நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புண்ணியம் தேடு


மனிதா!!!

உன் மனநிலையை புரிந்துகொள்ளவே
முடியவில்லையே!
கடலின் ஆழத்தையே அங்குளம்
அங்குளமாக அளந்துவிடும் மனிதனுக்கு
மனிதனின் மனதை
மனிதனே அறியமுடியவில்லையே!

மனிதா நீ,,,,

சுயநலமாய் நடக்கிறாய்
சுயநலத்துடன் வாழ்கிறாய்
உன் தேவைகளுக்காக
அடுத்தவர்களை பயன்படுத்தும் நீ,,

அவர்களின் தேவையென்னும்போது
கண்டும் காணாமலும் போகிறாய்
மனிதப்பிறப்பே மகத்துவமிக்கது
அதை சுயநலமென்னும் சேற்றைப்பூசி
மாசுபடுத்துவதா?

சுயநலத்துடன் வாழ்வது உனக்கு சுகம்
கொடுப்பதாக தோன்றும் அதுவே
உனெக்கென்றுவரும்போது
சுமையிலும் சுமையாக மாறும்.

மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
புண்ணியம் செய்து பலனைபெறு
புனித மனிதனாய் பூமியில் வாழு.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தாயும் சேயும்



சங்கடங்கள் சருகாய் சடசடத்தபோது
சற்றேசாய்ந்தது தலை தாய்மடியைத்தேடி
சகலமும் சலசலத்தது கண்ணீராய் மாறி..



அள்ளியணைத்து முகர்ந்தபோது
அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

சின்ன வெண்ணிலா


வானவீதியில் உலாவரும் சின்னவெண்ணிலாவே-என்

வாசல்வருகையில் மட்டும் என்னடி வெக்கம்

மேகமூட்டங்களோடு மெல்லமெல்ல ஒளிந்துசெல்கிறாய்



என் முற்றுத்து வாசலிலும் சற்றுஎட்டிப்பார்

அங்கும் உன்னைப்போல் ஒரு குட்டிவெண்ணிலா

என் குழந்தை வடிவில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது