நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலைக்காக!


அடி
வியப்பெண்ணே
உன்னையுமா
விட்டுவைக்கவில்லை

உலகம்

ஓவியத்தில்கூட

ஒளிவு மறைவு
வேண்டாமென்கிறது

ஒட்டுத்துணி

கலைக்காகத்தானே

என்று
கலைந்தெறிப்படுகிறது

கன்னியமான ஆடை

அசந்துபோய் பார்க்கிறது
அற்ப உலகம்
ஆதாம் ஏவாளின்

அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால

கலையழகியை

ஆண்டவன் 
கொடுத்த

அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக

காவுகொள்ளப்படுகிறது
கொடுக்கப்படுகிறது
கற்பும் மானமும்
காற்றில் பறக்க....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது