா?
உறவுகள் சேர்ந்திருப்பின்
சிறுசிறு சங்கடங்கள் வருவது சகஜம்
உறவுகளை பிரிந்திருப்பின்
மனகஷ்டங்கள் வருவது சுலபம்
சங்கடங்களென்பது
கலைந்துபோகும் மேகம்-ஆனால்
மனகஷ்டங்களென்பது ஆராத்துயரம்.
உலன்றுபோனவனுக்கு நல்லுறவுகளிருப்பின்
உயிர்பித்து எழுவான் –அதுவே
பிரிந்துபோனவனுக்கு நல்லுறவுகள் இல்லையேல்
பரிதவித்துப்போவான்.
உறவுகளின் உன்னதம்
பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை
உறவுகளைஇழந்திருக்கும்போது புரியும்
உறவுகளை பிரிந்துவாழும்
வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிருப்தி
உறவுகளை இணைத்து-இணைந்து
வாழ்வதே மனதுக்கு திருப்தி.
உறவுகள் பலவிதம்- அதைவிட
பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள்
விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-
ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள்
வெளியாகும் மனிதப்பிறவிகளே!
/ஆகவே/
உறவுகளோடு இணங்கி உறவாடு
பிரி”வினை” என்னும்
வினையை குழிதோண்டிப்போடு
உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
//இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதி வெளியான வரிகள் //
தந்தையின் தவிப்பு

தந்தையின் தவிப்பு
எனது அன்பு மகனே
அன்னையைமட்டும்
அணைத்துகொள்கிறாய்
இந்த தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்
ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா
சிலஇடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே
சித்தரிக்கபடுகிறது!
சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா
அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்
அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப்போலவே
பார்ப்பதைதான்
என்னால்
பொறுக்கமுடிவதில்லை
விரோதியல்லடா உன் தந்தை
உன்னை
இவ்வுலகத்திற்கு வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக்கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு
தன்
உயிரைக்கொன்று
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நான்
மகனே
நீ உயிர்வாழ
உன் அன்னை -தன்
உதிரத்தைப்
பாலாக்கித்தந்தாள்
நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,,,,,,,,,,அறிவாயா?
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)











