நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மானங்கெட்ட காதல்





உலகம் எந்தளவுக்கு போய்கொண்டிருக்கு, பெண்மைக்கும் மதிப்பில்லை, பெற்றோருக்கும் மதிப்பில்லை எல்லாம் காதலென்றபோர்வையில் காமம் கொடுக்கும் தொல்லை.
பலயிடங்களில் இரக்கமெல்லாம் அரக்கத்தனமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி இப்படி செய்யும் அனைத்துபெண்களுக்கும் ஒரு பாடம், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பெருகிக்கொண்டேதானிருப்பார்கள்.

காதலென்ற போர்வையில்
காமங்கள் அரங்கேறியதால்
ஏழுவருட  இன்றியமையாக் காதல்
இன்று  எழவெடுக்க காத்திருக்கு
இவனைப்போன்ற
பச்சை  துரோகிகளுக்கு
இலவசமாய் பெண்கள்
ப[மு]ந்திபோடவும்  தவமிருக்கு !

காதலை காமத்தோடு
கைக் குலுக்க வைத்தவனே
காதலனாக வேசமிட்டு
கன்னிதிரை விளக்கியவனே
கன்னியின் கண்ணீர்  கண்டும்
கல்நெஞ்சமாகி கிடக்கிறாயே
கா[ம]தல்மோகம் தீர்ந்ததாலே
காத[லை]லியை
காலில்போட்டு மிதிக்கிறாயோ!

உன்னை காதலித்த பாவத்துக்கு
உன் உடல்பசிக்கு இறையாகி
உன்வாரிசை  சுமந்தபடி
ஊர் வசைக்கும் ஆளாகி
உன்முன் கெஞ்சிக்
கண்ணீர் வடிப்பவளை
உதறி உதறி  தள்ளுகிறாயே
உண்மையிலே 
உனக்கு  உள்ளமென்று ஒன்றிருக்கா?

அப்”பாவி”யே
பேதை பெண்ணல்லடி  - நீ
போதைப்பெண்
காதல்போதை
உன்கண்ணை மறைத்ததாலே
கண்விழிக்கா கருக்குஞ்சை
கருப்பையில் சிறையிவைத்து
சித்திரவைதை செய்யும் நீ
சீர்கெட்ட சிறுக்கியடி

உண்மைக்காதல் இல்லையடி
இது உண்மைக்காதல் இல்லையடி
இருமனம் இணைந்தாலும்
திருமணம் நடக்கும் முன்பே
இரு உடல்கள் இணைத்துக்கொண்டு
உடல் சுகத்தை தேடிக்கொண்ட
இந்த காதலெல்லெல்லாம்
 உண்மைக்காதல் இல்லையடி

அடி வெக்கங்கெட்டவளே
உன் முகம் பார்த்து
பேசுவதற்கே மறுப்பவனிடம்
உன்னை வேண்டாமென 
உதறி விடுபவனிடம்
நீதான்
வேண்டுமென வாதாடி நிற்கிறாயே
நீ இல்லையெனறால்
செத்துவிடுவேன் என்கிறாயே
சோற்றைத்தானே உண்ணுகிறாய்
சொரணையேதுமில்லையாடி

கொஞ்சிக் கொஞ்சி மிஞ்சியவன்
குற்றமெல்லாவற்றையும்
உன்மேல் சுமத்தியும்
கெஞ்சுகிறாய் கதறுகிறாய்
கொஞ்சமும்  இரங்கவில்லை
உன்மேல்  ஒருதுளியும் காதலில்லா
கொடுமனங் கொண்டவனென்றுகூடவா
உனக்குப் புரியவில்லை!

உம்போன்ற பெண்களாலே
பெற்றோருக்கும் ஈனமடி
உன்னை பெற்ற பாவத்துக்கு
பெற்றோருக்கும் கிடைக்குதே 
தண்டனையடி!
உறுதியற்ற காதலெல்லாம்
உடல் கேட்டு அலையுமடி
உடல்தேவை தீர்ந்த பின்னே
உதறிவிட்டு நகருமடி

இறையச்சம்  களைந்துவிட்டு
இச்சைகளின்பின்னே நடந்து செல்லும்
உன்னைப்போன்ற பெண்களுக்கு
இதுவெல்லாம்
உலகில் கிடைக்கும் பாடமடி!

இன்னும்
என்னவெல்லாம் நடக்கப்போகுதோடி!
எத்தனை கேவலங்கள்  
கண்முன் நடந்தாலும்
கேடுகெட்டு போவதற்கு
உன்னைபோல்
இன்னும் எத்தனையோ
இளம் ஜோடிகள் தயாரடி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முத்தங்களின் மொழிபெயர்ப்பு.


சத்தமில்லா முத்தங்களை
சத்தத்தோடு முத்தமிட்டு
சப்த நாடியிலும்
சப்த ஸ்வரங்கள் எழுப்பும்
எழுத்து முத்தம்!

முத்தமிடும்போது
சத்தமிட்டுக்கொண்டே
சப்தநாடியையும்
சப்தமில்லாமல் அடக்கும்
இதழ் முத்தம்!

நாசியின் வழியே
சுவாசித்து இழுக்கும்போது
ரத்த நாளங்களுக்குள்ளும்
ரம்யம் ஏற்படுத்தும்
நுகரும் முத்தம்!

உயிரெழுத்தும்
மெய்யெழுத்தும்
உயிர்மெய்யெழுத்தாய் இணைந்து
ஒருவாக்கியம் உருவாவதுபோல்,

எம்முத்தம் என்றபோதும்
அம்முத்தம் அமுதமாகி
அடிநெஞ்சினுள் ஆளப்பதிந்து
அன்புதன்னை அதிகமாக்கும்!

குழந்தைதொட்டு குமரிவரை
கனிவுதொட்டு முடிவுவரை
முத்தங்களுக்கு
முதுமையேயில்லை!

முத்தங்களில்லா வாழ்க்கை
முழுமையடைவதில்லை
மனிதவாழ்வில் மரணம் வரும்வரை
முத்தங்களுக்கு என்றுமே
முற்றுப்புள்ளியில்லை..

டிஸ்கி// இக்கவிதை இலண்டன் வானொலிக்காக எழுதியது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எப்பொழுதெனில்!


மெய்மறப்பது 
எப்பொழுதெனில்?
மெய்யுருகி மனமினைகையில்!

தன்னிலை மறப்பது 
எப்பொழுதெனில்?
தன்னிணையுடன் தஞ்சம் புகுகையில்!

நெஞ்சங்கள் சிலிர்ப்பது 
எப்பொழுதெனில்?
நினைவுகளிலும் சங்கமிக்கையில்!

இரத்த நாளங்கள் குளிர்வது  
எப்பொழுதெனில்?
இணைகள் ஒருவருக்கொருவர் 
ஆறுதலலிக்கையில்!

முழுமனமுடல் மூச்சில் கலப்பது 
எப்பொழுதெனில்?
முதுமையிலும் ஈருடல் 
ஓருயிராய் உருகுகையில்!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது