நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாருமறியா ரகசியத்தை!



இருண்ட இரவுகளை
அலங்கரிக்கும் நட்சதிரமும்!

இரவல் ஒளிவாங்கி
இருளகற்றும் பால்நிலவும்!

மெல்லிய ஒளியில்
மிளிரும் இருளிரவும்!

இன்னல்களை சுமந்தும்
இன்பமுற்றதாய் நடிக்கும்,

வஞ்சணைகள் நிறைந்தும்
வாஞ்சைகளாய் உரசும்,

உள்ளமழுதும்
உதடுகள் சிரித்தும்

ஊரறியா! வேறு மனமறியா!
ஊளையிடும் இருதய மெளனங்களின்

இரகசியங்கள் அறிகின்றன
”இங்கிதம் பேணியபடி”



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

6 கருத்துகள்:

  1. மனங்கள் அப்படித்தான் இன்றைக்கு மாறிப்போய் விட்டன...

    பதிலளிநீக்கு
  2. ஊரறியா! வேறு மனமறியா!
    ஊளையிடும் இருதய மெளனங்களின்

    இரகசியங்கள் அறிகின்றன
    ”இங்கிதம் பேணியபடி”//


    செம வரிகள். ஆனாலும் அநியாயத்துக்கு எழுதுறிங்க மலிக்கா.
















    ரொம்ப நல்லவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

    பதிலளிநீக்கு
  3. இராஜேந்திரன்.MA16 ஏப்ரல், 2013 அன்று PM 5:48

    எதார்த்த சிந்தனைகள்.
    இல்லங்களில் ஏராளம் இதுபோல்.

    அருமை மலிக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது