என்ன என்ன சந்தேகம் அப்படின்னு கேக்குகிறீர்களா? ஒன்னுமில்லை சும்மாதாங்கோ ஒரு மாற்றம் வேணுமுன்னுல்ல.
எப்பபாத்தாலும் நாமளே பதில் சொல்லிகிட்டு இருக்கோமே ஒரு தபாவாச்சி நாம கேள்வி கேட்போமேன்னுதான், என்ன கேட்கலாம்தானே! இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்
உங்ககிட்டேர்ந்து நான் அறியாதவைகளை அறிந்துகொண்டு
நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்.அதோடு அனைவருக்கும் அறியப்படுத்தவும்தான்
ஓகே ஸ்டாட் ரெடி.
1. ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?
அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும்
இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?
2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?
அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?
3. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரிடம் எளிதில் இளகிவிடுவது யார்? ஆணா! பெண்ணா?
4. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்
இப்படிதான் இருக்க வேண்டுமென வரையறை இருக்கா?
இல்லை எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாமா?
5. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோகிறவர்] எப்படியிருக்க வேண்டுமென ஆண் பெண் இருவரும் விரும்புவார்கள். அப்படி விரும்புவது ஏன்?
டிஸ்கி//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒருவழியா கேள்விகளை கேட்டுட்டேன். இதற்கு விதண்டாவாதமாகவோ. சும்மாவாச்சிக்குமோ
பதில் தராமல் உளப்பூர்வமாக, உண்மையான பதில்கள் தரவேண்டும். இது நான் மட்டும் அறிந்துகொள்ளவல்ல, நம் அனைவருமே அறியத்தான். அறிய அறியத்தானே அறிதலில் ஓர் தெளிவு உண்டாகும்.[ஆத்தி,,,, அதுக்குமீறி சேட்டைபண்ண வாரவுகளுக்கு இங்கே இடமில்லை சொல்லிபுட்டேன் ஆமா ஓகேவா?
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.