நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அப்படியும் இப்படியும்..



 

காகம் கரைகிறது
இருள் கலைகிறது
கிழக்கு வெளுக்கிறது
வெளிச்ச அழைப்புகள் பிறக்கிறது
செவ்வானம் மறைந்தபடியே சேதி சொல்கிறது
சேவல்கூவி விடிந்ததை சொல்கிறது
விடிந்த பொழுது
சிலருக்கு விடியலாய்
சிலருக்கு வெருண்டதாய்
சிலருக்கு இன்பமாய்
சிலருக்கு துன்பமாய்
சிலருக்கு மகிழ்ச்சியாய்
சிலருக்கு இகழ்ச்சியாய்
விடியலென்னவோ
எல்லோருக்கும் ஒன்றுதான்
ஆனாலதில்
உணரப்படும் மனக்களுக்குத்தான்
வித்தியாசங்கள்தான் வெவ்வேறு!...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது