நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேண்டுகோள் விடுக்கிறது...



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையாகிறது

”இனியாவது”
கலந்து ஆலோசியுங்களேன்
கருகலைப்புகள் என்ற பெயரில்

தாயின் கர்பத்துகுள்ளே நாங்கள்
தகர்த்து எரியப்படாமலிருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்
உள்ளமிருப்போருக்கு - கேட்குமா!
இக்கூக்குரல்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மிதக்கும் மின்சாரம்...


















இப்படத்தின்மேல் கிளிக்செய்யவும்.

டிஸ்கி// இந்த போட்டோ எனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு சொல்லி போட்டோவை அனுப்பி இதுக்கு கவிதையெழுதிதாங்கக்கா
என்று சுஜி கேட்டதால் வந்த வினை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

"கரை சேரா படகுகள்”




















படத்தின்மேல் கிளிச் செய்தால் பெரிதாக்கிப் படிக்கலாம்

டிஸ்கி//இது முகநூல் கவிதை சங்கமத்தின்
"கரை சேரா படகுகள்” தலைப்பில் கவிதைப்போட்டிக்காக எழுதியது. போட்டியில் கவிதை கரை சேர்ந்திடுமா! நீங்களும் சொன்னாத்தானே தெரியும். சொல்லுவீகள்ள..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

இன்று வயது இறக்கிறது..


வயது ஏற ஏற
  வாழ்க்கை குறைகிறது

வாழ்க்கை குறையக் குறைய
  வசந்தம் தேய்கிறது

வசந்தம் தேயத் தேய
  ஆரோக்கியம் ஓய்கிறது

ஆரோக்கியம் ஓய ஓய
   ஆயுள் அழிகிறது

ஆயுள் அழிய அழிய
  ஆட்டம் நிற்கிறது

ஆட்டம் நிற்க நிற்க
   அனைத்தும் அடங்குகிறது

இன்று வாழ்க்கையில் மறக்கமுடியா, மறக்கயிலா நாள்,
என்வயது இறக்கும் நாள் அதாவது என்பிறந்தநாள். இதிலென்ன விசேசம், பூமியில் படைக்கப்படும் மனிதர்களில் நானும் ஒருத்தி, இதில் விசேசமோ விந்தையோயில்லை என்றபோதும். எனக்குள் ஓர் ஆனந்தம். ஆகா நாமும் இந்த பூலோகத்தில் பிறந்தது, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். என்ற வகையில் சந்தோஷமிருந்தாலும். மறுபுறம் அச்சோ. மனிதனை மனிதனே கொன்று குவிக்கும். பொதுநலநலம் குறைந்து சுயநலம் மிகுந்த சூனியம் நிறைந்திருக்கும். மனங்களை விட காகித பணத்திற்கு மதிப்பளிக்கும். ஆற்றிவு கொடுக்கப்படும் மடைமைகளுக்குள் மூழ்கியிருக்கும். சூது வாது.பொய் பொறாமையென பேராபத்துக்கள் குடிகொண்டுடிருக்கும். மாய உலகில் பிறந்து அதற்குள் ஒன்றாக நாமும் ஆகிவிட்டோமே என்ற வருத்தமும் மறுபுறம் இருந்தபோதும். இந்த இறப்பையும் அதனுடன் இணைத்து வைத்தானே இறைவன் அதை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்..

என் பிறப்பை என் குடும்பமே வரவேற்றதாம் அதுவும் ஒரு பெண்குழந்தையை என்றெண்ணும்போது என்குடும்பதின்மேல் ஒருதனிபிரியமும் மரியாதையும் உள்ளது [ஏனெனில் இன்றளவும் பெண்பிள்ளையென்றால் ஒரு முகச்சுளிப்பு இருக்கதான் செய்கிறது இதைஇல்லையென யாரும் மறுக்கயிலாது] அப்படியிருக்கும்போது என் வரவுக்காக காத்திருந்தவர்களை எண்ணி எண்ணி இறைவனிடம் அவர்களுக்காக வேண்டுகிறேன். என்பிறப்பால் என்னை படைத்தவன் முதலில் திருப்தியடையவேண்டும். பிறப்பின் பலனாய் ஈருலகிலும் எனக்கு நன்மைகிடைக்கவேண்டும்.என் பிறப்பு எனக்கு நன்மையளிப்பதைவிட, என்னால் பிறருக்கு தீங்குயேற்றுபட்டுவிடாமல் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பதுதான் என் பேராவல்.

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும்,நம் ஒவ்வொரு வயது இறக்கிறது. ஆயுள் குறைகிறது.ஆக ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று மறைகிறது.இப்பிறந்தநாள் வருவதே நாம் பூமிக்கு வந்து இத்தனை காலமாகிவிட்டது. இதுநாள்வரை நாம் என்ன செய்தோம்? இனி என்ன செய்யபோகிறோம்? இதுநாள்வரை செய்ததில் நன்மையதிகமா? தீமையதிகமா? இனி வரபோகும் காலங்களில் எதனுள் மூழ்கப்போகிறோம் நன்மையின் பக்கமா? தீமையின் பக்கமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்கவே அந்நாளை நினைவில் நிறுத்தி நம் பூமிக்கு வந்த நோக்கத்தின்.வரவு செலவு கணக்குபார்கவேண்டுமென்பதற்காக இருக்கவேண்டுமே தவிர, வீண் ஆடம்பரத்துக்காக அல்ல என்பது என்கருத்து..

ஒரு சின்ன வேண்டுகோள்.. சின்ன பசங்களுக்கோ, பெரியவர்களுக்கோ. பிறந்தநாளென்று பார்ட்டி வைப்பது அவரவர் விருப்பம். அதை வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ வைத்துக்கொள்ளுங்கள். பொது இடங்களான பார்க்[பூங்காக்களில்] வைப்பது சிறந்ததல்ல ஏனென்றால். என்னதான் வெளிநாட்டிற்கு வந்து வாழ்ந்தபோதும், நம்நாட்டில் இருப்பதைவிட வசதிகளில் மிக மிக குறைந்தவர்கள் சூழ்நிலையின் காரணமாக வெளிநாடுகளில் வந்து குடும்பமாக தங்கும் வாய்ப்புயேற்பட்டுவிடுகிறது. வெளிநாடுவந்தவர்களெல்லாம் பெரும்பெரும் வசதியானவர்கள்தாம் என நினைத்துக்கொள்வது தவறு. அப்படியிருக்கும்பட்சத்தில் நீங்க இப்படி பொது இடங்களில் கொண்டாட்டம் போடும்போது. அதை சுற்றிநின்று வேடிக்கப்பார்க்கும் பிஞ்சுமனங்களில் ஒருவித ஏக்கமும், கவலையும் அதனையறியாமல் வந்து ஒட்டிக்கொள்கிறது. தம் தாய் தந்தை இதுபோல் நமக்கு செய்ததில்லையேயென. இதை நேற்று இரவு நான் பார்க்கில் நேரடியாக கண்ட உண்மை.

9 வயது குழந்தைக்கு பிறந்தநாளாம். பார்ட்டி சகலமும் வந்து சுட சுட இறங்கிகொண்டிருந்தது. பெரிய கேக் மேடையில் வைக்கப்பட்டு, சுற்றி பலூன்கட்டி அங்கு நின்றிருந்தவர்கள் கைதட்ட கேக் வெட்டப்படுகிறது. இத்தனைக்கும் அவர்களும் ஒன்றும் பெரிய வசதியானவர்களிலில்லை. ஆனால் பிரஷ்டீஜ்.கடனையுடனைவாங்கியாவது பார்ட்டிகொண்டாடும் கூட்டங்களும் இருக்கு.

அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.ஓடிவந்து அம்மா அம்மா. இதுபோல் எப்போமா எனக்கும் செய்வே என முந்தானையைபிடித்து இழுத்து வா அங்கே என்கிறான். உடனே தாயின் முகம் சுறுங்கி சுற்றுமுற்றும் பார்த்தபடி தலை தாழ்ந்தது. சட்டென என்னை ஓரக்கணால் பார்த்துக்கொண்டே அவனை அப்புறம் அழைத்து நல்லபிள்ளையில்ல அப்பாவிடம் சொல்லி செய்யலாம். போம்மா இப்படிதான் போனவாட்டி பார்க்கிற்குவந்தபோது, அந்த அண்ணன் கேக்வெட்டிச்சில்ல அப்போதும் இப்படிதான் சொன்னேன் ஆனா நீயும் அப்பாவும் செய்யல.சின்னகேக் வாங்கிதந்து ஏமாத்திட்டீங்க.. இதமாதரி பலூன் கட்டனும். எல்லாரும் வந்து கைதட்டனும். நானும் கேக்வெட்டனும். ஒரே அழுகை. தாயும் அழுக. என்கூட பக்கதிலிருந்த அக்காவும். இதுப்போல் வந்து செய்றாங்க பாவம் பச்சபிள்ளைகள் ஆங்காங்கே அழுவுதுபார் என நீட்டிய இரு இடங்களில் இதே காட்சி. குழந்தைகளுக்கு தெரியாதல்லவா.

நாடுவிட்டு நாடுவந்து நாழு சுவற்றுகுள்ளே அடங்கியே கிடக்கும் பலபேர் நேரம் கிடைக்கும் சமயங்களில் மனதையும் ரிலாக்ஸாக்கி குழந்தைகளுக்கும் விளையாட்டுக்காட்டி செல்ல்லாமென இப்படி பூங்காக்களுக்கு அழைத்துவந்தால் போகும்போதும் இன்னும் இன்னும் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்படும்படி மற்றவர்கள் நடந்துகொள்வதுதான் காலக்கொடுமை. இது நிறைய பேருக்கு புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் சந்தோஷம் அவர்களுக்கு பெரியது மற்றவர்களைப்பற்றிய அக்கரையை அவர்கள் ஏன் கொள்ளவேண்டும். இருந்தாலும்,,,,,,,,,

நம் சந்தோஷத்தால் பிறர் மகிழ்ச்சியடையாவிட்டாலும். நம் சந்தோஷத்தால் பிறர் சங்கடத்துக்குள்ளாவதை தவிர்க்கப்பார்க்கலாம்.
[நீ சொல்லிட்டா யாரும் செய்யாம நின்னுடப்போறாகளா சும்மா போவியா... சரி சரி ]

பிறந்த நாள் கேக்கின் வடிவத்தைபோல் வாழ்க்கை தரப்பட்டிருக்கிறது. அதை வெட்டி முதலிரண்டுதான் நமக்கே ஊட்டப்படுகிறது. நாமே நம் ஆயுளை விழுங்குகிறோம். அப்புறம் கேக் வடிவத்திலிருக்கும், நம்முடைய ஆயுளையும் வாழ்க்கையும் பிறருக்கு பங்குபோட்டு தரப்பட்டு அதை அவர்கள் விழுங்குகிறார்கள். ஆகா நம்முடைய வயது கூடி ஆயுள் இறக்கும் தருணமெல்லாம், நாம் எச்சரிக்கையோடு நடக்கவேண்டுமென்பதை விடுத்து வீணானவைகளில் நம் காலத்தை கழிப்பது தவிக்கலாம் என்பதும் என்கருத்து..

உங்கள் அனைவரின் பிராத்தனைகள்தான் முக்கியமாக வேண்டும். உங்களுக்காக இறைவனிடத்தில் கையேந்தி நிற்கும்போது, எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அதில் சிறு பிராத்தனையும் சேர்ந்திருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

டிஸ்கி/.அதிகாலையிலேயே அன்போடு என் செல்லங்கள் வாழ்த்தியது. நிறைவாக இருந்தது. முகநூலில் எனக்காக   பிராத்தனைகளும் செய்த முகமறியா நட்புகளின் நல்லுள்ளங்கள் அனைத்திற்கும் என் அன்பான நன்றி நன்றி நன்றி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

இரு எழுத்துக்குள் விருப்பும் வெறுப்பும்.


வா -------------------------------------



இரு எழுத்துக்கிடையில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன அப்பப்பாஆஆஆ.


போ -------------------------------------


டிஸ்கி// அப்பாடா இந்த கவிதை எழுதிமுடிப்பதற்குள் போதும் போதென்றாகிவிட்டது. பின்னே இவ்வளவு நீளமான கவிதை நான் எழுதியதே இல்லை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அழுகிய பரிசு!

தன்னிநிலை மறந்து
தீய வழியை
தேடிப்போகும் உடலுக்கு
தனக்குத்தானே கிடைக்கும்
தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
தேடிய திரிந்த இன்பத்திற்கு
இறைவன் தந்த பரிசு
திக்குமுக்காட வைக்கும்
தீராவியாதி

மாற்றான் தோட்டத்து
மல்லிகையில்
தேனெடுக்க சென்ற
மதியிழந்த வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
அழுகவைக்கும் இந்த எய்ட்ஸ்

தான்பெற்ற இன்பத்திற்கு
தன்துணைக்கும் தன்வாரிசுக்கும்
துன்பத்தைதரும்
திட்டமிட்ட சதிவாதியே!

தவறென்று தெரிந்தும்
தத்தித்தாவி
தித்திப்பென்று தீங்கில் விழுந்து
தீயில் கருகும் மதிகளே!

உயிருள்ளவரை
உள்ளச்சத்துடன் வாழுந்து
உங்களை நம்பியுள்ளோர்களையும்
உருக்குழையாமல் வாழவிடுங்களேன்...

டிஸ்கி// ஏற்கனவே பரிசு என எழுதிய கவிதைதான் இது.
 கூடுதல் வார்தையோடு தற்போது மீண்டும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வலுவிழந்த எந்திரங்கள்!..

ஆளவரமில்லா
அடிமரத்தில் அமர்ந்தபடி
ஆண்ட நினைவுகளை
அடிபிரளாமல்
அசைபோடக் கற்றுக் கொடுத்த
சந்ததிகளை நினைத்துக் கொண்டு
சிதைந்துபோன நாட்களை
சிலிர்ப்போடு
சீண்டிப் பார்க்கும் உள்ளங்கள்

ஆலமர விழுதைப் பார்த்து
அதிசயிக்க முடியவில்லை
அதேபோல் தானிருந்தும்
அதிலிருந்து உதிரும்
இலைகளைபோல்
இன்றைய நிலையானதே யென
இடித்துரைத்த மனச் சோகங்கள்

எண்ணிலடங்கா துன்பச் சுமைகளின்
எல்லைகளைக் கடந்து
இயன்றைவரை
இயந்திரங்கள் போலிருந்து
இளைத்து உழைத்தவர்களையின்று
ஏறெடுத்து பார்ப்பதற்கோ
ஏதென்று கேட்பதற்கோ
இருந்தும் ஆளில்லாத
இன்னல்கள் கொல்லும் ஏக்கங்கள்

ஆட்டம் முடிந்ததும்
கூட்டம் கலைந்ததால்
அதிரும் மனதுக்குள்
ஆயிரம் வருத்தங்கள்
அடுத்தடுத்து சிந்தனைகளென
ஆட்க்கொள்ளும் மனக்கவலைகள்

சுறுங்கிய தோல்களும்
சுறுக்கமில்லா நினைவுகளும்
சுமைகளாய் கூடிநின்று
வெளிறிக் கிடந்த
வெற்றுப் பார்வையில்
வெளிச்சமிடும் வேதனைகள்

தழைக்க வைக்கும் வாழைமரம்
தன்னுயிரை தந்துவிட்டு
தானறுந்து கிடப்பதுபோல்
தன்னந் தனிமையின் தாக்கங்களால்
தனலில் வேகும் தவிப்புகள்

பச்சை புல்வெளிக்கெல்லாம்
பனித்துளிகளின் பிரவேசங்கள்
பாவம் இவர்களுக்கோ
பாடுபடுத்தும் முதுமையின்
ஆசுவாசுவாசங்கள்

வசந்தம் தொலைந்து வலுவுமிழந்து
வயது கடந்து வழுக்கை வந்து
வாழ்க்கையை கழி[ளி]த்து
வாஞ்சை தேடும் மனங்கள்-இனி
வரபோவதையும் வரவேற்க
விதிவிட்ட வழியென
விரக்தியோடு காத்திருக்கும்
வலுவிழந்த எந்திரங்கள்..

டிஸ்கி// என்னுடைய இக்கவிதை  திண்ணை.காம் மில் வெளியாகியுள்ளது..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கவிதையே! உன்னை காதலித்ததால் எனக்குமுதலிடம்..




















முக நூலில் கவிதை சங்கமம் நடத்திய கவிதைப்போட்டியில்
எனது கவிதையான ”வாய்ப்பும் வியப்பும்” கவிதை
முதலிடத்தை பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காற்றாய்...மலராய்...
நீராய்... நெருப்பாய்...
என்னுள் குடிக்கொண்டு...
என்னை
என்னாலேயே தேடவைக்கும்....!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

அழுகையாய்... சிரிப்பாய்...
யதார்த்தமாய்... இயந்திரமாய்...
இப்படி
எல்லா நிலையிலும்
எனை வடிக்கும்..!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

உலக உருண்டைக்குள்
ஓடிவிளையாடி...
ஓயாது விடைதேடி
ஒளிந்து மறந்து வியப்பூட்டும்...
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்...

கனவில் கருகொண்டு...
நினைவில் நிலைகொண்டு....
நெஞ்சத்தில்
நீங்காயிடங்கொண்டு... எனை
நிலைகுலையச் செய்யும்
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காணும் காட்சியாவும்
கண்ணுக்குள் குடிகொள்ள
நிகழும் நிகழ்ச்சியாவும்
நெஞ்சிக்குள் புதைந்துகொள்ள
புலனுக்கு புலப்படா
புதிர்களையும்
தோண்டிப் பார்க்கவைக்கும்
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்

கவிதை சங்கமத்தில்-எனக்கொரு
வாய்ப்பாய் கவியெழுத வைத்து
விருதாய் முதலிடத்தை
வியக்கும்படி தந்து
விழிநீர் வழிய வழிய
வசந்தத்தைத் தேடித்தந்த
கவிதையே.. உன்னைக்
காதலிக்கிறேன்..

இறைவன் எனக்களித்த
இந்த இன்றியமையா
வாய்ப்புதன்னை
போற்றி காப்பதுடன்
இதில்வரும்
புகழில் மயங்கிடாமல்
இருதயத்தை பாதுகாத்துக்கொண்டே
கவிதையே!... உன்னைக்
காதலிப்பேன்......

டிஸ்கி// இரண்டாம் இடம்.
திரு இராமன் அப்துல்லா அவர்களுக்கு.
மூன்றாம் இடம்.
திரு கோயம்புத்தூர் பால சுப்பிரமணியன் அவர்களுக்கு.
இருவருக்கும் மனமார்ந்த பராட்டுக்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

பொக்கிஷ தேவதை..

படத்தின்மேல் டபுள் கிளிக்செய்து  பெரிதாக்கிப் படிக்கவும்


டிஸ்கி// பஞ்சுக்குவியல்போலிருக்கும் இந்த பசுங்கொழுந்து
என் அன்புத்தங்கையின் ஆருயிர் மகள் ஐனுல் ஆதிரா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சரணடைந்தேன்!..


நின்னைச் சரணடைந்தேன்
என்னுயிரே!- உன்
நினைவோடு இருக்கும்
என்மனதே!

நிறைவு பெற்றதாக்குவேன்
என் வாழ்வை-அது
உன் நினைவுகள்
எனக்குள் இருக்கும்வரை!

வாழும் தருணங்களின்
நொடிக் கொடி
வசந்தங்கள்
நடனமாடும் நம்மிடையில்

காலந்தோறும்
உன்னருகில்
கண்மூடிட வேண்டும்
உன்மடியில்

வாழ்ந்திட வேண்டும்
உன் நிழல்தன்னில்
வாழ்வு கழிந்திட வேண்டும்
உன் நினைவில்

நாளைப் பொழுதை
அறிவதில்லை
நம்முணர்வுக்கு என்றுமே
பிரிவுமில்லை..

டிஸ்கி// என்ன படிச்சாச்சா!அப்படியே இதையும் கிளிக் செய்துபாருங்கள். என் செல்லம் என்ன செய்துன்னு.. அப்படியே போயிடாம வந்து கருத்தும் சொல்லிட்டுபோங்க..
.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

முத்தச் சந்தம்..




















இப்படத்திமேல் கிளிக் செய்தால் பெரிதாக்கிப் படிக்கலாம்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

நான் இறந்துபோயிருந்தேன். [மீண்டும்]























படங்களை கிளிக் செய்தால் பெரிதாக்கி படிக்கலாம்

 டிஸ்கி//பாரத்... பாரதி... "நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை... நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின் இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு, இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத் தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை../
என சவால் விட்டுட்டாங்களே நமக்கு தெரிந்ததை எழுதுவோமுன்னு எழுதி நேற்றுபோட்ட பதிவை காணலையே கருதுக்களும் வந்திருந்ததே! அச்சோ என்னப்பாயிது காலைவரையிருந்த என் போஸ்ட் எங்கே???????
அதுவும் இறந்துபோயிருக்குமோ.

நல்லாத்தானே போயிக்கிட்டுயிருந்துச்சி இதில் ஏன் இப்படின்னு புரியலையே! சேவாகியிருகுமுன்னுபார்த்தா அதுமில்லை
எரார்ன்னு காட்டுது  யாரோ டெரர் வேலை செய்திருக்காங்களோ. இல்லை சூனியம் வச்சிட்டாங்களோ.. என்ன ஆனாலும் சரி நாங்க விடுவோமா இதோ மறுபடியும் போட்டுட்டோம். பார்ப்போம் இது என்னாகுதுன்னு..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சந்தேகக் கேள்விகளில் பதில்கள் பகுதி[2]



நேரடியாக பதிலுக்கு போய்விடலாம் இல்லையின்னா  ஆட்டோ ஸ்கூட்டரெல்லாம் அன்பளிப்பா கேக்குறாங்கப்பூ நெறீய எழுதினா
இது முன்குறிப்பு:
இதற்க்குமுன்  உள்ள கேள்வியும் பதிலும்

இது அடுத்த கேள்விக்கான பதில்
2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி
அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?

எந்த ஒன்றுமே ஒன்றோடு சரிக்கு சரியாக இருந்தால்தானே சரிசமம். இதில் ஆணும் பெண்ணும் எப்படி ?
உடலாலும் மனதாலும், வெவ்வேறு வகைகளாய், வெவ்வேறு உருவ அமைப்புகளாய் படைக்கப்பட்டு, பெண் என்பவள் இன்ன தகுதிகளைக் கொண்டவள். ஆண் என்றவன் இன்ன தகுதிகளைக் கொண்டவன் எனவும்.
அதில் பலங்களும், பலவீனங்களும், புகுதப்பட்டு.ஆணுக்கு இல்லாத தகுதியான தாய்மையை பெண்ணுக்குத் தந்து பலப்படுத்தி.
மென்மையான இளகிய மனதை படைத்து பலவீனப்படுத்தி,பெண்ணுக்கு இல்லாத குண நலன்களை ஆணுக்குள் புகுத்தி. இப்படி பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசங்களால் படைக்கப்பட்டிருக்கும்
ஆணும் பெண்ணும் எப்படி சரிசமம்

பேச்சுக்கும் வார்த்தைக்கும் வேண்டுமென்றால் சொல்லலாம் சமமென,தன்னை தாக்கவரும் ஆணிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே பெண்களால் இயல்வதில்லை சிலபலமும், பல பலவீங்கனங்களைதாங்கி நிற்கும் பெண்ணால் ஆணோடு சமமாக முடியுமோ.
சொல்லிக்கொள்ளலாம். ஏன் பலம்கொண்ட மங்கைகளில்லையாயென! விதிவிலகாய். ஆங்காங்கே, ஆணின் உணர்வுகளோடும் பலத்தோடும் பெண்ணும். பெண்ணின் உணர்வுகளோடு,பலவீனத்தோடும் ஆணும் இருக்கலாம் இது படைப்பியல் நுணுக்கம் படைதவன் மட்டுமே அறிவான்.

இன்றைய பெண்கள்ஆண்களோடு சரிசமமாய் நிலவுக்கே செல்கிறர்கள். ஏன் அதற்க்கு மேலாகவே பலயிடங்களில் கால்பதிக்கிறார்கள்.சாதிக்கிறார்கள்
ஆண்களைவிட பலதகுதிகள் கூடியவர்களாக வலம் வருகிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை.அவர்களுக்குத்தெரியும் அந்த நிலைக்கு வருவதற்கு ஆணைவிட தான் எவ்வளவு சிரமங்கள், சங்கடங்களை அனுப்பவித்திருப்பார்களென. இதை மனபூர்வமான சொல்பவர்கள் சிலபேர். அதெல்லாமில்லையென சொல்லாமல் மார்தட்டிகொள்பவர்கள் பலபேர் எப்படியிருந்தபோதும்,ஒரு பெண் ஆணோடு சமம் என்பது,,,,,, ?

பெண்களின் மனநலம். உடல்நலம் அறியாதவர்கள் உலகில் உண்டா! என்னதான் தன் கணவனிடமோ,தன் தந்தையிடமோ,மற்ற அந்நியர்களிடமோ.துணிச்சலோடு எதிர்த்துபேசக்கூடிய ஆற்றலிருந்தாலும் உள்ளுக்குள் ஓர் உதறலிருக்கும்.பிறவியிலேயே பெண்கள் மென்மையானவர்கள் [இப்போது பூவுக்குள்ளும் பூகம்பம்வெடிக்கிறது அதுவேறு] அவர்களின் மென்மை ஆணுக்கு இருக்காது.
ஆண்கள் பிறவியிலேயே சற்று கடினமானவர்கள்[அவர்களுக்குள்ளும் மென்மையுண்டு அதுவேறு] அவர்களின் கடினம் பெண்ணுக்கு இருக்காது
இது இயற்கை. அப்படியிருக்க எப்படி சமம்.நானும் நீயும் ஒன்று. அதனால் எதைச்செய்தாலும் நானும் செய்வேன் என பெண்கள் இறங்கினாலென்னவாகும் நிலமை. [என்னவாகும் அதான் ஆகிவிட்டதே ஆங்காங்கே!என்கிறீர்களா]

பத்துகுழந்தைபெற்றும் ஆண் அப்படியேயிருக்கிறான் ஆனால்
ஒருபெண் அப்படியா?[ஆணா குழந்தை பெற்றடுக்கிறான் என்னம்மா சொல்லுறே]
ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்.[அதெல்லாம் மேக்கப்பு அப்படிங்கிறீங்களா ஹ ஹா ஹா]

ஆண் பெண் சமத்தால் ஆண்களுக்கு ஆதாரம் பெண்களுக்கு சேதாரம்.
எப்படியெனில்.ஆணுக்கு நிகராய் ஆடைகளில் போட்டி போடுவதால்.
அதில்மட்டும் எதிர்மறையாய்.
அவன் ஆடைகளை அடுக்கடுக்காய் கூட்டிக்கொண்டே போகிறான்.கோட் சூட்டென,ஆனால் பெண்ணோ இதற்கு நேர்மாறாய் இதில்வேறு
அதிரடி தள்ளுபடியாய் ஆங்காங்கே!அச்சோ எங்கேபோய்சொல்ல.
கேட்டால் சமத்தையும் தாண்டி  ஒருபடியாவது மேலே போய் முன்னுக்கு வந்து காட்டத்தான்.தானும் தாழ்ந்து மற்றவைறையும் அதனோடு உள்ளிழுக்கும் செயல்.

அடுத்து
இந்த சமத்தால் சீர்கெடுவது யாரென நினைக்கிறீர்கள் அவர்களின் சந்ததிகளே!அவர்களின் நிலைதான் இன்று நிலைகுலைந்து, சீர்கெட்டு,தங்கள் வாழ்கையையே பறிகொடுத்துவிடுகிறார்கள் சிலசமயம் உயிரையும் கொடுத்துவிடுகிறார்கள். ஆணுக்கு இணையாய் குடும்பத்தை காக்க வேலைக்குபோவது தவறல்ல, ஆனால்! அந்த குடும்பமே கலைந்து சிதைய காரணியாக இருப்பது சரியா! ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை சம்பாதிக்கிறார்களேயொழிய தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்த வரங்களை வலுவிழக்கசெய்துவிடுவதோடு

தான் பெற்றகுழந்தைகளை மிகச்சின்னசிறிய வயதிலேயே அதாவது பிறந்த கொஞ்சநாளிலே பேபிசிட்டிங்கிலும்.வளர்ந்து அதற்க்கு என்ன ஏது எனவிபரமறியாபருவத்திலே ஹாஸ்டலிலும்.விட்டுவிட்டு இருவருவரும் சரிக்கு சமமென போட்டிப்போட்டுவதால்.இக்குழந்தைகளின் நிலையை எண்ணிப்பார்க்க மறந்து பணமட்டுமே வாழ்க்கையாய், இருவரும் சமம் என்பது மட்டுமே குறிக்கோளாய். தான்பெற்ற குஞ்சுகளின் வாழ்க்கையை வீணடித்துவிடுகிறார்கள்.

கண்டிக்க, ஏனென்றுகேட்க ஆளில்லாமல்.பள்ளியிலிருந்து வரும்பிள்ளை பசியோடு ஃபிரிஜை திறந்து அதனுள் 1 வாரத்திற்க்கு தேவையான.
உணர்வற்ற உணவுகளை எடுத்துண்டு. தனிமையெனும் கொடுமைக்கு ஆளாக்கி.நான்குசுவற்றுக்குள்ளே அடைப்பட்டு,
சீரழிக்கும் சினிமா பார்த்து, கூடதா பலக்கவழங்கள் ஏற்பட்டு.மன உலைச்சளுக்கு ஆளாகி. அன்புக்கு ஏங்கித்தவித்து, மனதளர்ச்சி உடல்தளர்ச்சி நரம்புத் தளர்ச்சியென அவதிப்பட்டு அல்லல்படும் சிறார்களை கண்கூடே காணும்போது,என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் என மனம் அவர்களுக்காய் ஆதங்கப்படும் .ஒருமுறை மடியில் தலைசாய்த்து அழுத சிறுமியின் அழுகை.தாய்தந்தையின் சமமென்ற சண்டையால் வீட்டுக்குள்ளே பெண்களின் உணர்வுகளோடு வளரும் சிறுவன் என அடிக்கடிபார்க்க நேரும் சந்தர்ப்பங்களால் அவர்களை பெற்றவர்களின்மீது கோபம்வரும்.

அவர்கள் சொல்வதுபோல் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. இதை தன் சுயலாபத்திற்கா மட்டும் வாழ்வது சரியா?
கேட்டால் பிள்ளைகளுக்குதானே!என அவர்கள் மேலேயே பழியை சுமத்திவிடுவது. அதிகம் இரண்டாகி.இரண்டு ஒன்றாகி.தற்போது ஒன்றாகிவிட்டபோதிலும் அந்த ஒன்றை வைத்து [அது வளரும் வரையிலாவது]பார்க்கமுடியாத பெற்றோர்களாகி.]
அதைவிடக்கொடுமை.அழகுபோய்விடுமென்றும் ஆணுக்கு நிகராய் போட்டிபோட்டு முன்னேற தடையென்றும்.திருமணம் ஆகியும் குழந்தைபெற்றுக்கொள்ளாமல் இருபோர்கள்.ஆகா சமம் சமம் என்று சருக்கலிலேயே வாழ்க்கை கழிகிறது பல இடங்களில்.
ஆணும் பெண்ணும் சமம். இதனால் பிள்ளைகளின் வாயில் பன்.

அரையும் அரையும் ஒன்று
ஆணும் பெண்ணும் ஒன்று என்பது நன்று
இதில் தவறில்லை, ஆனால் சமமென சொல்லிக்கொண்டு நடுவீதியில் சடுகுடு ஆடுவது சரியல்ல ஏனெலில் இது வருவோர் போவோருக்கு ஓர் இலவச கண்காட்சியாகுமே தவிர.
இனியஇலக்கை நோக்கிப்போகாது. சமமென்று வேலைவாய்ப்புகளின் சதவீதங்களிலும் சாதனைகளிலும் சதமடிக்கட்டும்,
அதுவும் தன்னை தற்காத்துக்கொள்ளும் திறன்களோடு.
சிலநேரம் அதற்கும்  சார்தல் தேவைப்படும்.

எதுவென்றபோதும் ஆண் ஆணாகவும்.பெண் பெண்ணாக இருந்தால்தான் அந்ததந்த இனங்களுக்கே ஓர் மதிப்பு!ஆகமொத்தத்தில் இருவரும் சமம் என்பதில்,மிக மிக சில பலன்கள்தான். ஆனால் அதில் பாதிப்புகள் அதிகமதிகம்.இதையறிந்தும் அறியாதோர்போல் எக்குதப்பாய் யோசித்து எடக்குமடக்காய் கேள்விகேட்போர்களுக்கல்ல இக்கருத்து.அவரவர்களுக்கு ஆயிர கருதுக்கலிருக்கலாம்.ஆனாலிது எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

உனக்குநான் எனக்கு நீ என்பதில் சமமாகலாம்.
உன்னைவிட நான் என்னைவிட நீ என்பதிலல்ல
அப்படியிருந்தால்,
ஆண்பெண் சமம் சமாதானமாகது.
ஆட்டங்கண்டு அறுந்துவிடும்.
அன்பான வாழ்க்கை.

டிஸ்கி// மக்களே மக்களின் மக்களே!தவறோ! சரியோ
 இதுதானுங்க நம்மபளுக்கு தெரிஞ்சது !
ஆனாலிது சரின்னு எனக்குப்பட்டது அதனாலிங்கு எழுதப்பட்டது.
உங்களுக்கு தவறென்று பட்டால் அதற்கு இந்நிர்வாகம் பொருப்பாகாது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கூடலில்லா ஊடல்.























கவிதையை பெரிதாகிப் படிக்க அதன்மேல் கிளிச்செய்யவும்.
டிஸ்கி// சந்தேக கேள்விகளின் அடுத்தபதில் ஞாயிறு வரும். அதுவரை இது சும்மா பிரேஏஏஏஏஎக்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்,
இந்தநீரோடை நிரம்பிவழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது