நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேர்களைத்தேடி.






மலேசிய தொலைகாட்சியில் முதன் முறையாக மலிக்காஃபாரூக்.

மலேசிய தொலைக்காட்சியான ஆஸ்த்ரோ டிவி.மற்றும் நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும் "வேர்களைத்தேடி" நிகழ்ச்சியில் மலேசியாவிற்க்கும் இந்தியாவிலுள்ள எங்கள் ஊரான முத்துப்பேட்டை க்கும் உள்ள தொடர்பு சம்பந்தமான உறவுப்பாலம் அமைந்ததை வெளியுலகிற்க்கு எடுத்துரைகும்படியான நிகழ்ச்சியில் எங்கள் வீட்டில் பெருநாள் கொண்டாட்டதோடு மலேசிய மண்ணில் எங்கள் உழைப்பின் வேர் எவ்வாறு விரிச்சமடையச்செய்தது என்பதின்
பின்னனிய நிகழ்வுகளும் பகிரப்பட்டது. 

இன்ஷா அல்லாஹ் இன்று மலேசிய நேரம் இரவு எட்டு 8. மணிக்கு இந்திய நேரப்படி மதியம் 5,மணிக்கு ஆஸ்த்ரோ தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்

..இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும் அதன் நிர்வாகத்தார்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது அன்பு நிறைந்த ஈத் பெருநாள் வாழ்த்துகள்..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

பெரும் உபகாரி .




கொடைகளில்பெருங்ககொடை
இறையருளும் திருக்கொடை

இம்மாதத்தில் பிடிப்பது
உண்ணா நோன்பு மட்டுமல்ல
இது உயர்பதவியையும் பெற்றுதரும்
உன்னதமான மாண்பு!

பசியின் நிலையறிய- இழி
இச்சைகள் களைந்தெறிய
வரியவர் நிலை உணர்ந்து
வாரி வழங்கும் குணமறிய!

பதினொரு மாதங்கள் சேர்த்த
பாவங்களை எண்ணி கரைந்தழுக -இனி
பாவக்கறைகள் படியாதிருக்க
படைத்தோனை நினைத்துருக !

காலி வயிறுக்கும்
கடும் நா வறட்சிக்கும்
மனோ இச்சைகளைத் துறந்து
மறையோனை நினைப்பதற்க்கும்!

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து
பாவசெயல்களிலிருந்து விலகியிருப்பவைக்கும்
கிடைத்திடுமே கூலி கூலி நற்கூலி
இறைவன் வழங்கிடும் ஏற்றமிகு கூலி!

கண்ணீர்விட்டு கையேந்தி கேட்டிடு
கருணையாளன் தந்திடுவான்
கண்ணியமிகுந்த
சுவர்கமென்னும் உயர் பதவி

...விருந்தாளியல்ல நோன்பு
உடலுக்கும் உலக்குக்கும் பல
நிலைகளை புரியவைத்து பாடஞ்சொல்லித்தரும்
பெரும் உபகாரி.......





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது