நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடைக்காதே! அடையாதே!


கிளிக் கிளிக்

அப்புறம் ஒருசந்தோஷ செய்தி
வேண்டுகோள் விடுக்கிறது.என்ற என்கவிதை முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாம் கட்டதேர்வுக்கு செல்கிறது. என்கவிதைக்கான ஓட்டுகளையும் கருத்துகளையும் அளித்து முதல் சுற்றில் தேர்வாக்கியதுபோல் மற்ற இரண்டு சுற்றிலும் தேர்வாக்க தாங்களின் ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

முழுவதும் பொக்கிஷமாய்...


கிளிக் கிளிக்
இக்கவிதை முதுகுளத்தூர் .காம்மில் வெளியாகியுள்ளது.

நன்றி முதுகுளத்தூர் .காம்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மெய் தீண்டும் மை விழியே!..

கிளிக்

இக்கவிதை கவிதை சங்கமத்தின்
மெய் தீண்டும் மை விழியே தலைப்பின் போட்டிக்காக எழுதியுள்ளேன்.
ஏற்கனவே அங்கும் இதே தலைப்பில் வேறொரு கவிதை பதிந்துள்ளேன்..

இந்த விருதை அன்போடு  செந்தில்குமார்  தந்துள்ளார்கள்
மிக்க நன்றி செந்தில்குமார்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதை நீரால்.

விடியலை நோக்கி,


முகநூலில். கவிதை சங்கமம் நடத்திய கவிதைபோட்டியில். “வாய்ப்பும் வியப்பும்” என்ற என் கவிதை முதல் இடத்தை பெற்றிருந்தது. அதற்கான பரிசாக இப்புத்தகத்தை சங்கமம் குழுவினர்கள் மனமார்ந்த வாழ்த்துகளோடு இதை அனுப்பிவைத்துள்ளார்கள் கூரியரில்.நேற்றுதான் இது கிடைக்கபெற்றது. இம்மகிழ்ச்சியான விசயத்தை உங்களோடு  பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம்.

இன்பமும் துன்பமும் நிலைப்பதில்லை இந்த நிலையில்லா உலகைப்போல். சிரமமும் சந்தோஷமும் கலந்துதான் வாழ்க்கை  என்பதை உணர்த்துகிறது வாழ்க்கைப்பாடம் சிறுசந்தோஷத்தை தந்த இறைவன் சீரிய நல்லதை தந்து,சிரமத்தையும் நீக்கவழிசெய்வான் என்ற நம்பிக்கையில்...


வெளுத்த வானத்தை
கருத்தமேகம் சூழ்ந்து
வெளிச்சக்கதிரை
மறைக்க முயழ

சுற்றி வீசும் தென்றல்
சூழ்ந்த மேகத்தை கலைத்து
வெளிச்ச ஒளியை
உலகில் பரப்ப

கருத்த மேகமலையை -தன்
ஊடுருவல் உளியால் செதுக்கி
மெல்ல மெல்ல புகுந்து
வெண்ணிற வானத்தை அடைய

தென்றல் புகுந்த கீறலின் வழியே
தெரியப் பார்க்கும்
வெளிச்சக் கோடுகளை வரவேற்று
விடியலை நோக்கும் பூமியாய்

கவலைகள் சூழ்ந்துள்ள
மனதிற்கு சிறுமகிழ்வாய்
சந்தோஷக் கீறல்கள்
சில சில வந்தபோதும்

நிஜ விடியலை எதிர்பார்த்து
நிறைவைக் காணத் துடிக்கும்
நிலைகுலைந்த நெஞ்சம்
நிறைவைத் தரச்சொல்லி புகுந்தது
இறைவனிடம் தஞ்சம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
கவிஞர்களையும். இலக்கிய ஆர்வர்வலர்களையும். ஊக்கும்விக்கும்வகையில் செய்ல்படும்  கவிதை சங்கமத்திற்கு
மனமார்ந்த நன்றிகள்..

வாழ்க்கையின் வ[லு]லி...

வானத்திற்க்கு கீழ்
வீட்டைக்கட்டிவிட்டு

வான் மழைக்கும்
வீசும் புயலுக்கும்
வருத்தும் துன்பத்துக்கும்
வாட்டும் வேதனைக்கும்
வருந்துவதா? வாடுவதா?
விவாதிக்கிறது மனம்

வாழ்க்கை வலியுடையது
வளையும்போதும் நிமிரும்போதும்
வலிக்கிறது
வேதனை வருத்துகிறது

வாஞ்சையோடு வார்த்தைகள்
ஆறுதல் அளித்தபோதும்
அவஸ்த்தையோடு மனம்
அவதிப்படுகிறது

கருவறையில் இருந்தவரை
கவலைகளில்லை கனவுகளில்லை
கண்விழிக்க தொடங்கியதும்
கவலைகளும்
கனவுகளும் விடுவதாயில்லை

வலியுடைய வாழ்க்கையை
வலுவுடையதாக்குவது
மனவலிமையிலிருக்கிறதென
வரமறுக்கும் தைரியத்தை
வம்புசெய்து வரவழைத்துகொண்டேன்

வருவது வரட்டும்
வானத்தின்கீழ் வாழவந்துவிட்டேன்
வருவது வரட்டும்
தேற்றிக் கொள்கிறேன் என்னை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

காதல் துதி..

கிளிக் கிளிக்

என்னை தொலைத்தேன் உன்னுள்
உன்னைப் புதைத்தேன் என்னுள்

மூச்சை சுவாசித்தேன் உன்னுள்
அதை அடைகாத்தேன் என்னுள்

நிறைவைக் கண்டேன் உன்னுள்
அதை நிரப்பிக்கொண்டேன் என்னுள்

உணர்வுகள் கண்டேன் உனக்குள்
அதை உடுத்திக்கொண்டேன் எனக்குள்

எனையே உருக வைத்தாய் எனக்குள்
நான் உருமாறி புகுந்தேன் உனக்குள்

என்ன செய்தாய் என்னை
ஏன் நித்தமும் நினைக்கிறேன் உன்னை

அன்பு கொண்டாயோ என்மேல்
அதை அருந்திவிட்டேனோ நீர்போல்

துடிக்கிறது உனக்காக நெஞ்சம்
துதிபாடி அழைகிறேன் புகுந்துவிடு
எனக்குள் தஞ்சம்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அத்தனைக்கும் ஆமெனில்...


ணந்துவந்தவளின் மனதையறிந்து
மாராப்புக்குள் ஒளிந்திருக்கும் மனத்திற்குள்
மறைவாக ஒளிந்திருக்கும்
மங்கையவளின்
மனயெண்ணங்களை உணர்ந்ததுண்டா!

ன்னோடு உண்டு, உன்னோடு உறங்கி
உன்னோடு அழுது, உன்னோடு சிரித்து
உனக்காகவே வாழவந்திருக்கும்
உள்ளத்தின்
உணர்வுகளை புரிந்ததுண்டா

னைவியானவளின் மகிழ்ச்சியில்
மர்மத்திரை விழுந்து
மூடிக்கிடக்கையில்
மனதிற்கு இதம்கொடுத்து
மனசங்கடத்தை விலக்கியதுண்டா!

டலும் கூடலும் வரவும் செலவும்
உண்பதும் உறங்குவதுமட்டுமே
வாழ்வன்று
உன்னோடு ஒட்டி உறவாடும்
உன் வம்சத்தை விருத்தி நிலையாக்கும்
உள்ரங்கத்தின்
ஓசைகளை கேட்டதுண்டா!

றைக்கா ரகசியங்கள் ஏதுமின்றி
மனதுக்குள் ஒளிவுமறைவு ஒன்றுமின்றி
மணமுடித்த துணைவியோடு
மனமொத்த வாழ்க்கை
வாழ நினைத்ததுண்டா!

பெண்மனதையறிந்து
புன்னகையை சிந்தி
பொன்மானின் நெஞ்சம்
ஆனந்தமடைய
பூக்களின் மென்மையாய்
பூபளத்தின் தன்மையாய்
பாசங்களை பகிர்ந்ததுண்டா!

சுடுசொற்கள் அள்ளிவீசி
சுருட்டிப்போடும் பேச்சு
சுமைகளாக மாறி அவளைச்
சுற்றிக்கொள்ளும்போது
ஆறுதலான ஓரிரு வார்த்தை சொல்லி
அவளின் அகத்தை மகிழ்வித்ததுண்டா!

முகம்பார்த்தறிந்து
அவள் மெளனத்தின்
மொழிகள் புரிந்ததுண்டா!
கேட்டுக் கேட்டு கொடுத்ததைவிட
கேட்காமல்
அவளின் தேவைகளறிந்ததுண்டா!

ன்ன வாழ்க்கையிது
என்றெண்ணிவிடாவாறு
எண்ணங்கள் விதைத்ததுண்டா!
என்றுமே இதுபோன்றொரு
வாழ்க்கைவேண்டுமென
எண்ண வைத்துண்டா!

ரு மனங்கள் இணைந்து
இளமனங்களுக்குள்
இன்பம் நிலைத்திருக்கா!
இதயங்கள் இணைந்தபின்னே
இல்லத்தில் ஒளிமயம் கண்டிருக்கா!

அத்தனைக்கும் ஆமெனில்,,,

ல்லத்தில் இனிமைக்கும்
இன்பதுக்கும் குறைவேது!
ல்லையெனில்
இல்லறத்தில் என்றுமே நிறைவேது!

டிஸ்கி// எனது இக்கவிதை முதுகுளத்தூர்.காம் மில் வெளியாகியுள்ளது

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அடியே! அன்னக்கிளி...


                                                                     கிளிக் கிளிக்

இது ஒரு மீழ் பதிவு [அதிலிருந்து சிறு மாற்றங்களோடு]
இக்கவிதை தமிழ்குறிஞ்சியிலும் வெளியாகியுள்ளது
இத இப்படியும் செய்து பார்த்தேன் சும்மா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது