நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துபையில் முத்தான மூன்று விழாக்கள்.


துபையில் முத்தான மூன்று விழாக்கள் நடபெறுகிறது நடைபெறவும் இருக்கிறது. இன்றிலிருந்து தொடங்கும் இவ்விழாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் புத்தக் வெளியீட்டு [அறிமுக] விழாவில் பல படைப்பளிகளின் படைப்புகள் வெளியிடப்பட [அறிமுகப்பட]யிருக்கிறது அதில் எனது முதல் கவிதை நூலான “ உணர்வுகளின் ஓசையும் அடங்கும்.

இந்நிகழ்வில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லையே என மனம் மிகவும் வருத்தப்படுகிறது ஏனெனில் நான் தற்போது இந்தியாவில் இருக்கிறேன்.இறைவன் எதை நாடியுள்ளானோ அதுதானே நடக்கும் .இருந்தபோதிலும் எனது நட்புகளும் அன்புகளும் இதில் கலந்துகொண்டு சிறப்பிப்பா[பீ]ர்கள் என்பதால் சற்று ஆறுதல் அடைகிறேன்
 துபை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும்  எனது அன்பார்ந்த நெஞ்சங்களும்  இவ்விழாவிற்க்கு சென்றுவருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
சென்று வந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்தால் மனம் மகிழ்வேன்..நான் சென்றுவந்த திருப்தியையும் அடைவேன்..


இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும். மணிமேகலை மற்றும் அதன் நிறுவனர் திரு தமிழ்வாணன் ரவிதமிழ்வாணன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது