எடுக்கவா தொடுக்கவா எண்ணம்
தொடங்கவா அடங்கவா துன்பம்
நினைக்கவா மறக்கவா நெஞ்சம்
அதட்டவா ஆட்டவா சோகம்
நீ சரியா நான் சரியா உருவம்
நீ பிழையா நான் பிழையா ஆர்வம்
நீ முறையா நான் முறையா பருவம்
நீ முதலா நான் முதலா மரணம்
சீண்டிடவா சினந்திடவா மோகம்
கலந்திடவா கரைந்திடவா மர்மம்
களைந்திடவா கலைத்திடவா கோபம்
நீ என்ன நான் என்ன வாதம்
நீ பெரிதா நான் பெரிதா கர்வம்
நீ முன்னே நான் முன்னே காலம்
நீ பின்னே நான் பின்னே நேரம்
இவைகளெல்லா
பிறப்புக்குள்ளுமே அடக்கம்
இவையெல்லா
அவயங்களுக்குள்ளுமிது கடங்கும்
இவைகளை
உணர்ந்து நடந்தால் போதும்
இவைதானே
இறைவன் மனிதர்க்கு வகுத்த பாடம் ....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.