நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓ இதுதான் சமூகமா?



தன் தலைவனின்
சுவரொட்டிகள் ஒட்டபட
சூடுபரக்க காய்ச்சப்படுகிறது பசை
கிழிந்துகிடக்கும்
தன் வாழ்க்கை ஓட்டையை
அடைக்க வழியின்றி..

கூடிஉதவும் கூட்டுக் குடித்தனத்தில்
உடன்படாத உள்ளங்கள்
கூக்குரலெழுப்பினாலும் ஓடிவராத
அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆசைப்படுகிறது
விட்டுக்கொடுக்கும் மனமின்றி..

நியாயமான முறையில்
நேர்வழியில் செல்லக்கூட
குறுக்குவழியை கற்றுகொடுக்கும்
நேர்மையற்றோரின் நெஞ்சங்களால்
நிர்ணயிக்கப்படுகிறது
லஞ்சமென்ற மொய்கள்
அன்பளிப்பென்ற பெயரால்..

வாடும் வறுமையை போக்கிட
வாங்கிடும் பணம்
பெருக்கல் இல்லாமலே
பெருகிப்போய்
வாட்டி வதைக்கும் ஏழை மனங்களை
வட்டியென்ற கொடுமையால்..

அக்கரைகொண்ட அறிவிப்புகள்
குடி குடியை கெடுக்குமென்று
அது அடுத்தவனின்
குடியைதானே கெடுக்கும்
அறிவிக்கும் குடும்பத்தையல்ல
என்பதைபோல்..

பூவுலகில் வாழ
புண்ணிய வழிகள் பலயிருந்தும்
பூவுடலை புலக்கடையில் விற்று
புண்ணாகி பிறரையும் புண்ணாக்கி
பால்பட்டுப் பட்டமரமாகிய
விபச்சார வர்கம்
வெந்து சாகிறது வேதனை தாங்காமல்..

வீட்டுக் கதவு திறந்தே கிடந்தும்
சுகந்தமான காற்றை சுவாசிக்க
வெளிக்காற்று உள்ளே வருவதில்லை
வாசலில் வளர்ந்த மரங்களையெல்லாம்
குப்பைகளாக்குகிறதென சொல்லி
கொன்றுபோடுவதால்..

தன்வீட்டில் நடக்கும் அசிங்கங்களை
மறைக்க நினைக்கும் மனங்கள்
அடுத்தவீட்டு விவகாரத்தை
கண் வைத்து கைகால் வைத்து
கட்டுக்கதையாகி பற்றி எரியவைக்கும்
காட்டுத் தீயைப்போல்..

இப்படியான  சமூக நிகழ்வுகள்
இனிமேலாவது உருவாகாமலிருக்க
இனிய எண்ணம் கொள் நல்மனமே
இனி என்றும் மகிழ்வாகும்
இந்த சமூகமே!...

டிஸ்கி// அன்று எழுதியகவிதை முன்பு போட்டேனான்னு நியாபமில்லை. இருந்தாலும் மீண்டும். யோசிக்க நேரமில்லீங்கோ அதேன் இப்படியெல்லாம் ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது