பாலைவனம் சென்றுவிட்ட
பாவையின் காதலனை
பால்நிலாவே பார்த்துவா
பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா
வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு
வான்மழையின் தூறல்கண்டு-மண்
வாசம் வெளியேறி
காற்றோடு கலந்து -என்
காதல்கணவன் நாசியில் ஏறட்டும்.
நான் தூதுவிடும் சுவாசக்காற்று
பால்நிலாவின் ஒளியோடு இணைந்து
மண்வாசத்தோடு கலந்து அவன்
மனதுக்குள் கலக்கட்டும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.