
தேடி தேடி பெற்ற சுகத்துக்கு
தனக்குத்தானே தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்
இறைவன் வகுத்த நியதியை மீறி
திகட்டாமல் தேடிய இன்பத்திற்கு
இறைவைன் தந்த பரிசு
திக்குமுக்காடவைக்கும் வியாதி

மாற்றான் தோட்டத்து மல்லிகையில்
தேனெடுக்க சென்ற வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
இந்த எய்ட்ஸ்
தவறென்று தெரிந்தும் தத்தித்தாவி
தவறிப்போகும் மனங்களே
உயிருள்ளவரை உள்ளச்சத்துடன் வாழுங்களேன்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

