நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மீண்டும் வேண்டுமோ!!!



சாதிகள்
வேண்டாமடிப் பாப்பா
பாரதியார்
சொல்லிச்சென்ற
பாடம்

சாதிகள்
வேண்டுமடிப் பாப்பா
சாதூர்த்தியங்கள் 
சொல்லுகின்ற
சோகம்

சாதி சாதியென்று
போட்டுக்கொண்டான்
சாமர்த்திய
வேலி

சாதிமல்லி
என்று சொல்லி
மலரைக்கூட
பிரித்துவிட்டான்
பாவி

ஆங்காங்கே
முளைக்குது
சாதிகளின்
சங்கம்

சக்கையாக
பிழியப்படுது
தாழ்த்தப்பட்டோரின்
அங்கம்

மனிதம்
மனிதத்தை
இணைத்துக்கொள்ள

மீண்டுமோர்
பாரதியா!
வேண்டும்

பிறப்பு இறப்பு
ஒன்றென்ற
போதும்

மனிதனை
மனிதன்
பிரித்துப் பார்த்தல்
பாவம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது