கவிஞருக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞருக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைர-முத்து
மண்ணுக்குள் கிடைக்கும் வைரம்
சிப்பிக்குள் கிடைக்கும் முத்து
இவையிரண்டும் இணைந்து அதிசயமாய்
பெண்ணுக்குள்
உருவானது உயிராய்-அது
பேனா பிடித்து எழுதியது
முத்தமிழையும் கலந்த கவிதையாய்
கரிசல்காட்டு மண்ணையும்
கஞ்சி சுமந்த பெண்ணையும்
கல்லூரி கதையையும்
காதல் நெகிழ்வையும்
கவிக்குள் அடக்கும் திறன்
கவிப்பேரரசு என்ற
கருப்பு வைரம்
சங்கத்தமிழும் சிந்துபாடும்
சமுத்திர நதியும் சிணுங்கியோடும்
தங்குதடையின்றி
தண்ணீராய் வந்துவிழும்
தமிழ் வார்த்தைகளின் சரளம்
தங்கத்தமிழனாய்
தாய்மண்ணில் ஊர்வலம்
முத்தமிழும் கலந்த தமிழ்வித்து
தமிழ்தாய் பெற்றடுத்த வைரமுத்து..
டிஸ்கி// இவர்கள் தமிழ்பேசும்போதும் கவிதை வாசிக்கும்போதும். ஏனோ கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோன்றும்.
தமிழுக்கு அத்தனை ஒரு ஈர்ப்பு, தமிழர்களை மட்டுமல்ல மற்ற மொழிக்காரர்களுடன் உடனே ஒட்டிக்கொள்வதும் தமிழ்மொழிதான்.அன்னைத்தமிழை அடுத்தவர் அழகாய் பேசும்போதும் அதை
அணு அணுவாய் ரசிப்பதில் ஓர் அலாதி இன்பம்தான்..//
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
காவியத்திலகதிற்கொரு கவிதை
பனிமலையில்
பூபாளம்
கேட்டீர் –அதை
பன்னீர்
புஷ்பங்களாய்
பகிர்ந்தளித்தீர்
பல
காவியங்களைத்
தொகுத்தீர்
பத்தாயிரம்
கவிதைகளுக்கு
மேல்
வடித்தீர்
கல்லாதோர்க்கும்
கவியெழுத
கற்றுக்
கொடுத்தீர்
காவியத்
திலகமென்று
பெயரெடுத்தீர்
முத்
தமிழையும்
மூச்சில்
கொண்டீர்
முதிர்ச்சியிலும்
இளமை
கண்டீர்
பன்னாட்டு
இஸ்லாமிய
இலக்கிய
கழகம்
தந்தீர்
பசுமை
கொஞ்சும்
இனிமையாய்
பல மனங்களில்
நிறைந்தீர்
பிறரை
பாராட்டும்
பண்புகள்
கொண்டீர்
பிறர்
மதிக்கும்
மனிதராய்
உயர்ந்தீர்
வெண்பாக்கள்
கவிதைகள்
புனைந்தீர்-அதில்
வெற்றி
வரிகளையும்
விதைத்தீர்
வரிகளுக்கும்
விளக்கம்
கொடுத்தீர்
வைர
வரிகளையும்
கற்றுக்
கொடுத்தீர்
அற்புதக்
கவியெழுதும்
காவியமே!
அன்பு
மனங்கொண்ட
மனிதநேயமே!
ஆசிகள்
அள்ளித்
தந்திடுங்கள்
ஆண்டவனின்
அருளோடு
வாழ்ந்திடுங்கள்...
இக்கவிதை. இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தலைவர்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிறுவனர். காவியத்திலகம். திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
அவர்களுக்காக நான் எழுதிய சிறு கவிதை.
வளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.
இன்று துபையிலிருந்து தன்தாயகம் செல்லும் அவர்களுக்கு
இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக!
இக்கவிதையை பார்த்தும் தற்போது மெயிலில் பதிலளித்திருந்தார்கள்
இதோ அது
மகளே!
கவிதை படித்தேன்
களிப்புற்றேன்.
நன்றியொடு
வாழ்த்துக்கள்
நவின்றேன்.
இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்
மீண்டும் சந்திப்போம்.
--வாப்பா--
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
பூபாளம்
கேட்டீர் –அதை
பன்னீர்
புஷ்பங்களாய்
பகிர்ந்தளித்தீர்
பல
காவியங்களைத்
தொகுத்தீர்
பத்தாயிரம்
கவிதைகளுக்கு
மேல்
வடித்தீர்
கல்லாதோர்க்கும்
கவியெழுத
கற்றுக்
கொடுத்தீர்
காவியத்
திலகமென்று
பெயரெடுத்தீர்
முத்
தமிழையும்
மூச்சில்
கொண்டீர்
முதிர்ச்சியிலும்
இளமை
கண்டீர்
பன்னாட்டு
இஸ்லாமிய
இலக்கிய
கழகம்
தந்தீர்
பசுமை
கொஞ்சும்
இனிமையாய்
பல மனங்களில்
நிறைந்தீர்
பிறரை
பாராட்டும்
பண்புகள்
கொண்டீர்
பிறர்
மதிக்கும்
மனிதராய்
உயர்ந்தீர்
வெண்பாக்கள்
கவிதைகள்
புனைந்தீர்-அதில்
வெற்றி
வரிகளையும்
விதைத்தீர்
வரிகளுக்கும்
விளக்கம்
கொடுத்தீர்
வைர
வரிகளையும்
கற்றுக்
கொடுத்தீர்
அற்புதக்
கவியெழுதும்
காவியமே!
அன்பு
மனங்கொண்ட
மனிதநேயமே!
ஆசிகள்
அள்ளித்
தந்திடுங்கள்
ஆண்டவனின்
அருளோடு
வாழ்ந்திடுங்கள்...
இக்கவிதை. இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தலைவர்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிறுவனர். காவியத்திலகம். திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
அவர்களுக்காக நான் எழுதிய சிறு கவிதை.
வளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.
இன்று துபையிலிருந்து தன்தாயகம் செல்லும் அவர்களுக்கு
இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக!
இக்கவிதையை பார்த்தும் தற்போது மெயிலில் பதிலளித்திருந்தார்கள்
இதோ அது
மகளே!
கவிதை படித்தேன்
களிப்புற்றேன்.
நன்றியொடு
வாழ்த்துக்கள்
நவின்றேன்.
இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்
மீண்டும் சந்திப்போம்.
--வாப்பா--
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
கவிக்காக ஒரு கவிதை
உன் கவித்தடாகத்தில் கவிதை நீராடவந்தேன்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி
காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன
உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன
பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது
தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்
பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி
காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன
உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன
பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது
தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்
பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)