நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முன்பாவம் [முன்செய்தபாவம்].



மனக்கிடங்கில்
மன்றாடிக் கிடக்கும் ஊமை உணர்வுகள்
மங்காமல் மறையாமல் கிடந்தழும்
மடிந்துவிட வேண்டி

ஊற்றெடுக்கும் உணர்வுப் பிளம்புகள்
ஊழிக் காற்றிலும்
உதிர்ந்துபோன இலைகளாய்
ஊசலாடியே உயிர்வதை செய்தபடி 
எரிவதெல்லாம்
ஒளியாகாது எனத்தெரிந்தும்
எரிந்துகொண்டிருகிறது
சிறு நெருப்பு
அணைந்து விடாது
அடைக்கலம் கொடுக்க
ஆளில்லையென்று துடித்தபடி

இன்பக்குழிகளுக்குள்
இளைப்பாற ஏங்கிய இதயமாய்
பனிப்போர்வைக்குள் சிக்குவதாய் எண்ணி
பாவச்சிறைக்குள் மாட்டிக்கொண்டது சாப விதி

உயிர் நசித்து!உயிர் நசித்து!
ஊறுவிளைவிக்கும் மன உலைச்சலுக்குள்ளே
உடல் எரித்து!உணர்வு குலைத்து!
உயி[து]ர்நாற்றம் வரக்காரணமென்னவோ முன்பாவ சதி
-----------------------------------------------------------------
இலண்டன் வானொலியில் வியாழன் கவிதை நேரம் பகுதியில் சகோதரி பேகம் அவர்களால் வாசிக்கப்பட எனது கவிதை..
மிக்க நன்றி சகோதரி பேகம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

2 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்...

    மீண்டும்
    லண்டன் வானொலியா....ஆஆஆஆஆ

    பதிலளிநீக்கு
  2. இலண்டன் வானொலியில்...
    “காண்ட்ராக்ட்” (ஒத்திகை) எடுத்திருக்கீங்களா மேடம்...

    அவ்வ்வ்வ்வ்.....

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது