கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!
கல்வி கற்றறிதலில் நான் மிக குறைவென்றபோதும்
கற்கவேண்டுமென்ற ஆவல் கடலைவிடினும் பெரிதாய் என் மனதில்..
பூக்கவா! புதையவா!
மணிமேகலை பிரசுரத்தாரால் வெளியிட்டப்பட்ட எனது இரண்டாம் நூல்
முதல் நூல் உணர்வுகளில் ஓசை[துபையில் வெளியீடு]
முதல் நூல் தாராபாரதி அறக்கட்டளையால் மூன்றம் பரிசுக்கு தேர்வானது.குறிப்பிடத்தக்கது..
தற்போது எனது இரண்டாம் நூல் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைகழகத்தால் பரிசுவழங்க ஒப்புதல் அளித்து வரும் 20 ந்தேதி மதுரை பப்பாயா ஹோட்டலில்
நடக்கும் நிகழ்ச்சியில் சான்றிதலும் பதக்கமும் தரப்போவதாக
சகோதரர், திரு ரவி தமிழ்வாணன் அவர்கள் எனக்கு அலைபேசிவழி மற்றும் மெயில்வழி செய்தியை அனுப்பியபோது மடைந்திறந்த வெள்ளமாய் மனம் கொப்பளிக்க கண்கள் வழி கரைந்தோடியது ஆனந்தமும் அழுகையும், இறைவா உனக்கே வான்புகழும் மண்புகழும் என்புகழும் ..
எழுத்தென்பது வரமென்கிறார்கள் அந்தவரத்தினை எனக்களித்து, எண்ணுவதையெல்லாம் எழுத்தாக்கும் ஆற்றலை தந்தஇறைவனுக்கும், என் உணர்வுக்கும் மதிப்பளித்து என்னை எழுத்தவைத்து அழகுபார்க்கும் என்னவருக்கும்.என்னெழுத்தையும் ஏற்று ஊக்கம்கொடுத்து இன்னும் எழுதத்தூண்டும் என் அன்புள்ள தாங்கள் அனைவருக்கும்.
மேலும்
என்னெழுத்தை அச்சிட்டுக் கொடுப்பதோடு நின்றுவிடாது மென்மேலும் என்னை வலுப்படுத்துவதுபோல் என்னை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துசெல்லும் மணிமேகலை பிரசுரமும் அதன் நிர்வாகியுமான
சகோதரர். திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும். என்னெழுத்தை அங்கீகரிக்கும்வகையில் என்நூல் தேர்வுக்கான ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழகத்திற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை ஆத்மங்களோடிணைத்து அன்போடு கூறிக்கொள்கிறேன்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.