நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கல்லறையைத்தேடி!

உடலை விட்டு
உயிர் பிரிந்த நொடியில்
உலகில் நடந்தவைகளை
 நினைத்துப் பார்க்கும் ஒரு பின்னோட்டம்!

மூடிக்கிடக்கும் உடலினுள்ளே
 விழித்துக் கிடக்கும் உயிருக்குள்
ஓடியாடும் உலக நினைவுகள் ஓராயிரம்

விழி திறந்தால் வினோதமாவும்
விழி மூடியிருந்தால் வித்தியாசமாகவும்
வேடிக்கைக் காட்டிய உலக வாழ்க்கை

காதலென்ற கனி எவ்வித சுவையென
அறியத் தெரியாமலே! அதனை உண்டுகளித்தும்,
வெறுத்து ஒதுக்கியும் வாழும் மனங்கள் கண்டு
நெஞ்சம் சஞ்சலத்தோடு சங்கடப்பட்டது!

அன்னையின் அன்புக்கு
அகிலத்தில் ஈடேதென்ற
அகராதியை மாற்றியமைக்கும்
அன்னையர்களை கண்டு உணர்வு ஆத்திரப்பட்டது!

ஒழுக்கம் சார்ந்தவர்களென போற்றிப்
புகழப்பட்டவர்கள் கூட
ஒழுக்கக் கேடானவைகளின் பின்னே
ஓடியது கண்டு மனம் அதிர்வைக் கண்டது!

முகத்துக்கு முன்னே அழகாய் பேசி உறவாடும்
அன்பின் உறவுகள்கூட முதுகுக்கு பின்னே
முகம் சுழிக்கும் பாவனைகள் கண்டு மிரளவைத்தது!

தான் படைத்த காகித பணத்திற்கு
மதிப்பு கொடுத்து கைகட்டி நிற்கும் மனிதன்
தன்னைப் படைத்தவனுக்கு
மதிப்பு கொடுக்காது கண்டு ரத்தம் கொதிதெழுந்தது!

”இப்படி”

இரணத்திற்க்கும் மரணத்திற்க்கும்
இடைவெளியான பயணத்தில்தான்
எத்தனையெத்தனை இன்ப துன்பங்கள்
எத்தனையோ விதமான ஏற்ற இறக்கங்கள்

இவையெல்லாம் திறக்கவே முடியாத
இறுதிக் கண்மூடலின் பின்னே
கானல் நீராகும் காட்சி பிம்பங்களாய்
காட்சியளித்தது கண்டு 

பின்னோட்டம் பார்த்த மனதும்
திறந்து பார்க்கமுடியா விழியும்
உடலை விட்டுப் பிரிந்த உயிரும்

இமைகளை திறந்து பார்க்கவும்
இவ்வுலகை திரும்பிப் பார்க்கவும்
மனமேயில்லாது ஓடியது
கல்லறைத் தேடி..


டிஸ்கி// எதை எதையோ பின்னோக்கிப் பார்க்கிறோம் இதையும் பார்ப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது