நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தாய் மனசு





தங்கமே வந்துவிடு
என் தாமரையே வந்துவிடு
தாலாட்டி
நான் வளர்த்த
என் தாரகையே வந்துவிடு
உன்னை
நான் சுமந்த வேலையில்
பட்ட துன்பங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல!

சூடாக சாப்பிட்டால்
அதுஉனை சுட்டுடுமோ
என்றெண்ணி
சுரத்தே இல்லாமல்
நானுண்டேன் பலமாதம் -
ஆனாலின்று
நீ சுட்டுசுட்டு தள்ளுவதாய்
மற்றவர்
சொல்லக்கேட்கின்றேன்

மரத்தா விட்டது
ஒன்மனசு
என்மாரணைத்துதானே
பால்கொடுத்தேன்!
மறந்தா விட்டது
ஏனெப்பு
என் மனசுக்குள்ளேதானே
பொத்தி வளர்த்ததேன்!

தீராத
வலியெடுத்தல்லவா!
உனை பிரசவிச்சேன்-அதற்கு
கைமாறாகத்தான்
நீ தீவிரவாதியானாயோ!
ஒரு பாவமும் அறியாமல்
நான்னுனை பெற்றெடுத்த
பாவியடா!
பல பாவங்கள்செய்கிறாய்
நீயென
செய்தித்தாள்களில்
கண்டேனடா!

பதைபதைத்து
நானிருக்கேன்
பரிதவித்துப்போயிருக்கேன்
நான்பெற்றெடுத்த
பாவமோ!
இல்லை யார்
கொடுத்தசாபமோ!
இந்நிலைஉனக்குவர
அந்ததெய்வந்தான்
காரணமோ!
வயிற்றுக்குச்
சோறில்லையென்று
வக்கிரபுத்திக்காரர்களின்
வசியத்தில்
வழிதவறிபோனாயோ!

இந்த
லகுக்கே நீ
பொல்லாதவன் என்றாலும்
என்றைக்கும்
பெற்றவளுக்கு நீதான்
பிள்ளையடா!
ஒன்றும் புரியாமல்
புறப்பட்டு போனவனே!
போனதெல்லாம் போகட்டுண்டா
பொழுதுவிடியுமுன்னே
பொசுக்குன்னுவந்திடடா!

செய்தபாவம்
அத்தனைக்கும்
அந்ததெய்வமென்னை
தண்டிக்கட்டும்.
செய்தவினைபோதுமடா!
இனி
சிறப்பாய் வாழவந்திடடா!

என்கண்ணீரும் ஓயவில்லை
என்கண்களும் மூடவில்லை
என்புலம்பலும் தீரவில்லை
இன்னும்

எம்பொழுதும் விடியவில்லை
இருட்டோடு இருட்டாக
நம்துயரங்கள் போகட்டும்
வெளிச்சம் உருவாகி
நம்வாழ்க்கை செழிக்கட்டும்

வந்துவிடு
என் மகனே
என்னுயிர்
போகும்முன்னே..........

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

11 கருத்துகள்:

  1. யாரோ சிலரின் சதியால், வழி மாறிப்போனவர்கள்!! தாயின் வலியை நெகிழ்ச்சியாக சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. தாயின் மகிமையை அழகாய் சொல்லியுள்ளீர்கள்....

    பதிலளிநீக்கு
  3. //யாரோ சிலரின் சதியால், வழி மாறிப்போனவர்கள்!! தாயின் வலியை நெகிழ்ச்சியாக சொல்லி இருக்கிறீர்கள்//

    வழி மாறிப்போகும்போது வலிகூடிப்போகிறது

    தாங்கலின் கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஷஃபி

    பதிலளிநீக்கு
  4. ஒரு தாய் பட்ட அவஸ்தையை அழகா சொல்லிருக்கீங்க‌

    இதற்குப்பிறகாவது ஒரு தாயின் பாசம் புரியும்

    நல்லாயிருக்கு தொடருங்க‌

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கவிதை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பொருந்தும் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. பாதை மாறிய கால்கள் மீண்டுவர தாயின் கண்ணீரை விட வலிமையான அழைப்பு வேறொன்று இருக்க முடியாது.

    இந்தக் கவிதையை எழுதி உயர்ந்தீர்கள் மலிக்கா

    அன்புடன் புகாரி

    பதிலளிநீக்கு
  7. //தாயின் மகிமையை அழகாய் சொல்லியுள்ளீர்கள்//

    மிக்க நன்றி அபூ

    பதிலளிநீக்கு
  8. //ஒரு தாய் பட்ட அவஸ்தையை அழகா சொல்லிருக்கீங்க‌//

    ரொம்ப நன்றிங்க அபுஅஃப்ஷர்

    //இதற்குப்பிறகாவது ஒரு தாயின் பாசம் புரியும்//

    நிச்சயம் புரியனும்

    //நல்லாயிருக்கு தொடருங்க‌//

    தொடர்ந்துவாங்க கருத்துக்களைதாங்க

    பதிலளிநீக்கு
  9. //இந்தக் கவிதை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பொருந்தும் போல் இருக்கிறது//

    பொருந்தினால் எனக்கு
    மிகுந்த மகிழ்ச்சிங்க

    தாங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
    தொடர்ந்துவாருங்கள்

    பதிலளிநீக்கு
  10. பாதை மாறிய கால்கள் மீண்டுவர //தாயின் கண்ணீரை விட வலிமையான அழைப்பு வேறொன்று இருக்க முடியாது.

    இந்தக் கவிதையை எழுதி உயர்ந்தீர்கள் மலிக்கா

    அன்புடன் புகாரி//

    அன்பான ஆசானே
    தாங்களின் கவிதைகளில் தெரியும் தாக்கங்களைவிடவா

    ஒருகவிஞனே பாராட்டும்போது மனம்
    மகிழ்ச்சியில் திழைக்கிறது
    மீண்டும் மீண்டும் வரவேண்டும்
    ஊக்கங்களை அள்ளித்தரவேண்டும்

    பதிலளிநீக்கு
  11. ஒருதாயின் பாசத்தை அழகா சொல்லிருக்கிங்க கவிதை அரசியே...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது