நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துபையில் முத்தான மூன்று விழாக்கள்.


துபையில் முத்தான மூன்று விழாக்கள் நடபெறுகிறது நடைபெறவும் இருக்கிறது. இன்றிலிருந்து தொடங்கும் இவ்விழாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் புத்தக் வெளியீட்டு [அறிமுக] விழாவில் பல படைப்பளிகளின் படைப்புகள் வெளியிடப்பட [அறிமுகப்பட]யிருக்கிறது அதில் எனது முதல் கவிதை நூலான “ உணர்வுகளின் ஓசையும் அடங்கும்.

இந்நிகழ்வில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லையே என மனம் மிகவும் வருத்தப்படுகிறது ஏனெனில் நான் தற்போது இந்தியாவில் இருக்கிறேன்.இறைவன் எதை நாடியுள்ளானோ அதுதானே நடக்கும் .இருந்தபோதிலும் எனது நட்புகளும் அன்புகளும் இதில் கலந்துகொண்டு சிறப்பிப்பா[பீ]ர்கள் என்பதால் சற்று ஆறுதல் அடைகிறேன்
 துபை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும்  எனது அன்பார்ந்த நெஞ்சங்களும்  இவ்விழாவிற்க்கு சென்றுவருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
சென்று வந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்தால் மனம் மகிழ்வேன்..நான் சென்றுவந்த திருப்தியையும் அடைவேன்..


இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும். மணிமேகலை மற்றும் அதன் நிறுவனர் திரு தமிழ்வாணன் ரவிதமிழ்வாணன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உலக மக்களுக்கு எச்சரிக்கை!


அன்பு உள்ளங்களே! உலகில் பலயிடங்களில் சுனாமி சுழற்றிக்கொண்டிருக்கிறது அதே வேளை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுனாமி மற்றும் நிலநடுக்க எச்சரிக்கை விடப்படுள்ளது.


எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்புத்தேடுங்கள்.இருகரமேந்தி இறைஞ்சி கேளுங்கள். எவ்வித பயங்கரங்களும். எவ்வித சேதமும். எவ்வித அகோரங்களும் நடந்துவிடாதவாறு இருக்கவும். வரும் சுனாமி எவ்விதத்திலும் மனித வர்கங்களையும் மனிதயினத்துக்கு தேவையானவற்றைகளையும் வதைசெய்துவிடாமல் சென்றிடவும் பிராத்தனை செய்யுங்கள்.

உலகில் பலயிடங்களில் பலவாறாக அக்கிரமங்களும் அட்டுழியங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. மனிதனுக்கு படைத்தவனின்மேல் உள்ள பயம் அற்றுபோய் படைப்பினங்களின் பின்னேயே போய்க்கொண்டு அதன் கவர்ச்சியில் ஆட்க்கொண்டுவிட்டதால் ஆங்காகே ஆட்டம் காணுகிறது பூமியும் பூமியை சுற்றியிருக்கும் கடலும்.  

யா அல்லாஹ் எங்களின் குற்றங்குறைகளை மன்னிதருள்வாயாக!
யா அல்லாஹ் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னித்து
வரவிருக்கும் ஆபத்துகளிருந்தும் பாதுகாத்தருள்வாயாக!

தற்போதைய செய்தி
-----------------------------------
நகுவீர் :சுமத்ரா தீவிற்கருகில் மையப்பகுதியில் உணரப்பட்ட 8.9 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் என்பது சற்று ஆபத்தான கட்டமே இன்னும் ஒரு மணி நேரம் காலக்கெடு கொடுக்கப்பட்டிருப்பதால் நாங்கள் [களஞ்சியம் சுனாமி எச்சரிக்கை மற்றும் சமுதாய வானொலி ] கடலோர மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கி வருகிறோம்!

கார்த்திக் : ஆனால் இணையத்தில் விகடன் மூலம் அறியப்பட்ட தகவல் என்னவென்றால் கடல்சார் தகவல் மையம் சுனாமி எச்சரிக்கையை திறும்பப்பெற்றதாக தெரிவிக்கின்றதே?

நகுவீர் : அது பற்றி கருத்து இல்லை ஆனால் 8.9 ரிக்டர் என்பது ஆபத்தான கட்டமே! நாங்கள் கடற்கரையோரம் அமைந்துல்ல எங்கள் வானொலி நிலையத்தில் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தோம், ஆகையால் தயவு செய்து அஜாக்கிரதையாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும்

கார்த்திக் : கண்டிப்பாக செய்துவிடுகிறேன்

நகுவீர் : கடந்த முறை சுமத்ராவில் ஏற்பட்ட அதிர்வைப்போலவே இம்முறை மையப்பகுதில் கீழ்ப்பகுதியில்ல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
இங்குள்ள மீனவர்கள் கூட கொஞ்சம் பொருட்படுத்தாமலே இருக்கிறார்கள் நாங்கள் கடற்கரைப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வலியுறித்தியே வருகிறோம்!

**************************************************************
மீனவர்களோ கடற்கரையோரவாசிகளோ இணையம் பாவிக்கக்கூடிய சூல்நிலையில் இருப்பார்களா எனத் தெரியது ஆனாலும் இயற்கை சீற்றத்தில் அறியாமையால் அழிந்த மக்கள் உதாசீணத்தால் அழியக்காரணமாகிடக்கூடாது முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த நபர்களை உஷார் நிலைப்படுத்துங்கள்...

இன்னும் சில மணி நேரம் கழித்து என்ன ஆகும் என எண்ணிக்கொண்டிருப்பதை விட செயல் மிக முக்கியம்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சிறகு கொடுப்பாரோ!


திருமணபந்தம் தொட்டுத்தொடர
இருமனங்கள் இணையும் முன்னே
இருட்டியது வாழ்க்கை இருமாதத்தில்
இளம் வயதில் இதயத்தில் இடி
இறப்பு வந்தது விபத்தால் உயிர்பலி

விளங்காதவள் இவளென்று
வசைபாடும் சுடுசொற்களால்
வாட்டம்கொண்டு நெஞ்சம் ஆட்டம் காண
விதவைக்கோலம் வீட்டுசிறையால்
விரக்தி கண்ட உள்ளம்

வீதி இறங்கினாலும்
வெடுவெடுக்கும் முகங்களால்
வெதும்பித் ததும்ப- மனதுக்குள்
வேதனைகளும் வேடிக்கைக் காட்டிட

இரு விழிகள் எறிய
இமைகள் சுமையால் சரிய
இதயத்தின் நரம்பெல்லாம்
இறுகியே ரணமாக

நிலவை மேகம் மூடும்போதெல்லாம்
நினைவுகள் மெல்ல திறக்க
நெஞ்சத்தின் அறையெங்கும்
நெருப்பு அனல்கள் பறக்க

பட்டாம்பூச்சியின் ரெக்கைதன்னை
பட்டென பிடுங்கிய மாயமென்ன
பட்டுபோன தன் மகளின் வாழ்வைபார்த்து
பெற்றமனங்கள் படும் துயரங்களென்னென்ன!

பாவை மெல்ல உருகுவதும்
பசலை நோயால் வாடுவதும்
பாவம் யாரும் அறிவாரோ
பசுங்கிளிக்கு வாழ்வுச்சிறகு கொடுப்பாரோ!

வழி தேடும் பயணங்கள்
வலி சொல்லும் சலனங்கள்
விழி மெல்லும் விரசங்கள்
வாழ வகைதேடும் எண்ணங்கள்

மனதுக்குள்ளே பல புழுக்கங்கள்
மறைத்து வாழும் சந்தர்ப்பங்கள்
எழுதுகோல் வழியே கவலைகள்
எழுதிட தீருமோ! இதுபோன்ற ஏக்கங்கள்!


டிஸ்கி// திருமணமான கொஞ்ச[நாட்கள்]காலத்திலேயே கணவரை பிரிந்துவா]டு[ழும் எத்தனையோ பாவைகள் அதில் ஒரு சிலரை நானும் கண்டதுண்டு அவர்களின் ஏக்கங்கள் கனவுகள் துயரங்கள். அவையெல்லாம் சொல்லில் வடிக்கத்தெரியவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனைகளை தோளிறக்கிவைக்க ஒரு தோள் தேவை அது நட்பைவிட அன்பாக ஆனால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என எண்ணிக்கொண்டே எழுதுகிறேன்! 
எனது சிறு வேண்டுகோள் இதுபோன்றவர்களை மணம்முடிக்க விரும்பும் உள்ளங்கள் எவரேனும் உண்டா! இருந்தால் இதில் தெரியப்படுத்துங்கள். இது ஒரு மாற்றுமத சகோதரி ஒருத்திகாண தேடல்!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது