நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பேராசை!...


ன்னொரு முறை
இருளுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

ம்சைகளில்லா
இன்பங்களுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

றுக்க மூடியிருந்தும்
இருவிழிகளின் இடுக்கில்
ஒளிகளின்
ஊடுருவலிருந்ததே!

வ்விருளை
அனுபவித்து ரசிக்க
அன்னையின் கருவறையில்

மீண்டும்

ன்னொரு முறை
இருந்து பார்க்க ஆசை
இமைகளைமூடி
இவ்வுலம் மறக்க ஆசை...

இக்கவிதை  திண்ணையில் வெளிவந்துள்ளது
நன்றி திண்ணை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மரித்துபோன ”மனிதம்”




ஓர் நூற்றாண்டின் முடிவில்
பிறந்து
ஓர் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
மரிக்கப் போகிறவர்கள்

பிரபஞ்சத்தின்
பரிணாம வளர்ச்சியின்
உச்சத்தில்
உருவான நிகழ்வுகளில்
வாழ்க்கிறவர்கள்
வாழ்கிறார்கள்..

அக்காலத்தில்
வாழ்ந்தவர்களை
விஞ்சிவிட்டார்கள்
இக்காலத்தவர்கள்
விண்ணையே!
மண்ணிடம்
மண்டியிட வைத்த
வியத்தகு அறிவியல்
மாற்றங்களால்..

வீட்டில் விளக்கில்லாமல்
விடிய விடிய
இருளிலேயே கழித்த
இரவுகளிருந்தது அன்று

இரவுகளை பகலாக்கும்
வெளிச்ச விளக்குகள்
விழுங்குறது
இருளையே இன்று..

வெளிச்சங்கள் மட்டும்
விரிந்திருதென்ன பயன்
இன்றுள்ள
மனிதர்களின்
மனங்களிலோ
இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
இதயங்களில்
இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..

மனிதன்
இயற்கையோடு
இணைந்திருந்த அன்று
மனிதம் தழைத்திருந்தது..

செயற்கையாய்
செயல்படத் துவங்கிய இன்று
மனதோ மரத்துபோனது!
மனிதம் மரித்துப்போனது!...

இந்த கவிதை சகோ காஞ்சி முரளி அவர்களின் ”பனை ஓசையிலிருந்து”.
அதில் சில வரிகளையும். சில மாற்றங்களையும் செய்தது என் சிந்தனைகள்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்ணே உன்னால்!..

உலகிலுள்ள அனைத்து  தாய்மார்கள். தங்கைகள். தோழியர்கள்.சகோதரிகள்.  அனைவருக்கும் என் அன்பார்ந்த ”உலக மகளிர்தின நல்வாழ்த்துக்கள்”

ன்னடி பெண்ணே!
இன்னும் உறக்கம்
இருள் விட்டு விலகி
எழுந்திரு கண்ணே!

ன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்
எதுவென்றபோதும்
எதிர்கொள்ளடி பெண்ணே!

விழித்திருக்கும்போதே
திருட்டுப்போகும் உலகம்
விழி உறங்கும்போதும்
விழிப்புணர்வு நெஞ்சுக்குள்
திடமாய் இருத்தல் வேண்டும்

நீ
எட்டுவைத்து நடக்கும்
ஒவ்வொரு அடியும்
ஏகாந்தமாக வேண்டும்
எச்சரிக்கையும் கூட வேண்டும்
இன்னல்கள் களைய வேண்டும்
இருளகன்று  ஒளிவீசவேண்டும்

தையுமே எதிர்கொள்ள
இயலவில்லை யெனச்சொல்லி
இருந்தயிடத்திலே முடங்கிவிடுவதா?
இல்லை
மூலையில் கிடந்து விடுவதா?
முயற்சி செய்!முயற்சி செய்!
முடியாதது என்று
எதுவுமேயில்லை

முன்னேறி  வருவது
முக்கியமில்லை!
முன்னேறும்போது
பின்னுக்குள்ளத்தை
முறித்துவிட்டேறினால்
முன்னுக்கு வந்தும்
பயனொன்றுமில்லை!

டுப்படியாகட்டும்
அரசவையாகட்டும்
ஆட்சிசெய்யும் போது
அளவுக்குமீறிய
அவசரமோ! ஆத்திரமோ!
ஆணவமோ! அதிகாரமோ!
ஆகாதென்பதை
அறிந்து நடந்தால்

பொருமையைக் கொண்டு
பெருமை சேர்த்தால்
புரியாத மனங்களும்
பூரிப்படையும்
பொன்னான
பெண்ணினம் கண்டு
போற்றி வாழ்த்தும்

சீரழிந்து விடுவது சுலபம்
சீராக வாழ்வது சிரமம்
சிரமத்தில் சிரத்தையெடு
சிறப்புகள் சிதறாமல் வரும்

சிந்தனைகளை
செதுக்கி முடிவெடு
செழித்தோங்கும்
வாழ்க்கை வந்து சேரும்

பெண்ணே!
உன்னால் முடியும்
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது