நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சரணடைந்தேன்!..


நின்னைச் சரணடைந்தேன்
என்னுயிரே!- உன்
நினைவோடு இருக்கும்
என்மனதே!

நிறைவு பெற்றதாக்குவேன்
என் வாழ்வை-அது
உன் நினைவுகள்
எனக்குள் இருக்கும்வரை!

வாழும் தருணங்களின்
நொடிக் கொடி
வசந்தங்கள்
நடனமாடும் நம்மிடையில்

காலந்தோறும்
உன்னருகில்
கண்மூடிட வேண்டும்
உன்மடியில்

வாழ்ந்திட வேண்டும்
உன் நிழல்தன்னில்
வாழ்வு கழிந்திட வேண்டும்
உன் நினைவில்

நாளைப் பொழுதை
அறிவதில்லை
நம்முணர்வுக்கு என்றுமே
பிரிவுமில்லை..

டிஸ்கி// என்ன படிச்சாச்சா!அப்படியே இதையும் கிளிக் செய்துபாருங்கள். என் செல்லம் என்ன செய்துன்னு.. அப்படியே போயிடாம வந்து கருத்தும் சொல்லிட்டுபோங்க..
.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது