நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
சமூகம். ஆதங்கம். வேதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம். ஆதங்கம். வேதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆவதும் அழிவதும் உன்னாலே!


காரி உமிழ்ந்தேனே
கண் கண்ட
காட்சியின்  முன்னிலையில்
கடுங்சொற்கள் கிடைத்தும்
கட்டுக்குள்ளானது என்னிலையில்

பெண்ணே
உன்னாலும்தான்-பல
பழி பாவங்கள் தொடர்கிறது
கொலைகளும்
கற்பழிப்புகள் நிகழ்கிறது

பெண்ணென்பவளே
பெரும் பொக்கிஷம்
அதை பாதுகாக்க தவறினாலோ
அதுவே அவளுக்கு
ஆழகாலவிசம் என்பது
உலகறிந்த விசயம்
ஆனாலது உனக்கு
விளங்க மறுப்பதுதான்
எனக்கு ஆதங்க ஆவேசம்

பூவையரே உன் மேனி
புற்பூண்டோ! தெருச்செடியோ
போவதும் வருவதும்
பொழுது போக்கிற்காக
மேய்ந்துவிட்டு போக!

பெண்களுக்கென
மறைவிடங்கள்
கொடுக்கப்படிருந்தும்
தனியிடங்கள்
தடுக்கப்படிருந்தும்

பொதுயிடத்தில் நீ குளித்து
பெண்ணே நீ நடந்து வருகையிலே
எதிர்வரும் கண்களுகெல்லாம்
ஏகபோக விருந்தாகிறாயே
எல்லோருர் முன்னிலையில் உடைமாற்றி
எதிராளியின் மனதின்
ஏக்கத்திற்கு எண்ணையுற்றுகிறாயே!


ஆணை ஏன் குற்றம் சொல்ல
பெண்ணே உன் நடத்தை
சரியில்லையெனும்போது
சந்தர்ப்பம் சருக்கிவிட்டால்
சகதியென்ன சந்தனமென்ன
சத்தியவானும் சாத்தன்தான்

நீரில் நனைந்த தேகம்
நிர்கதியாய் திறந்து கிடக்க
அதை
நேரில் காணும் கண்களுக்கோ
நெசவு செய்வதுபோல் கிடந்தடிக்க
ஆசைக்கு தூபம்போடும்
அடியே உனது செயல்
அடுத்தோரையும் - பாவத்திற்க்கு
அழைக்குதே உனது நிலை

வாழைக் குமரிக்கும்
வனப்பு கோதைக்கும்
துளியும் வெட்கமில்லை
வளர்த்த வளர்ப்புகளும்
வளர்க்கும் வளர்ப்புகளும்
வர வர சரியேயில்லை - இதில்
ஆணைக் குற்றம் சொல்வதில்
நியாயமேயில்லை

நாய்களுக்குதான்
ஆறறிவில்லை
நடுரோட்டிலது
பிறந்தமேனியாக திரிந்தாலும்
தவறில்லை

"ஆனால்"

பெண்ணே
உனக்கு அறிவுண்டு
இருந்தும் பயனில்லை
திருமேனி திறந்துகிடந்தால்
உனக்குத்தானே
தீராத தொல்லை
தெருவில் வருவோர் போவோர்
தீண்டினால் கேட்பார் யாருமில்லை

ஈக்கள் எங்கு மொய்க்கும்?
இனிப்பிருக்கும் இடத்தினிலே
இல்லை
கழிவிருக்கும் தளத்தினிலே

நீ
கழிவாக வேண்டியயிடத்தில்
இனிப்பாகி
இனிப்பாக வேண்டிய இடத்தில்
கழிவாக ஆவதினால்
தீயவைகள் ஆகிறது
நல்லவைகள் அழிகிறது

நீ குளித்துவந்த கோலம்கண்டு
நீ உடை மாற்றும் நிலைகண்டு
கண்கொத்திப் பாம்பாய்
உன்னை ஆண்களின் கண்கொத்தி
நின்றது கண்டு

கண்கூசி  நின்றேன்
உன் செயல்கண்டு
காரி உமிழ்ந்தேன்
பெண்ணே உன்னை
நானும் ஒரு
பெண்ணாகயிருந்தும் அங்கு.


//நீண்ட நாளைக்கு பின் டிஸ்கி எழுகிறேன்..//

பொதுயிடத்தில் பெண்கள் உடைமாற்றக்கூடாது 
கொட்டையிடத்தில் தகவல் பலகை 
இருந்தும் என்ன பயன்?
எண்ணை சோப்புதேய்த்துக்குளிக்கூடாது
பட்டைதீட்டி பலகையில் தகவல்
இருந்தும் என்ன பயன்?
சுத்தமாக வைத்திருக்கவேண்டும்
சுத்த தமிழில் சொல்லில் வடித்து
இருந்தும் என்ன பயன்
அசுத்தத்தை தவிர அங்கு வேறுயில்லை

எல்லா சொல்லும் இருக்கு தமிழ[வழக்]கத்தில்
ஆனால்
யாருமதை செயவதில்லையே புழக்கத்தில்

ஆதங்கம்தான்
நம்ம நாடு
நம்ம இனம்
நம்ம மக்கள் 
என்ற ஆதங்கம்தான்
வேறு என்னசொல்ல..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தீராத தீவிரவாதம்!


அச்சங்களோடு அனுதினமும் போராடி
அவதிகளின் பிடியில் கண்ணீர் நீராடி
ஆயிரமாயிரம் உயிர்கள் அடியோடு
அழிந்து போகுதே மண்ணோடு!

உள்ளுக்குள்ளே புகைந்து
உலகெங்கும் வெடிக்குதே!
உள்ளுணர்வ கொதிக்கவச்சு
உயிர்களெல்லாம் சிதையுதே!

அச்சமச்சம் கொண்டு
நித்தம் நித்தம் வேகுதே!
அஞ்சாநெஞ்சு கூட்டமெல்லாம்
ஆணவத்தில் அலையுதே!

வாதங்களை பேசியே
வஞ்சனைகள் செய்யுதே!
தீவிர வாதங்களை தூண்டியே
தீவிரவாதிகளா மாத்துதே!

சாதிபேரச் சொல்லி
சாகடிக்குதுங்க ஒரு கூட்டம்!
மதம்பேரச் சொல்லி
மாழுதுங்க மறுகூட்டம்!

தீவிரமா யோசிச்சி
தீர்க்குதுங்க ஒரு கூட்டம்!
திண்டாடி திணறியே
தீயாக்குதுங்க மறுகூட்டம்!

ஆத்தாடி மனிதமெல்லாம்
அடியோட அழியுதே!
பாத்தாலே மனசெல்லாம்
பதறித்தான் துடிக்குதே!

தீராதோ தீராதோ
தினந்தோறும் நடக்கும் தீவிரவாதம்
தீரவேண்டும் தீரவெண்டுமென
தினம் நடக்குதே 
இறையிடம் மன்றாட்டம்...


”ஈகரை”க்காக எழுதியது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

மானங்கெட்ட காதல்





உலகம் எந்தளவுக்கு போய்கொண்டிருக்கு, பெண்மைக்கும் மதிப்பில்லை, பெற்றோருக்கும் மதிப்பில்லை எல்லாம் காதலென்றபோர்வையில் காமம் கொடுக்கும் தொல்லை.
பலயிடங்களில் இரக்கமெல்லாம் அரக்கத்தனமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி இப்படி செய்யும் அனைத்துபெண்களுக்கும் ஒரு பாடம், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பெருகிக்கொண்டேதானிருப்பார்கள்.

காதலென்ற போர்வையில்
காமங்கள் அரங்கேறியதால்
ஏழுவருட  இன்றியமையாக் காதல்
இன்று  எழவெடுக்க காத்திருக்கு
இவனைப்போன்ற
பச்சை  துரோகிகளுக்கு
இலவசமாய் பெண்கள்
ப[மு]ந்திபோடவும்  தவமிருக்கு !

காதலை காமத்தோடு
கைக் குலுக்க வைத்தவனே
காதலனாக வேசமிட்டு
கன்னிதிரை விளக்கியவனே
கன்னியின் கண்ணீர்  கண்டும்
கல்நெஞ்சமாகி கிடக்கிறாயே
கா[ம]தல்மோகம் தீர்ந்ததாலே
காத[லை]லியை
காலில்போட்டு மிதிக்கிறாயோ!

உன்னை காதலித்த பாவத்துக்கு
உன் உடல்பசிக்கு இறையாகி
உன்வாரிசை  சுமந்தபடி
ஊர் வசைக்கும் ஆளாகி
உன்முன் கெஞ்சிக்
கண்ணீர் வடிப்பவளை
உதறி உதறி  தள்ளுகிறாயே
உண்மையிலே 
உனக்கு  உள்ளமென்று ஒன்றிருக்கா?

அப்”பாவி”யே
பேதை பெண்ணல்லடி  - நீ
போதைப்பெண்
காதல்போதை
உன்கண்ணை மறைத்ததாலே
கண்விழிக்கா கருக்குஞ்சை
கருப்பையில் சிறையிவைத்து
சித்திரவைதை செய்யும் நீ
சீர்கெட்ட சிறுக்கியடி

உண்மைக்காதல் இல்லையடி
இது உண்மைக்காதல் இல்லையடி
இருமனம் இணைந்தாலும்
திருமணம் நடக்கும் முன்பே
இரு உடல்கள் இணைத்துக்கொண்டு
உடல் சுகத்தை தேடிக்கொண்ட
இந்த காதலெல்லெல்லாம்
 உண்மைக்காதல் இல்லையடி

அடி வெக்கங்கெட்டவளே
உன் முகம் பார்த்து
பேசுவதற்கே மறுப்பவனிடம்
உன்னை வேண்டாமென 
உதறி விடுபவனிடம்
நீதான்
வேண்டுமென வாதாடி நிற்கிறாயே
நீ இல்லையெனறால்
செத்துவிடுவேன் என்கிறாயே
சோற்றைத்தானே உண்ணுகிறாய்
சொரணையேதுமில்லையாடி

கொஞ்சிக் கொஞ்சி மிஞ்சியவன்
குற்றமெல்லாவற்றையும்
உன்மேல் சுமத்தியும்
கெஞ்சுகிறாய் கதறுகிறாய்
கொஞ்சமும்  இரங்கவில்லை
உன்மேல்  ஒருதுளியும் காதலில்லா
கொடுமனங் கொண்டவனென்றுகூடவா
உனக்குப் புரியவில்லை!

உம்போன்ற பெண்களாலே
பெற்றோருக்கும் ஈனமடி
உன்னை பெற்ற பாவத்துக்கு
பெற்றோருக்கும் கிடைக்குதே 
தண்டனையடி!
உறுதியற்ற காதலெல்லாம்
உடல் கேட்டு அலையுமடி
உடல்தேவை தீர்ந்த பின்னே
உதறிவிட்டு நகருமடி

இறையச்சம்  களைந்துவிட்டு
இச்சைகளின்பின்னே நடந்து செல்லும்
உன்னைப்போன்ற பெண்களுக்கு
இதுவெல்லாம்
உலகில் கிடைக்கும் பாடமடி!

இன்னும்
என்னவெல்லாம் நடக்கப்போகுதோடி!
எத்தனை கேவலங்கள்  
கண்முன் நடந்தாலும்
கேடுகெட்டு போவதற்கு
உன்னைபோல்
இன்னும் எத்தனையோ
இளம் ஜோடிகள் தயாரடி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஓடுகாலி!



கன்னியர் காதலென்ற பெயரில்
கலிசடைப் பயல்களோடு
கண்காணா தூரமாகி
கடைசியில் கதிகலங்கி நிற்பதேன்?

மாலையிட்ட மங்கையும்
மதிமயங்கும் காலமாகி
மணந்தவனை விட்டுவிட்டு
மாற்றானோடு ஓடிப்போய்
மண்புழுவாய் ஆவதேன்?

மங்கையர் திலகமே!
மங்கையர் திலகமே!
மானிட வாழ்க்கையென்ன
மண்ணில் நிரந்தரமா?
சீர்கெட்டு போனபின்னே -உனக்கு
சிறப்புகள் வந்திடுமா?

மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவைக்கண்டு
மதிமயங்கிப் போகலாமா?
உன் மானத்தை
மாற்றானுக்கு விலைபேசலாமா?

கன்னியே உன்னை
வளர்க்கும் வரைக்கும்தான்
உனக்கு உன் பெற்றோரா?
நீ வளர்ந்துவிட்டால் அவர்கள் உனக்கு
ஒன்றுக்கும்
உதவாத உதவாக்கரையா?

பெற்றோர் வார்த்தைகளென்றும்
பிள்ளைகளுக்கு பொல்லாததாகுமா? -உன்
பொன்னான பொற்காலத்தை அது
பொய்யாக்கி பொசுக்கிடுமா?

கல்யாணமான மங்கையே!
காசு காய்க்கும் மரமா?உன் கணவன்
 கடல்கடந்து கானகதேசத்திலே
காய்கிறான் தேய்கிறான் உனக்காகவே!
எண்ணை தேசத்திலே
எரிகிறான் கருகுகிறான் குடும்பம்காக்கவே!

அவனின்
அமானிதபொருளல்லவா? நீ
ஆகையால் உன்னை
பாதுகாத்துக் கொள்ளத் தவறிடாதே
பாதகச்செயல்களெதும் புரிந்திடாதே!

ஓடுகாலி என்ற பழிச்சொல்லை
ஒருக்காலும்  வாங்கிடாதே!
உத்தமியென்ற உன் நடத்தையை
ஊர் உலகம் தூற்றச் செய்திடாதே!

இது மாயக்கண்ணாடிபோன்ற உலகமடி
இதில் மனிதர்கள் யாவரும் நிழலுருவமடி
நிழல்கள் கண்டு  மகிழ்ந்திடாதே!
இதனால்  ஒருபொழுதும்
 நிம்மதி என்பதே கிடைத்திடாதே!

இக்கவிதை ”இஸ்லாமியப் பெண்மணி” யில் ஓடிப்போவது ஏன்? எதற்காக? என்ற கட்டுரைக்கு எழுதியது பதிவின் நீளம் கருதி இதனை அதில் சேர்க்கவில்லை.. அதனால் அதனை இங்கே பதிந்துள்ளேன். முடிந்தால் இங்கு வரும் நெஞ்சங்கள் கொஞ்சம் அங்கேயும் எட்டிப்பாருங்களேன் முடிந்தால் கருத்துகளும் பதிங்களேன்..



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பாவமன்றோ!

 
எல்லாம் சரியிருந்தும்
இருதயம் மட்டும் இறுக்கிப்போன
இரக்கமற்ற ஈனப் பிறவிகளாய்!
நலமிருந்தும்
மனமற்றுப் பேசித்திரியும்
மனசாட்சியற்ற மாக்களாய்!
மண்ணில் உலவும் மனிதசாதிகள்

வருவோர் போவோரை
வேடிக்கை பார்த்து!
வெடுக்குச் சிரிப்பு சிரித்து
வேசமிடத்தெரியா வெகுளிகளாய்!

கந்தலான ஒட்டுதுணியில்
கருவிழிகள் கலங்கியபடி! 
குழந்தைபோன்றே உணவை
குதறிப்போட்டு சேட்டை செய்து!
தனக்குத்தானே பேசியழும்
தன்னுணர்வற்ற செய்கைகளால்!

பணமில்லா சிரிப்பு சிரிப்பதால்
தான் பைத்தியமென்றும்
தனக்கொரு அந்தஸ்தில்லா நிலை
அதனால் அரைலூசு என்றும்
மனமிருந்தும் அது சற்று
நலமில்லாததால்
மனநலவாதியென்றும்!

குற்றமற்றிருந்தும்
குற்றவாளியைப்போல்பிறரின்
கேலிப் பார்வைகளால்
குன்றிபோவது கொடுமையன்றோ!

தன்னையறியாமல்
தன்னுணர்வு புரியாமல்
அடுத்தவர்களால் அவமதிக்கப்படும்
இந்நிலையிலுள்ளவர்களை
இழிவு செய்வது பாவமன்றோ!

எந்நிலையிலும் தனக்கும் வரும்
என்று உணர்வோராய்
மன ஊனமுற்றோரை
மனம் நோகும்படி செய்யாதிருப்பது
மனித தர்மமன்றோ!

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாலையில் கசியும் மெளனம்!



குடும்பம் பசியார
குருதி வேர்வையானது!
இளமை வெறுமையாகி
முதுமையை உடல் சுமந்தது!
பாசங்கள் தூரமாகி
வேசங்கள் நெருக்கமானது!
எல்லையில்லா அன்புகூட
ஏக்கமாகி நெஞ்சில் அடைந்தது!
இல்லம் சோலையாக
இல்லறம் பாலையானது!
இயற்கை இன்பங்கள் செயற்யாக
செயற்கை இன்பங்கள் துன்பமானது!
உறவுகள் ஒட்டிவர
உழைப்பும் கைகொடுத்தது!
உள்ளபடி சொன்னாக்கா
உடலோடு உள்ளமும் புண்ணாகிறது!
விடுமுறை ஒன்றே விடுதலை தருகிறது!
விடுதலை பெரும்வேளை
வியாதிகளும் தொடர்கிறது!
வியாதிகளோடு வயோதிகமும் சேர்கிறது!
வதையும் கூடுகிறது வாழ்க்கையும் கழிகிறது!
இதுதான்  வெளிநாட்டு வாழ்க்கை 
இதற்குதான் எத்தனை விதமான சேட்டை!..

நன்றி தமிழ்குறிஞ்சி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அப்பாவைவிட ஒருபடி!

 
பிள்ளையை  
பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்த
அவசர தருணங்களில்  
அம்மாவின் கேள்வி
வளர்ந்து ஆளானதும்
யாரைப்போல வர ஆசை!            

வேளைக்குப் போக 
வேகமாய் கிளம்பிய தந்தை
சிலநொடிகள் தாமதம்
பிள்ளையின் பதிலைக் கேட்க!

அழுத்தமாய் சொன்னது
அப்பாவைவிட ஒருபடி மேலாக!
ஆனந்தம் பொங்கிய நிலையில்
அடுத்தடி எடுத்தவைத்து

அப்படியா அன்புச்செல்லமேயென
ஆரத்தழுவி அன்பாய் முத்தமிட்டபோது
”ஆமாம்மா”
அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே
முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க 
ஆனா நான் அப்படியல்ல
உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் என்றதும்

முதுகெழும்பு முறிபட்டதுபோல்
உடல் தடதடக்க
மனதெழும்பு நசிந்து  குருதி கசிய
விழிகள் நான்கும்  
நிலைகுத்தி நின்றன...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது