நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னில் நீ


வனமெங்கும் பூக்களின் வாசமாய்
வானம்போல் பரந்து விசாலமாய்
மனமுழுவதும் நிரம்பிவழிகிறாய்
நினைவுகளின் உதிரமாய்


சலசலக்கும்  நீராய்
நீந்திவரும்  தென்றலாய்
நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்
உள்ளத்துக்குள் உயிராய்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தமிழே! தமிழா!


தமிழே தமிழே உனை நானும் மறவேனா
தமிழே தமிழே உனைநானும் பிரிவேனா

தமிழே தமிழே தாலாட்டும்கேட்டேனே
தமிழே தமிழே தாய்மடியும் நீதானே

தமிழே தமிழே உன்எழுத்து பூச்சரம்
தமிழே தமிழே உன் வார்த்தை பூபாளம்
தமிழே தமிழே உன்பேச்சு தேன்கொஞ்சும்

தமிழே தமிழே தமிழர்கள் தம்மண்ணில்
தமிழே தமிழே தமிழர்கள் படும்பாடு
தமிழே தமிழே நீபார்த்தாலும் சகிக்காது

தமிழே தமிழே தமிழர்கள் உன்மக்கள்
தமிழே தமிழே உன்பிள்ளை கண்களிலே
தமிழே தமிழே கண்ணீரும் வரலாமோ

தமிழா தமிழா தமிழ்மைந்தர்களின் ஈனத்தை
தமிழா தமிழா துப்புரவாய் துடைத்திடவே

தமிழா தமிழா தூயவனாம் இறைவனிடம்
தமிழா தமிழா துணிவைத்தரசொல்லி வேண்டிடுவோம்

தமிழே தமிழே எனதருமை தாய்த்தமிழே
தமிழ்மொழிதான் எனக்கென்றும் தாய்மொழியே......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்


எல்லாம்வல்ல இறையோனே!
எங்களைக்காக்கும் ரஹ்மானே!

மண்ணால் ஆதம் நபியைப்படைத்து
அவருக்குள்ளிருந்து இவ்வுலகிலுள்ள
அனைத்து மனிதர்களையும் வெளிப்படுத்தி

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு
மாநபிகளை மக்களுக்குத்தந்து அவர்களின்மூலம்
அனைவருக்கும் அறிவுறைகளையும்தந்தாய்

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராகீம் [அலைஹிஸ்ஸலாம்]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை அறியவைத்து
மனிதர்களின் பொருமைக்கும் இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத்தந்து
மகத்துவமிக்க மாபெரும் அருளாளன் ஆனாய்

இப்ராகீம்நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும்நாள்வரை
இம்மியளவும் இம்மக்கள் மறந்திடாதவாறு
இத்தியாகத்திருநாளாம்
ஹஜ்ஜுப்பெருநாளை எங்களுக்குத் தந்தாய்

புனித இடத்திற்கு இறுதிக்கடமைக்கு
சென்றுள்ள மக்கள் சரம்சரமாய் கண்ணீர்மல்க
எங்களின் ஹல்பும் உருக எங்களுக்கும்
புனிதபயணத்திற்கு ஒருவாய்ப்பளிக்கச்சொல்லி
விசும்பி வேண்டி நிற்கிறோம் எங்கள் இறைவா!

இப்பெருநாளின் பொருட்டாய் இவ்வுலகிலுள்ள அனைத்து உள்ளங்களிலும் சாந்தியும் சமாதானமும் இறைவனின் அருளும் உண்டாவதாக!
உலகிலுள்ள அனைவருக்கும்
 தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அடிப்பெண்ணே


சித்திரைப்பெண்ணே, உன்சினத்தால் வாழ்வை சீரழித்துவிடாதே

வைகாசி பெண்ணே உன்வரம்புமீறிய வார்த்தையால் வாழ்வை
வதைத்துக்கொள்ளாதே.


ஆணிபெண்ணே, உன்ஆதாரமில்லாத ஆத்திரத்தால் வாழ்வை அழித்துவிடாதே.

ஆடிப்பெண்ணே, உன்அளவுக்குமீறிய ஆட்டத்தால் வாழ்வை அஸ்தமனம்மில்லாமல் ஆக்கிக்கொள்ளாதே.

ஆவணிப்பெண்ணே, உன்ஆணவத்தால் வாழ்வை அலங்கோலம் ஆக்கிவிடாதே.

புரட்டாசிப்பெண்ணே, உன்பொல்லாதாத குணத்தால் வாழ்வை புண்ணாக்கிக்கொள்ளாதே

ஐப்பசிப்பெண்ணே, உன்ஐயத்தைமீறி அதிகாரம் செய்யாதே

கார்த்திகைப்பெண்ணே, உன்கற்புக்கு கலங்கதை கற்பித்துவிடாதே

மார்கழிப்பெண்ணே, உன்மனம்போனபோக்கில் வாழ்வை நடத்திவிடாதே

தைப்பெண்ணே, உன்தவறினால் வாழ்க்கையை தவறவிட்டுவிடாதே

மாசிப்பெண்ணே, உன்மரபுகளை மறந்துவிட்டு வாழ்ந்துவிடாதே

பங்குனிப்பெண்ணே, உன்பண்பான குணத்தால் மற்றவைகளை தவிர்ந்து
பவித்ரமானதாய் உன்வாழ்வை பளிச்சென்று ஆக்கிக்கொள்.......

[டிஸ்கி] பெண் என்ற இடத்தில் ஆணென்றும் போட்டுக்கொள்ளலாம்.
எப்படி ஒரே கல்லில்.......]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இனிய நடை

பச்சைப்பசேலென்ற
புல்வெளி அதன்மேல்
பச் பச்சென இச்சிட்டபடி
பதிந்தன கால்கள்

புல்வெளிமேல்
படுத்திருந்த பனித்துளிகள்
பதிந்து பதிந்து
சென்ற கால்களை
கிச்சுகிச்சு மூட்ட

இரவு வானத்தில்
விழித்திருந்த வெண்ணிலா
இவளின்
இன்முகத்தைக் கண்ணடித்திட
இரைந்து கிடந்த
நட்சத்திரத்தின் ஒளியை
இமைக்காமல்
இவளும் ரசித்திட

அமைதியான இரவுக்குள்
ஆவாரம்பூவின் வாசம்
அதோடு  சில்லென்றெக்
காற்று கன்னத்தைஉரச

அந்நேரம்பார்த்து
தொலைப்பேசியும் சினுங்கிட
அன்புச்செல்லத்தின்
அழைப்பும் வந்திட
அத்திப்பூப்போன்று
அதரத்திலொன்று தந்திட

ரசிக்கவைத்து
மனம்
இனிக்கவைத்த
புல்வெளிக்கும் பனித்துளிக்கும்
வெண்ணிலாவுக்கும் நட்ச்சத்திரத்திற்கும்
ஆவாரம்பூவுக்கும் தொலைப்பேசிக்கும்

பிரிய மனமில்லாமல்
பிரியா விடை சொல்லியபடியே
பாவையவள்  மெல்லநடந்தாள்
தன் மனமுழுதும் மகிழ்வாய்....





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பார்வையற்றோரின் புலம்பல்



      என்னைப்போலவே
          என் தெருவிளக்கும்

     எனக்கு கண்ணிருந்தும் ஒளியில்லை
                                            அதற்கு,,,
                      விளக்கிருந்தும் ஒளியில்லை..





சூக்களே!

உங்களுக்கும் அரசாளும்
எண்ணம் வந்துவிட்டதோ

அடிக்கடி அரியாசனத்தை
          நோக்கியே போகிறீர்களே...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வசமானது மனது



சின்னகுயிலின் கானம்
செவியை சிறைப்படுத்தியதுபோல்

சில்லென்றகாற்று செந்தூரமேனியை
சிலிர்ப்பாய் தழுவியதுபோல்

தேன்துளிகள் தெளித்து செவ்வகஇதழை
நனைத்ததுபோல்

சிறைபிடித்த கைகளுக்குள்
சிக்கிகொண்ட சின்னக்கிளியாய்

மயக்கம்தந்த விழிகளுக்குள்
மண்டியிட்டு கிடந்த வண்ணமயிலாய்

உயிர் பூ உருகுது உனக்குள் மிளிர
ஒருநாளும் மறவேன் என்னுயிரும் கரைய

கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்

வருடிவருடி வார்த்தையால் நீயும்வசபடுத்த
வசம்புக்குழைத்து தேனில் தந்ததுபோல்
வசமாய் காதலும் உன்வசமாகிப்போனது...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எதுவும் நடக்கலாம்

அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்

காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்

அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்

பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்

அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்

அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி

அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி

அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்

சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்

எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி

எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை

இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அறம் செய மற


அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவண்ஜனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்

தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........





ஒருமுறை

 மனிதனுக்காக  படைக்கப்பட்ட
அனைத்தும் ”ரீயூஸ்”
மனிதன் மட்டும் ”ஒன்யூஸ்”

[இது சும்மா ஒரு ஷைடு பிட்]



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அன்னையே அமுதம் தா


அவசர உலகமென்றபோதும்
அன்னை என்றென்றும் அன்னையே!

அழகு குறைந்து விடும் என்று
அழுகிற குழந்தைக்கு அமுதூட்ட
மறுக்கலாமா

ஆபீஸ்போகும் அவசரமானாலும்
அன்னம் ஊட்டிவிட நேரமில்லாமல்
போகலாமா

பெற்றபிள்ளைகளிடம் மனம்விட்டு பேச
பெற்றவளுக்கு நேரமில்லை
பணப்பிடியில் சிக்கிக்கொண்டு
பாசத்தை ஒதுக்கி   பறந்து திரிகிறாள்

பணம்வந்து சேர்ந்தபின்
பந்தபாசம் வந்து கிட்டுமா
தள்ளி தள்ளிபோனப்பின்
சேயின் மனம் ஒட்டுமா

அவசர உலகில் எல்லாம் அத்தியாவசியம்
ஆனால்
அதைவிட பிள்ளைகளின் பாசம் முக்கியம்

மெழுகாய் உருகியபோதும்
சற்றுசாந்தாமாய் பிஞ்சுமனங்களையும்
நுகர்ந்து பாருங்கள்

அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்
அவர்கள்சொல்வதையும் காதுகொடுத்துகேளுங்கள்
அவர்களுடன் ஒன்றிவிளையாடுங்கள்

சேர்ந்து உண்ணுங்கள்
அணைத்து உறங்குங்கள்
சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

உறக்கம்


நீ உறங்குவதற்கு முன்
உன் ஒவ்வொரு செயல்களையும்
நினைத்துப்பார்

தவறுகள் செய்திருந்தால்
இனி அதைப்போல் முடிந்தவரை
செய்ய கூடாது என--முடிவெடுத்துக்கொள்.


நல்லது செய்திருந்தால்
இனிஇதேபோல் தொடர்ந்துசெய்யனும் என
தீர்மானப்படுத்திக்கொள்

நாளடைவில் நல்லதை மட்டுமே
செய்வதை நீயே உணர்வாய்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

எதைத்தொலைத்தோம்

எதையோ தினம் தினம் தேடுகிறோம்

அப்படி எதை தொலைத்தோம்?
நித்தம் நித்தம் கனவில் வருவதை
நிஜங்களாக்க துடிக்கிறோம்.
கண்ணுக்குள் வலம்வந்து

நெஞ்சுக்குள் குடிகொண்ட
குடும்பத்தை விட்டு விட்டு-
காகிதபணத்திற்காக கடல்கடந்து
கானகம் வந்தோம்

நாடுவிட்டு நாடுவந்தும்-நாம்
நினைத்தது நடக்கலையே! என
நம்மை நாமே தேற்றித்தேற்றி   நம்
கவலைகளை மறக்கிறோம்
பாலைவனம் வந்தபின்னே   நம்

குடும்பம் சோலைவனம் ஆனபோதும்  நாம்
இழந்தது எல்லாம் திரும்பிடுமா?
நம் இளமை மீண்டும் வந்திடுமா? என
ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும்
மனதிடம் ஆறுதலும் சொல்லுகிறோம்

அமைதியை தேடித்தேடி  தினம்
ஆளாய்ப்பறக்கிறோம்  அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்

எதையோ தொலைந்ததாய் நினைத்து நினைத்து
நித்தம் நித்தம் தேடுகிறோம்  ஆனால்
எதைத்தொலைத்தோம் என்றுதான்
“விடை தேடுகிறோம்”



[இந்த கவிதை /எதை தேடுகிறோம்/  என்ற தலைப்பிற்காக   அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதியது]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கவிக்காக ஒரு கவிதை


உன் கவித்தடாகத்தில் கவிதை நீராடவந்தேன்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி

காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன

உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன

பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது

தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்


பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஒரே தவிப்பு

மஞ்சத்தின் கட்டிலில் கிடந்துகொண்டு
வெற்றுமடியையே உற்றுப்பார்த்தபடி
மனம்குமுறி அழுதாள் மங்கை
மழழை வரம் கேட்டு

குப்பைத்தொட்டியில் கூளங்களுக்குநடுவில்
குட்டிக் கைகால்களை உதைத்தபடி
கூக்குரலிட்டுஅழுதது மழழை
அன்னை வரம் கேட்டு......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

காற்றோடு கலந்து





அன்புத்தோழியே அடிக்கடி சொல்வாயே
காற்றா”டி”நீ இத்தனை சுகந்தம் உனக்குள் என்று

இதோ கடல்கடந்துவந்தபின்பு
உன்னைநான் காற்றாய் நேசிக்கிறேன்
சுற்றிவரும்காற்றை சுவாசித்தபின்
நீவிடும்மூச்சுக்காற்று எனைவந்து சேர்வதால்

பூந்தென்றல் தவழ்ந்து வந்து
என்பட்டுத்தோள்களை உரசும்போது நீ
என் தோளில் சாய்வதுபோல் உணர்கிறேன் –இதே
நிலையில்தான்  நீயும் எனை  நினைப்பாய் என்று நம்புகிறேன்

குளிர்காற்று என் கைகளுக்குள் குளிரூட்டும்போது
நீ என் கைகோர்த்து நடக்கிறாய்என்றெண்ணி என்கைகளை
இயல்பாகவே இறுக்கிக்கொள்கிறேன் -இதே
உணர்வைதான் நீயும் உணர்வாய் என நினைக்கிறேன்

அனல்காற்று அடிக்கும்போது நீ என்மேல்
கொஞ்சம் கோபம் படுகிறாய் என
நானும் முகத்தை திருப்புகிறேன் கொஞ்சும் கோபமாய்-இதே
நிலமைதான் அங்கும் என எண்ணிக்கொள்கிறேன்

சூராவளிக்காற்று சுழண்டு வீசும்போது
நான் தவறு செய்துவிட்டேனோ
என நினைத்துக்கொள்கிறேன்-இதே
நிலவரம்தான் அங்கும் என எண்ணம் கொள்கிறேன்

துள்ளித்திரிந்த நாள்களில் நாம்
செய்த குறும்புகள் அத்தனையும்
அடிநெஞ்சிற்குள் நங்கூரம் இட்டதடி

ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி
அங்குமிங்கும் அலைந்த காலத்தை
அசைபோட்டுக்கொண்டே அயல்நாட்டில் வசிக்கிறேன்

ஆன்மாவிற்குள் ஆனந்தம் அலைபாயும்போது
அடிதோழியே அருகே நீ இருக்கவேண்டுமென்று
அடித்துகொள்ளும் நெஞ்சத்திற்கு ஆறுதல்சொல்கிறேன்

எது எப்படியோ உனைத்தேடி காற்றாகி வருவேன்
அதைநீ சுவாசித்த பின் விடும்மூச்சுக்காற்றை சுமந்தபடி
சுகந்தமான சுவாசமாய் எனைத்தேடி வருவாய்

காலங்கள் கடந்தபோதும் மரணங்கள் நிகழ்ந்தபோதும்
பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்
காற்றை சுவாசிக்கும் காலம்வரை நாமிருப்போம்
நம்முள் கலந்திந்திருப்போம் நட்பில் நிலைத்திருப்போம்..

நட்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கலங்காதே



[இது விழி வலி]
கருவிழியே ஏன் கண்கலக்கிவிட்டாய்
வேண்டுமென்றா செய்தேன்
வெறுமையாக கிடந்த விழிகளுக்கு

விபரமறியாமல் விரல் நுனியில்
மையெடுத்திட்டுவிட்டேன் அது
விழியோரத்தில் உரசிவிட்டது

அதற்காகவா
விழிவலிக்க விம்மி விம்மி குமைகிறாய்
கண்மணிகள் கரைய கரைய அழுகிறாய்

கலங்காதே
கல்நெஞ்சமல்ல எனக்கு
நீ கலங்கும்போது கனக்கிறது நெஞ்சம்

அழாதே
உன்னை அமைத்திப்படுத்த அதேவிரல்களால்
விழிகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறேன்...

[இது மனவலி]

மலரே மனதிற்குள் என்ன
மெளனபோராட்டம்

இரவு உறங்காமல் உன்தேகத்தில்
தெரியுது வாட்டம்

இதழ்களில் என்ன பனிதுளிபோல்
கண்ணீர்துளி

கலங்காதே காலையில்தெரியும்
கதிரவன் ஒளி....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

விடை தேடும் வினாக்கள்


படைத்தவனின் பயம் விட்டுப்போனதாலா
பாவங்கள் பெருகிக்கொண்டே போகிறது

பொல்லாத காரியங்கள் பெருகப் பெருகவா
பொன்னான பூமியே பூகம்பத்திற்குள்ளாகிறது

நாகரீக மோகம் நீண்டுகொண்டே போவதாலா
அரைகுறை நிர்வாணங்கள் அரங்கேற்றப்படுகிறது


மனங்களுக்கெல்லாம் மதம் பிடித்ததாலா
மனிதம் காக்கவேண்டிய மதங்களெல்லாம்
மனிதர்களைக்கொல்கிறது

சுயநலங்கள் பெருகிப்போனதாலா
சொந்த பந்தங்கள்கூட பாரமாகிப்போகிறது



வெக்கம் விட்டுபோனதாலா
வைரமாகக்கூடிய மங்கைகூட
விலைமகளாகிப்போகிறது

தன்னம்பிக்கை குறைந்துபோனதாலா
தற்கொலைகள் தலைதூக்கி நிற்கிறது

மனஇச்சைகளுக்கு மதிப்புகொடுப்பதாலா
குடிகெடுக்கும் மதுவுக்கும்
மனம் இடங்கொடுக்கிறது

வஞ்சனைகுணம் பெருகிப்போனதாலா
பிறரை வதைக்கும் வட்டிக்கு
வட்டிபோட்டு வாங்குகிறது

அறிவு அளவுக்குமேல் வளர்ந்தாலா
அழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டே போகிறது

இன்னும்

வினாக்கள் விளைந்துகொண்டேதான்
இருக்கிறது        இருந்தாலும்
இதற்காவது விடை கிடைக்குமா என்ற
ஆதங்கத்துடன் விடை பெறுகிறேன்..


அமீரகத்தில் வெளியாகும்  மாதஇதழான தமிழ்தேர் இதழில் வெளியாகியுள்ள
”வினாவும் விடையும்” என்ற இம்மாத தலைப்பிற்கான என்கவிதை. 


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

குழந்தைகள் தினம்



சின்னமலர்களே
செல்லமலர்களே
சிரித்து மகிழ்ந்திடும்
சிவந்தமலர்களே


அன்பும் பாசமும் நிறைந்து இருக்கனும்
ஆலைபோலவே தழைத்து வாழனும்
இரக்கம் ஈகையும் நிறைந்து இருக்கனும்
உழைப்பும் ஊக்கமும் தொடர்ந்து இருக்கனும்
எளிமை ஏற்றமும் சகித்து வாழனும்
ஐயமின்றியே துணிந்துவாழனும்
ஒழுக்கம் ஓர்மையும் சிறந்து இருக்கனும்



                                   உங்கள் எண்ணங்கள் உயர்ந்து இருக்கவே
                                   உயர உயரவே முயற்ச்சி செய்யனும்
                                    தாய் தந்தையை மதித்து வாழனும்
                                       தரணி போற்றவே தலை நிமிரனும்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

சிரித்துப்பார்


சிரிப்பு என்பதின் அர்த்தமே சிறப்பு
சிரித்துப்பார் உன் சிந்தனைகள் சிறகடித்துப்பறக்கும்
சிரிக்கும்போது சிந்தும் கண்ணீரில்
சிதைந்துபோன மனம்கூட சுகம்காணும்

புன்னகை சிந்தியபடி சிரித்த முகமாய் இரு
பொல்லாதவர்கூட உன்முகம்கண்டு புன்னகை பூத்திடுவர்
ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா

சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்
சிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்
நம்மை  மிருக்கத்திடமிருந்து  மாற்றிய மனித மிச்சம்

எதுவுமே அளவுக்கு மீறிவிட்டால் ஆபத்து
சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
சிரித்து வாழ்வதிலிருந்து விலகு..............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

புதுப்பித்தேன்




கதிரவனின் கதிர்வீச்சை கண்ணடித்தது சிரித்தது

காலைதென்றலுடன் கைகுழுக்கி நடந்தது





அன்னை ஊட்டிவிட அழகாய் உண்டது

அவள்மடியில் படுத்தமடி மயங்கிக்கிடந்தது



ரெட்டை பின்னல்போட்டு ரெக்கைகட்டிப்பறந்தது

மழையுடன் காதல் கொண்டு மறைந்து நின்றது



பட்டுபாவாடை கட்டி பட்டாம்பூச்சியானது

பல்லாங்குழியாடி பரவசம் அடைந்தது



பச்சைக்குதிரை தாண்டி பட்டென விழுந்தது

பாண்டியாடி கோட்டை தவறாய் மிதித்தது



பளிங்கி [கோலி]விளையாடி பத்து பத்தாய் சேர்த்தது

ஒளிந்து விழையாடி ஒப்பீ சொன்னது



கபடியாடி கொண்டு குதூகலம் அடைந்தது

கயிறு தாண்டித்தாண்டி களைத்துப்போனது



தட்டாம்பூச்சி பிடிச்சி மீண்டும் பறக்கவிட்டது

தட்டாமலைச் சுற்றி துள்ளிக்குதித்தது




உயரத்திலிருந்து  குளத்தில் குதித்தது

இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றது



முதுகில் ரெண்டடி வாங்கிக்கொண்டது

முனுமுனுத்துக்கொண்டே மீண்டும் ஓடியது


மனதிற்குள் புதைந்துள்ள மகிழ்ச்சிகளை
மீண்டும் புதுப்பித்து சிறுபிள்ளையாய்




தோன்றி சிறகடிக்கிறது மனம்
இப்படியே இருந்துவிடச்சொல்லி ஏங்குது தினம்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஏதோ நடக்கிறது




திடீரென்று
சடசடவென கொட்டிய மழை
பெருந்துளிகளாகி
என்தேகத்தைத்தொட
சட்டென்று
குடையெடுத்து பட்டென்று
விரித்தேன்

ஆனபோதும்
நனைந்துகொண்டிருந்தேன்
சுற்றும் முற்றும்
பார்த்தபோதுதான் தெரிந்தது
மழை மனதிலும்
நான்
வெறும் குடையிலும்..





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நட்பான உறவு

Free Myspace Glitters @ GlitterUniverse.com


தோழமையே தோழமையே
தோள்கொடுக்கும்
தோழமையே
உனைபார்த்து நாளாச்சி
அதனால மனபாரம்
கூடிப்போச்சி

ராக்கால வானமாய்
மனம் மூட
கறுத்தமேகமாய்
முகம் சோம்ப

இடிசத்தம்போல்
இதயத்திற்க்குள் இன்னல்
மின்னல்வந்து கண்ணுக்குள்
மின்ன
வான்மழையை எதிர்பார்த்த
வாடிய பயிராய்
உன்வரவை
எண்ணி எதிர்பார்த்திருக்கிறேன்

கறுத்தமேகம் கொட்டிடுமா
மழையை
மூடியவானம் தூறிடுமா
தூறலை

மனதிற்குள்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மயிலிறகாய் வருவாயா
தவியாய் தவித்து
தாகித்து நிற்கிறேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் கொஞ்சம் தருவாயா..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மல்லிகையே


வண்ணமல்லியே வசந்தமல்லியே
வாசம்வீசிடும் வசியக்காரியே

வெள்ளைமேனியில் பச்சை பாவாடை
அணிந்திருக்கும் நீ அழகுதேவதை

உன்பட்டுதேகத்தை
தொட்டுத்தொடுக்கையில்
எந்தன் விரல்களும்
வீணைமீட்டுதே

தொடுத்து முடித்ததும்
தலையில் வைக்கயில்
வாசம் வீசியே
சரங்களும் சரசம்பாடுதே

கொடியில் பூத்து
நீ
கொள்ளை கொள்கிறாய்

கூந்தல் ஏறியே
பலரின்
உறக்கம் கொல்கிறாய்

மணத்தைப்பரப்பியே
மயக்கவைப்பியே
மணப் பந்தலையும்
அலங்கரிப்பியே

சின்னமல்லியே உனக்கொரு
சேதி தெரியுமா
எந்தன் மன்னவன்
உன்னில் மயங்கவில்லையே

நானிருக்கையில்
அவனுக்கு
நீ எதற்கடி
என்கூந்தலுக்குள்
நீ ஒளிந்துகொள்ளடி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என் கண்ணே


கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால்
என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்

ஸ்கேன் என்னும்
கருவியோடு
என் வயிற்றுக்குள்
நடக்குது போராட்டம்

உன்உருவத்தை
பார்க்க
என்உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு
உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்

அன்னை
அழுது புலம்புகிறேனே
அமுதே
என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா

புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே
என் தவிப்பு
உனக்கு புரியலையா

பூமியைப்பார்க்க
உனக்கு விருப்பமில்லையா
இல்லை
இந்த அப்-பாவித்தாயை
பார்க்கபிடிக்கவில்லையா

மருவித்தவிக்கின்றேன்
மன்றாடிதுடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக
உருகித்தான்போகின்றேன்

பதுமையே பதுமையே
எனை காணவருவாயா
பட்டுப்பூவினமே
என்னை
பதறவைப்பாயா

காத்திருக்கிறேன்
கண்மணியே உயிருக்குள்
உருகியபடி
வசந்தமான உனைக்காண
என்வயிற்றை வருடியபடி

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மைதான்
முழுமையின் அடையாளம்

அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும்வரம்..



[ஏழு வருடங்களுக்கு முன் மனம்பட்டபாடு
அதை கிறுக்கலாய் வடித்தேன் என் எழுத்துக்களோடு]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

சுதந்திரமே சுதந்திரமே


சுதந்திரமே சுதந்திரமே!

உன் சுவாசம் தேடி அலைந்தபோது –அது
உச்சானிக் கொம்பில்
மூவர்ணங்களின் கொடியில்
மூச்சுவிட்டு அசைந்து கொண்டிருந்தது

சுதந்திரமே! உன்னை
அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு
முன்பே பெற்றுவிட்டோம் -ஆனால்
அதன் அடிச்சுவடுகூட தெரியாமல்
வாழ்வோரை காணும்போது
வியப்பதா? வேதனைப்படுவதா?

பாடசாலைகளில்
கல்வி கற்கவேண்டிய பாலகர்கள்
பட்டாசு தொழில்சாலையிலும்
கல்குவாரியிலும்.

சுத்தமான காற்றைகூட
சுவாசிக்க முடியாத
குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை
சுற்றிவலைத்த கொசுக்களிலும்
கூவத்தின் நாற்றத்திலும்.
அநியாயத்தில் கைகளில்
நியாயத்தின் குரல்வலைகளும்.

சகோதரத்துவத்தோடு
வாழவேண்டிவர்களின் ஒற்றுமை
சாதிமத சண்டைகளால்
வெட்டிக் கொன்று கொண்டும்
தனக்குச் சொந்தமானவைகளைக்கூட
தன்னோடு வைத்திருப்பதும்
ஆபத்தாகவும்.

அர்த்த ராத்திரியில்
ஆண்களே தன்னந்தனியே
வெளியில் செல்வது முடியாமல் போவதும்
முகம் திறந்த திருடர்களின்
கொள்ளையடிக்கும் மோகமும்
நாளுக்குநாள் கூடுவதும்

இப்படி சுதந்திரமே! நீ இருந்தும்
இல்லாததுபோலானதேயென
இவர்களின் நிலையை நினைத்து
வருந்தும் மனம் புண்ணாகிபோகிறது.

ஆனால்!
உன்னை அத்துமீறி
பயன்படுத்துவோரை காணும்போது
ஆத்திரப்படுவதா? ஆதங்கப்படுவதா?

அன்புக்கணவனையும்
ஆசைக் குழந்தைகளையும்
அந்தரத்தில் விட்டுவிட்டு
தன்சுகங்களுக்காக
தடுமாறிப்போகும் மனைவிகள்!
தன்னையே நம்பிவந்த மனைவி மக்களை
தவிக்க விட்டுவிட்டு
தன்னலத்துக்காக
தலைமறைவாகும் கணவர்கள்!

தன்சுதந்திரம் பறிபோகுதென
தன்னைப் பெற்றவர்களையே!
பெருஞ்சுமயையாய்
பெற்றபிள்ளைகளே நினைக்க
பெருகி வழியும் முதியோர் இல்லங்களில்
நெஞ்சுருகும் சோகங்கள்!

வயிற்றுக்கே போராடும்
வறுமையுடையோர்களை
வசதிபடைத்தோர்கள் வாரியணைக்காது
அன்றாங்காய்சியாக்கி அடிமாடுகளாய்
அடிபணியவைக்கும் அல்லல்கள்

முழுவதும் மூடிய காலம்போய்
சுதந்திரம் என்ற பெயரில்
முற்றும் துறந்தவராய் அலைந்துதிரியும்
ஆபாசத்தின் அவலங்களென
சுதந்திரத்தை
அசுத்தமாக்குவோரை எண்ணி
நெஞ்சம் புலம்பித் தவிக்கிறது.

சுதந்திரமே!
உன்னை அன்னியர்களிடமிருந்து-பலபல
சோதனைப்பின் சொக்கத்தங்கமாய்
வென்றெடுத்தோம்
அதை நம்மவர் சிலரின்
சுயநலத்துக்காக மட்டும் நீ
சொந்தமாகி மீண்டும்
அடிமையாகிவிடாதே!

சுதந்திரமே! சுதந்திரமே!
உன் சுதந்திரக் காற்றால்
இந்த தேசதத்தை சுத்தப்படுத்து
உன் சுகந்தமானகாற்று
இவ்வுலகை சுற்றியடிக்கட்டும்
அதில் இப்புனிதபூமியே
ல்லாங்குழல் வாசிக்கட்டும்
உலகெங்கும் சுதந்திரத்தின்
சுகங்கள் பரவட்டும்
மனங்களனைத்தும் இணைந்துஒருதாய் மக்களாய் வாழட்டும்.....


/இதை சுதந்திரதினத்தன்று :தமிழ்குடும்பத்திற்காக: எழுதியது/
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பத்துக்கு 10



இந்த தொடருக்கு என்னை அழைத்த தோழர் தியாவிற்கு நன்றி

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்


கவிஞர்

பிடித்தவர் –கவிக்கோ அப்துல்ரஹ்மான், கவியரசு வைரமுத்து

பிடிக்காதவர்- கொச்சையாக எழுதும் கவிஞர்கள்


தியாகி

பிடித்தவர்-  வீரபாண்டிய கட்டபொம்மன்

பிடிக்காதவர்-எட்டப்பன் [போடனுமுள்ள]


இயக்குனர்

பிடித்தவர்- விக்ரமன் K. S. ரவிக்குமார்

பிடிக்காதவர்- எஸ்ஜே சூர்யா


அரசியல்வாதி

பிடித்தவர்- காமராஜர்

பிடிக்காதவர்-என்னத்தசொல்ல [புரியுமுன்னு நினைக்கிறேன்]


விஞ்ஞானி

பிடித்தவர்- டாக்டர் A P J அப்துல்கலாம்

பிடிக்காதவர்- தெரியவில்லை
                         
நடிகை
பிடித்தவர் --பொய்சொல்லபிடிக்கலைங்கோ அதனால

பிடிக்காதவர்--யாரையுமே பிடிக்குமுன்னு சொல்லமுடியலைங்க

நடிகர்
பிடித்தவர்- சிவாஜிகணேசன்

பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்



பேச்சாளர்-

பிடித்தவர்- பாரதி பாஸ்கர்

பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்


எழுத்தாளர்

பிடித்தவர்- அப்துற் றஹீம், சுஜாதா,

பிடிக்காதவர்-சோ

இசையமைப்பாளர்

பிடித்தவர் இளையராஜா, A R ரஹ்மான்

பிடிக்காதவர்- ஸ்ரீகாந் தேவா.

இத்தொடரை தொடர நான் அழைக்கும் அன்பர்கள்

ப்ரியமுடன் வசந்த்
மேனகா சத்தியா
வெண்ணிற இரவுகள், கார்த்திக்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

நாந்தானுங்க



நாட்டுக் கோழி பேசுறேன்
நானும் கூட்டம் கூட்டமாக பறக்கும்
பறவைகள்போல் பறக்கனும் என்றுதான்
ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லையே பறக்க


சிறகுகள் இருந்தும் சக்தியில்லாததால்
குப்பைமேடுகளிலும் கூரைகளிலும் 
பறந்து பறந்துதான் -என் ஆசைகளை
நிறைவேற்றுகிறேன் என்ன செய்ய

என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...



அன்புடன்: மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என் மனவானில்


அடியே காதலியே
அன்பான தேவதையே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்
நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை உலுக்கி
அதிலுதிர்ந்த உணர்வுகளை
உதிராமல் கோர்த்தாய்

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி
அதை தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை கேட்கிறாய்

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடிபோடி காதலியே
என்றுமே நீ என் தேவதையே!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது