நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இரகசிய காப்பீடு!

வனத்தில் தனித்து நிற்கும்
ஒற்றை மரத்தோடு  உரசி
தென்றல் செய்யும் சரசம்!
 
 
வானுச்சியில் மிதக்கும்
நிலவரசியை  நோக்கிப்போகும்
ராஜமேகத்தின் தந்திரம்! 
 
 
பச்சைப் புல்வெளியெங்கும்
பனித்துளிகள் நடத்தும்
இச்சைப் புரட்சி  ராஜ்ஜியம்!
 
இவையனைத்தும்
இருள் போர்வைக்குள்
இரவுப் போருக்குள் நிகழும்
இரகசிய காப்பீடுகள்.
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது