நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பசியின் வலி.


 

 
 
ருசியோடு இருக்கும் உணவை
பசியார நினைத்து
ஒரு கவளமெடுத்து
உண்ண துவங்கும்போது
 
பட்டினியால் வாடி  வதங்கிய
வயிறுகளும்
பதராகிப்போன உடல்களும் முகங்களும்
கண்முன்னே ஊசலாட
 
பசி மரத்து
ருசி வெறுத்து 
உயிரிடுக்கில் நுழைந்து
உள்ளத்தைக் குடைந்தது ஒரு வலி…

 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது