ஓ மனிதா
நீ சிந்தித்ததென்ன
சிந்திக்கப்போவதென்ன!
நீ சாதித்ததென்ன
சாதிக்கப்போவதென்ன!
மயிலிறகாய்
கிடைத்திருக்கும் வாழ்க்கையை
மாயவலையில் மாட்டிவிட்டு-நீ
மதிமயங்கிவிடவா!-இல்லை
மரபுகளென்னும்
மதிப்புமிகுந்த சோலையில்
மணவீசி-உன்
மனம் சிறக்கவா!
சிந்தனையை சிற்பியாயிருந்து
செதுக்கி வடிவமை
உன் வாழ்க்கையை
சாதனைகள்
வசந்த சிற்பமாய் வந்து
உன் வாசல்தட்டும்
உன் வாழ்வும் செழிக்கும்..
முகம்
முகம்
அகத்தின் கண்ணாடி
சிலவேளை
அதுவே
மாயக்கண்ணாடி!
மனதை வாசிக்க
முகம்வழியே முயற்சிப்பது
முடியுமென்பது சிலநேரம்
முடியாதென்பது பலநேரம்
அதன்
உள்ளுணர்வை
வெளிச்சமாய் காட்டிவிட்டு
வெளியுணர்வை
உள்ளடக்கிக்காட்டும்
முகக்கண்ணாடி
அதுவே
மாயக்கண்ணாடி..
கிளிக் கிளிக் இங்கே
//டிஸ்கி// இது facebook கவிதைகள். கவிதை முகம் மென்னும் //facebook இன் தமிழ்க் கவிஞர்களுக்கான ஒரு தேடல்// வாரம் ஒரு கவிதையை ஒரு தலைப்புகொடுத்து எழுத்தசொல்றாங்க. கவிஞர்கள் பலர் உலாவரும் அங்கு. ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதியிருக்கோம். எப்புடியிருக்கு சும்மா சொல்லிட்டுபோங்க கூலியெல்லாம் கேக்கமாட்டேன்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.