நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்ணே உன்னால்!..

உலகிலுள்ள அனைத்து  தாய்மார்கள். தங்கைகள். தோழியர்கள்.சகோதரிகள்.  அனைவருக்கும் என் அன்பார்ந்த ”உலக மகளிர்தின நல்வாழ்த்துக்கள்”

ன்னடி பெண்ணே!
இன்னும் உறக்கம்
இருள் விட்டு விலகி
எழுந்திரு கண்ணே!

ன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்
எதுவென்றபோதும்
எதிர்கொள்ளடி பெண்ணே!

விழித்திருக்கும்போதே
திருட்டுப்போகும் உலகம்
விழி உறங்கும்போதும்
விழிப்புணர்வு நெஞ்சுக்குள்
திடமாய் இருத்தல் வேண்டும்

நீ
எட்டுவைத்து நடக்கும்
ஒவ்வொரு அடியும்
ஏகாந்தமாக வேண்டும்
எச்சரிக்கையும் கூட வேண்டும்
இன்னல்கள் களைய வேண்டும்
இருளகன்று  ஒளிவீசவேண்டும்

தையுமே எதிர்கொள்ள
இயலவில்லை யெனச்சொல்லி
இருந்தயிடத்திலே முடங்கிவிடுவதா?
இல்லை
மூலையில் கிடந்து விடுவதா?
முயற்சி செய்!முயற்சி செய்!
முடியாதது என்று
எதுவுமேயில்லை

முன்னேறி  வருவது
முக்கியமில்லை!
முன்னேறும்போது
பின்னுக்குள்ளத்தை
முறித்துவிட்டேறினால்
முன்னுக்கு வந்தும்
பயனொன்றுமில்லை!

டுப்படியாகட்டும்
அரசவையாகட்டும்
ஆட்சிசெய்யும் போது
அளவுக்குமீறிய
அவசரமோ! ஆத்திரமோ!
ஆணவமோ! அதிகாரமோ!
ஆகாதென்பதை
அறிந்து நடந்தால்

பொருமையைக் கொண்டு
பெருமை சேர்த்தால்
புரியாத மனங்களும்
பூரிப்படையும்
பொன்னான
பெண்ணினம் கண்டு
போற்றி வாழ்த்தும்

சீரழிந்து விடுவது சுலபம்
சீராக வாழ்வது சிரமம்
சிரமத்தில் சிரத்தையெடு
சிறப்புகள் சிதறாமல் வரும்

சிந்தனைகளை
செதுக்கி முடிவெடு
செழித்தோங்கும்
வாழ்க்கை வந்து சேரும்

பெண்ணே!
உன்னால் முடியும்
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது