நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்தேக கேள்விகளின் பதில்கள். [பகுதி 1]

வாங்க வாங்க உக்காரவெல்லாம் நாற்காலிபோடலை அதனால நின்னுகிட்டே படிச்சிட்டுபோங்க [அச்சோ அச்சோ நாங்க ஏற்கனவே சேர்போட்டுஉக்காந்துகிட்டுதானே இங்கேயே வந்தோம் ஹா ஹா]

கிட்டதட்ட இந்த பதிவை 440 மேற்பட்டவர்கள் பார்த்தும்
நான் கேட்ட கேள்விகளுக்கு ஏனோ  யாரும் பதில்
சொல்ல முன்வரவில்லை[ஒரு சிலரைத்தவிர] அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில், ஏதோ ஒன்று தடுக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை. இல்லை அப்படி கேட்கக்கூடாத கேள்வியா? என்றும் புரியவில்லை.

சரி சரி விசயத்துக்கு வா என முனங்குவது கேட்கிறது. என் பதில்கள் பிறருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனாலும் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டிய விசயத்தை சொல்லிவிடவேண்டும் சந்தர்பங்கள் கிடைக்கும்போது ஆகவே எனக்கு தெரிந்த நான் அறிந்த வகையில் சொல்கிறேன்.

எனது பதில் தமிழ்நாட்டுக் கலாசாரத்தை சார்ந்தது. ஏனெனில் நான் தமிழச்சி.இங்கு [நீரோடைக்கு]வந்துபோகும் அனைவரும் தமிழைச்சார்ந்தவர்களேயென நினைக்கிறேன்[ஹி ஹி தமிழை தமிழர்தான் படிப்பார். சில வெளிநாட்டவர் தமிழ்படிக்கும் ஆர்வளர்களும் உண்டுதான்] ஆக நாம் எப்படியுள்ளோம். எப்படியிருக்கிறோம் எப்படியிருக்கப்போகிறோம் அதுதானிங்கே. மேலைநாட்டில் இப்படி. கீளைநாட்டில் அப்படி அதெல்லாம் இங்கில்லை. தமிழ்நாட்டில் எப்படி?

இவைகள் நான் கண்டதும். கேட்டதும். பார்த்ததும்.
முதலில்:

நாடுகடந்த சுதந்திரம்.
மனிதப் பிறப்பே மனிதப் பிறப்பே
மகத்துவமானதாக-அதை
மறந்து திரிந்தான் மறந்து திரிந்தான்
சுதந்திரமாக!

சுதந்திரமென்ற தென்றல் ஆனது
சூராவளியாக!-அதைச்
சுற்றிக்கொண்டபல மனிதரையிங்கு
சூறையாடுதே வேங்கை புலியாக!

சுதந்திரமென்ற பூக்கள் ஆனது
பூகம்பமாக! -அதை
சூடிக்கொண்டபல மனிதரையிங்கு
சுருட்டி போட்டதே சுக்கு நூறாக!

நல்ல சுதந்திரம் நல்ல சுதந்திரம்
நாடு கடந்ததிங்கே! -அயல்ச்
நாட்டு சுதந்திரம் பட்டாப் போட்டதும்
நிலைகுலைந்ததிங்கே!
நல்லறங்களெல்லாம்
நிலைகுலைந்ததிங்கே!
1ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?

ஆண்பெண் சுதந்திரம். அது தற்போதைய காலத்தைப் பொறுத்தவரை சற்றல்ல மிதமாகவே மிதமிஞ்சியே இருக்கிறது. நல்ல கலாச்சாரங்கள் கடந்துபோய் மிகவும்
பின் தங்கியுள்ளதால் நாகரீகமென்ற நாளொருகூத்து சுதந்திரமென்ற பெயரில் சுற்றிவலைத்து சூறையாடுகிறது. மனிதமனதையும் உடலையும்.

தினம் தினம் மீடியாக்களிலும். செய்திநாளிதள்களிலும் அக்கம் பக்கமும். அப்பப்பா தாங்கமுடியலப்பா எந்தபக்கம் போனாலும் இதேதான் என ஒருநாளாவது தனக்குள் நீங்கள் சொல்லி வருதங்கொண்டது கிடையாது?. அப்படி வருத்தங்கொண்டிருந்தால் இதிலுள்ள வரிகள் புரியும்.

ஓகே விசயத்திற்கு வருவோம். சில சில துளிகள் மட்டுமிங்கே கோடிட்டுகாட்டியுள்ளேன். அவ்வளவுதான்

தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு, காலை 10 மணிக்கு, திருமணம் என்றபோது 9.30 யாருக்கும் தெரியாமல் ஓடிப்போவதும் அதனால் பெற்றோர்கள் இறந்தாலும். மனமிழந்தாலும்  .கேட்டால் சுதந்திரம்
என் சுதந்திரத்துக்கு தடை. அதனால் என்னை பெற்றவர்களுக்கு தண்டனை. எனசர்வசாதாரணமாக சொல்லும் பிள்ளைகள்.

தன்பிள்ளைகளை சுதந்திரமாய் திரியட்டுமென சினேகம் என்றஒரு தூய்மையானவற்றின் பெயரில், ஆணோடு பெண்ணையும், பெண்ணோடு ஆணையும், சுதந்திரமாய் வலம்வரவைத்துவிட்டு பின்பு அதனால் அடையும் மனவருத்தங்களும், மனச்சிதைவுகளும். ஏன்பலநேரம் மானத்தையே இழக்கும் தருவாயையும் உருவாக்கி உருகுலைக்க வைக்கிறது இன்றைய சுதந்திரம்.
போய் கேட்டுப்பாருங்கள் மனசாட்சியுள்ள டாக்டர்களிடமும். வீட்டு வைத்தியர்களிடமும்.திருமணத்துக்குமுன்னே கருகலைப்புகாக வந்து நிற்கும் சுதந்திரத்தை.

இது ஒரு மனிதமுள்ள மனிதரின் [காஞ்சி முரளி] பார்வையில்
இது என்னுடைய ஒரு பதிவில் கருத்துக்களாக போட்டது

//நீங்கள் துபையில் வசிக்கிறீர்கள்... இங்கு வந்து பாருங்கள்.... touristஆக அல்ல... ஓர் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ வசித்து பார்த்தால்... இங்கு நடக்கும் அலங்கோலங்களை காணலாம்... 'பெண் விடுதலை' என்ற பெயரில் நடக்கும் அநியாங்களை பிரதான சாலைகளிலும் - பீச்சிலும் - தியட்டர்களிலும் குறிப்பாக ஸ்டார் ஹோடேல்களிலும் காணலாம்... இது தமிழ்நாடா என்று வியந்து போவீர்கள்...
மனிதன், .............விட கேவலமாய் சாலைகளில்....

என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...
"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...

சாலைகளில்...
பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....

காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."

கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்.... //

மிக ஆழமாக இதைவிடசொல்லமுடியாது சுதந்திரமென்றபெயரில் சுற்றித்திரியும் அவலங்களை!

இதைவிடக்கொடுமை. மானத்தைகாற்றில்விட்டு திறந்துதிரியும் கூட்டம் சில, மானத்தை மூடிமறைக்கும் சிலரை வசைபாடுவதுதான். பிறரை சுண்டியிழுக்கும் அங்க அவங்களை மூடிச்செல்வதால் அடுதவர்களுக்கென்ன பாதிப்பு?. பிறரையும் பாதித்து தன்னையும் பாதிக்கும் ஒரு பாதகச்செயலிலிருந்த தன்னை காத்துக்கொள்வது சுதந்திரத் தடையா?ம். சுதந்திரத்திற்குச்சுமையாய் இருக்கிறதென சுமப்பவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை காணும் குற்றக்கண்கள் தன் கற்பனைக்குதிரைக்கு கடிவாளத்தை திறந்து ஓடவிட்டு தனக்கு வருத்தமளிப்பதுபோல் நினைத்துக்கொண்டு, பிறரை வருத்தப்படுதுவதுதான். வேடிக்கை..

இங்கே கொஞ்சம்தான் சொல்லியிருக்கேன் மற்றவைகளை சொல்லிதான் தாங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றில்லை. தெரிந்தும் தெரியாமலிருப்போருக்கு நான் பொருப்பல்ல.
இவைகள் மேலை நாடுகளில் நடந்தால் இந்தக் கேள்விகளுக்கே இடமில்லை, ஏனெனில் அவர்கள் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை வெற்றுப்பார்வையில் பார்ப்பவர்களே அன்றி அதில் வாழ்பவர்களில்லை,வாழ்ந்தவர்களில்லை. [ஆனாலும் உலக நாடுகளில் நம்நாட்டுக்கென்ற ஒரு தனிமதிப்பு வேறுநாட்டுகில்லையென்பதே உண்மை அந்த மதிப்பே பலங்கால நல்லொழுக்கம்தான்] ஆனால் எந்நாடு சென்றபோதும் தமிழ்நாட்டுகென்ற மரியாதையையும். கலாச்சாரத்தையும்.தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்பவந்தானே தமிழன். சென்றிருக்கும் அந்நாட்டு [அ]நாகரீகத்தை கற்றுக்கொள்ளும் மனிதன் தன்நாட்டு ஒழுக்கத்தையும். கலாச்சாரத்தையும் ஒதுக்கிவிடுவது ஏன்? [ஓ கால சூழலுக்கேற்ப எதையும் மாற்றும் திறனோ மாற்றுவதைதான் மாற்றலாம் தன்மானத்தை?]ஏனெனில் இதில் பல கட்டுபாடுகள். இப்படிதான் வாழவேண்டுமென்ற கோட்பாடுகள் இவைகளெல்லாம் அவனுக்கு சுதந்திரத் தடையாக இருக்கிறது.

பல்லாண்டுகால பாரம்பரியங்களையும். கட்டுப்பாடுகளையும். இன்றும் பெருமையாய் பேசப்படுகிறதே ஏன்? அதில் நன்மையுண்டு அதனால் தீமைகளின்பக்கம் போகாமலிருக்க தடையுண்டு, ஆனால். அதை விளங்கியும்கூட விளங்காமலிருக்கும் மனிதனைக்கண்டுதான் வியப்பாகவும் உண்டு. வருத்தமாகவும் உண்டு.

திருமணத்துக்கு முன் கருகலைக்கும் கூட்டமாக!
தான்தோன்றிதனத்தால் தன்னையிழக்கும் இனங்களாக!
அங்கங்களை அடுதவர்களின் பார்வைகளுக்கு விருந்துபடைக்கும் படையலாக!
அயல்வீட்டுகாரரைக்கூட அடுத்துக்கொள்ளாத அன்னியனாக!
சொகுசு விடுதிகளில் சொக்கியாடி கொக்கிபோடும் கேடுகளாக!
எழுத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லைமீறும் எந்திரங்களாக!
முதியோர் இல்லங்களை நிரப்பும் மனசாட்சியற்ற மனங்களாக!
அனாதையில்லங்களை அகலப்படுத்தும் அவலங்களாக!
நான்கு சுவற்றுக்குள் நடக்கும் புனிதங்களை
நடுரோட்டில் அரங்கேற்றும் அசிங்கங்களாக!

இப்படி, இன்னும் இன்னும். ஆண்பெண் சுதந்திரம் மிக மிக பலவீனமாகி பாதிப்பை உண்டாக்கும் கேடாகத்தானிருக்கிறது.
சிலபல விதிவிலக்குகளைத்தவிர.

சரி எப்படியிருக்க வேண்டும்.? [இத நீ என்னத எங்களுக்குச் சொல்றது எங்களுக்கு தெரியும் என்பவர்களுக்கல்ல இது]

ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கம்
முறையான ஒழுக்கம்
இதனுள் அத்தனையும் அடங்கும்.

காணும்இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமோ-இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும்
நான்குகால் மிருகமோ அல்ல மனிதன்,

மனிதன் மிகுந்த மதிப்பு மிக்கவன்
தன்னுடைய சுய ஒழுக்கம். தனக்கென்று ஒருகம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை. தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன என்பதை உணர்ந்தால் நிச்சயம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகிய செயல்களின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு, சுதந்திரமென்றால் என்ன? அது நம்மை எவ்வாறு சுற்றியிருக்கவேண்டும். அல்லது நாம் எவ்வாறு அதனைச் சுற்றிக்கொள்ளவேண்டும். என்பதையறிந்து சுதந்திரமென்னும் சுத்தமான சுகந்தத்திற்குள் சுகமாய் சுற்றித்திரிவதோடு,தன்னை சுற்றியுள்ளவர்களையும்
தன் சுழல்சியில் சேர்த்துக்கொள்வான். சுதந்திர சுகமாய் வாழ்வான்..

அப்பாடா ஒருவழியா முடிச்சிட்டேன் இந்த ஒருகேள்விக்கே முதுகும். விரல்களும் கண்களும். ஒரு வழியா வலியாயிடுத்துபா. இன்றைக்கு இதுபோதும் மீதம் அடுத்தடுத்து. இடையிடையே பிரேஏஏஏஏஏஏஎக்கும் விடுவோம். உங்க அளவுக்கு என்னால் யோசிக்க முடியாவிட்டாலும் ஏதோ என்னளவுக்கு அதாவது என் மூளைக்குள் சென்று இதயத்தை அடைந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். இதில் பிழைகளிருந்தால் பொருந்திக்கொள்ளவும்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

38 கருத்துகள்:

  1. ஒரு ஆட்டோ அனுப்புங்க

    குறைஞ்ச பட்சம் ஒரு ஸ்கூட்டராவது கொடுங்க -


    கருத்துகள் ஆழம் என்றாலும்
    பதிவு ரொம்ப நீஈஈஈஈளம்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு மலிக்கா .. நீங்கள் என்னதான் சொன்னாலும், பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்தால் பிற்போக்கு , தான் விரும்பியப் படி நடப்பதே முற்ப்போக்கு , புரட்சி என்று சொல்லித் திரிபவர்கள் ஏராளம். சமீப காலமாக வரும் நிறைய பதிவுகளும் அப்படியே உள்ளன. வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை ..

    பதிலளிநீக்கு
  3. நட்புடன் ஜமால் கூறியது...
    ஒரு ஆட்டோ அனுப்புங்க

    குறைஞ்ச பட்சம் ஒரு ஸ்கூட்டராவது கொடுங்க -//


    கருத்துகள் ஆழம் என்றாலும்
    பதிவு ரொம்ப நீஈஈஈஈளம்.//

    ஆக ஏதாவது சம்திங் கொடுத்தால்தான்
    எதுவும் சிறக்கும். அப்படியா காக்கா.

    சரி சரி ரொம்ப பொருமையா படிச்சதுக்கு செல்லக்குட்டி மருமகளுக்கு சைக்கிள் வாங்கி அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. LK கூறியது...
    நல்ல பதிவு மலிக்கா .. நீங்கள் என்னதான் சொன்னாலும், பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்தால் பிற்போக்கு , தான் விரும்பியப் படி நடப்பதே முற்ப்போக்கு , புரட்சி என்று சொல்லித் திரிபவர்கள் ஏராளம். சமீப காலமாக வரும் நிறைய பதிவுகளும் அப்படியே உள்ளன. வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை //

    நிஜந்தான் கார்த்தி. ஒருசிலரால் மட்டுமே சீர்கேடை மாற்றயிலாதென்பது எனக்குதெரியும்.
    இருந்தாலும் நாமும் நம்மைச்சார்ந்தவர்களும்.அதற்குள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்ற ஆதங்கம்தான் வேறில்லை.

    இங்கு வந்துபோகும் அனைவரும் நம்மைசார்ந்தவர்களென்ற எண்ணம்மேலோங்கவே இந்தப்பதிவு..

    பதிலளிநீக்கு
  5. கண்டிப்பாக. இந்த மாதிரி எண்ணம் உள்ளவர்களும் பதிவுலகில் இருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக கருத்து சொல்லுபவர்கள் குறைவு. காரணம், எங்கே தம்மை பிற்போக்குவாதியாய் முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயம்தான்.

    பதிலளிநீக்கு
  6. என் கைய வச்சே....
    என் கண்ண குத்திடீங்களே.. மலிக்கா..!

    பதிலளிநீக்கு
  7. LK கூறியது...
    கண்டிப்பாக. இந்த மாதிரி எண்ணம் உள்ளவர்களும் பதிவுலகில் இருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக கருத்து சொல்லுபவர்கள் குறைவு. காரணம், எங்கே தம்மை பிற்போக்குவாதியாய் முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயம்தான்.//

    உண்மைதான்
    தவறாக நினைக்கும் பிறர் பார்வையில் நாம் தவறாக தெரிவோம் என்பதற்காக நம்மைநாமே தாழ்த்திக்கொள்ளலாமா கார்த்தி.

    மருந்து கசக்கும் ஆனால் அதன் மருதுவம் தேவையெனும்போது அதை உட்கொள்வதில் உடன்படாவிட்டால் விளைவு. நமக்குதானே!


    மிக்க நன்றி கார்த்திக்..

    பதிலளிநீக்கு
  8. காஞ்சி முரளி கூறியது...
    என் கைய வச்சே....
    என் கண்ண குத்திடீங்களே.. மலிக்கா.//

    சிலநேரம் எதார்தமான கண்ணில் படும் விரல் விழியில் தேங்கிடக்கும்கண்ணீரை வெளியாக்கி பார்வையை தெளிவுபடுத்தும் என்ற ரீதியில்தான் சகோ இந்த கருதுக்களை இதில்போட்டேன் தவறென்றால் நீக்கிவிடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  9. மேல போன எங்க தாத்தா எப்போவோ சொன்னது நியாபகம் இருக்கு, பொறுமையா இருப்பா, பெரியவங்களே பல விசயங்கள் சொல்லி தருவங்குன்னு, பாருங்க நீங்களே சொல்லி தரீங்க..

    பதிலளிநீக்கு
  10. உங்களிடம் இருந்து அருமையான விடைகளை எடுக்க தான் நாங்க விடை சொல்லல . விடைகள் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  11. நன்றி..! நன்றி...! நன்றி...!

    நான் என்றைக்கோ போட்ட கருத்துரையை மீண்டும் மறுபதிவேற்றியதற்கு...!

    ////மிக ஆழமாக இதைவிடசொல்லமுடியாது சுதந்திரமென்றபெயரில் சுற்றித்திரியும் அவலங்களை////

    உண்மைதான்... மலிக்கா... தங்கள் இப்பதிவில் சொன்னது அத்தனையும் உண்மை...!

    நீங்கள் நம்பமாட்டீர்கள்...!

    நான் ஒரு சமூக சீர்திருத்தவாதியோ...! சமூக சிந்தனைவாதியோ அல்ல...!

    ஆனால்... இன்றுகூட சாலைகளில் நான் காணும் காட்சிகள்... மிகவும் வேதனைபட வைக்கும்.. காரணம்... நான் சாதாரண மனிதன் என்பதோடு... ஓர் சமூக ஆதங்கம்...

    அதனை எல்லோரும்தான் பார்க்கிறார்கள்... அவர்கள் அதனை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை...அது ஏனென்று புரியவில்லை...? அது புரியாத புதிராய்த்தான் உள்ளது...!

    ///தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு.../////

    தங்கள் மேல சொன்னதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கு...!
    ஓருயிர் முதல் ஆறறிவு வரை அனைத்திற்கும் ஓர் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும்... உதாரணமாய்... மலைமேல் விழும் மழைநீர்... பெருவெள்ளமாய்... மலைமுகட்டிலிருந்து... கானகத்தின் வழியே.... ஆர்ப்பரித்து வரும்போது செடி, கொடி, மரம் இவற்றை முறித்துக் கொண்டு... ஓர் கட்டுப்பாடில்லாமல்... "காட்டாறாய்" வந்தால்... அது அந்த மலைக்கும்... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் பயனேதுமின்றி... வீணே கடலில் கலந்து... அது யாருக்கும் பயனில்லாமல் வீணாகும்...

    அதே.. காட்டாறு... இரு கரைகள் எனும் கட்டுப்பாட்டிற்குள் ஓடினால்... அது ஏரி.. குளம்... அணைக்கட்டு இவற்றில் கட்டுப்பட்டு... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் இப்படி அனைத்திற்கும் பயன்படும்...

    எனவே கட்டுப்பாடு என்பது... இயற்கை... விலங்கினம்.. மனிதயினம் அணைத்திருக்கும் தேவை... அது இல்லை என்றால்... வீண்தான்... குறிப்பாக ஆறறிவு உள்ள மனிதனுக்கு.. கட்டுப்பாடு... அதிலும் சுயக்கட்டுப்பாடு தேவை. இது இல்லையெனில் என்ன நடக்கும் என்பதையும்... விளைவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

    இன்னும் நிறைய சொல்லலாம்..!
    அப்புறம்... கருத்துரையே ஓர் பதிவாகிவிடும்....!

    any have...
    மிக சிறந்த... தேவையான... அருமையான பதிவு...!
    நல்ல சமூக சிந்தனை... சமூக அக்கறை கொண்ட பதிவு...!
    வாழ்த்துக்கள்... மலிக்கா...!

    இதுதான் மலிக்காவின் ஸ்பெஷல்...!
    நான் தொடர்ந்து இந்த பதிவில் மட்டும் வந்துபோக காரணமே... மற்ற பதிவு போலில்லாமல்... சினிமா..கிண்டல்..கேலி..நையாண்டி போன்ற பதிவிட்டு... பொழுதுபோக்கு சாதனமாய் வலைதளத்தை பயன்படுத்தாமல்... "யார் எக்கேடு கேட்டால் நமக்கென்ன" என நினைக்காமல்.... ஓர் சமூக அக்கறை... சமூக சிந்தனை... கொண்ட இதுபோன்ற பதிவிடுவதால்தான்... நீரோடையின் தொடர் வாசகனாய்... விமர்சகனாய்...

    மீண்டும் ஒரு முறை...
    நன்றி...! நன்றி...! நன்றி...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  12. நன்றி..! நன்றி...! நன்றி...!

    நான் என்றைக்கோ போட்ட கருத்துரையை மீண்டும் மறுபதிவேற்றியதற்கு...!

    ////மிக ஆழமாக இதைவிடசொல்லமுடியாது சுதந்திரமென்றபெயரில் சுற்றித்திரியும் அவலங்களை////

    உண்மைதான்... மலிக்கா... தங்கள் இப்பதிவில் சொன்னது அத்தனையும் உண்மை...!

    நீங்கள் நம்பமாட்டீர்கள்...!

    நான் ஒரு சமூக சீர்திருத்தவாதியோ...! சமூக சிந்தனைவாதியோ அல்ல...!

    ஆனால்... இன்றுகூட சாலைகளில் நான் காணும் காட்சிகள்... மிகவும் வேதனைபட வைக்கும்.. காரணம்... நான் சாதாரண மனிதன் என்பதோடு... ஓர் சமூக ஆதங்கம்...

    அதனை எல்லோரும்தான் பார்க்கிறார்கள்... அவர்கள் அதனை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை...அது ஏனென்று புரியவில்லை...? அது புரியாத புதிராய்த்தான் உள்ளது...!

    cont...

    பதிலளிநீக்கு
  13. ///தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு.../////

    தங்கள் மேல சொன்னதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கு...!
    ஓருயிர் முதல் ஆறறிவு வரை அனைத்திற்கும் ஓர் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும்... உதாரணமாய்... மலைமேல் விழும் மழைநீர்... பெருவெள்ளமாய்... மலைமுகட்டிலிருந்து... கானகத்தின் வழியே.... ஆர்ப்பரித்து வரும்போது செடி, கொடி, மரம் இவற்றை முறித்துக் கொண்டு... ஓர் கட்டுப்பாடில்லாமல்... "காட்டாறாய்" வந்தால்... அது அந்த மலைக்கும்... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் பயனேதுமின்றி... வீணே கடலில் கலந்து... அது யாருக்கும் பயனில்லாமல் வீணாகும்...

    அதே.. காட்டாறு... இரு கரைகள் எனும் கட்டுப்பாட்டிற்குள் ஓடினால்... அது ஏரி.. குளம்... அணைக்கட்டு இவற்றில் கட்டுப்பட்டு... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் இப்படி அனைத்திற்கும் பயன்படும்...

    எனவே கட்டுப்பாடு என்பது... இயற்கை... விலங்கினம்.. மனிதயினம் அணைத்திருக்கும் தேவை... அது இல்லை என்றால்... வீண்தான்... குறிப்பாக ஆறறிவு உள்ள மனிதனுக்கு.. கட்டுப்பாடு... அதிலும் சுயக்கட்டுப்பாடு தேவை. இது இல்லையெனில் என்ன நடக்கும் என்பதையும்... விளைவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

    இன்னும் நிறைய சொல்லலாம்..!
    அப்புறம்... கருத்துரையே ஓர் பதிவாகிவிடும்....!

    cont...

    பதிலளிநீக்கு
  14. any have...
    மிக சிறந்த... தேவையான... அருமையான பதிவு...!
    நல்ல சமூக சிந்தனை... சமூக அக்கறை கொண்ட பதிவு...!
    வாழ்த்துக்கள்... மலிக்கா...!

    இதுதான் மலிக்காவின் ஸ்பெஷல்...!
    நான் தொடர்ந்து இந்த பதிவில் மட்டும் வந்துபோக காரணமே... மற்ற பதிவு போலில்லாமல்... சினிமா..கிண்டல்..கேலி..நையாண்டி போன்ற பதிவிட்டு... பொழுதுபோக்கு சாதனமாய் வலைதளத்தை பயன்படுத்தாமல்... "யார் எக்கேடு கேட்டால் நமக்கென்ன" என நினைக்காமல்.... ஓர் சமூக அக்கறை... சமூக சிந்தனை... கொண்ட இதுபோன்ற பதிவிடுவதால்தான்... நீரோடையின் தொடர் வாசகனாய்... விமர்சகனாய்...

    மீண்டும் ஒரு முறை...
    நன்றி...! நன்றி...! நன்றி...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    THE END

    பதிலளிநீக்கு
  15. இதை தான் எதிர்பார்த்தேன்.. ரெம்ப‌ ஆழ‌மான‌ பார்வை.. அடுத்த‌ ப‌திலும் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அருமையா சொல்லியிருக்கிறீர்கள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. ஜமால் கருத்து ஆழமாக இருக்கும்போது பதிவு நீளமாக இருப்பதில் தவறில்லையென நினைக்கிறேன்.


    மிகுந்த ஆழமான கருத்துசகோதரி அதை ஆழ்ந்துபடிக்கும்போது சில குற்றவுணர்வுகள் மேலோங்கிறன.

    சுதந்திரமென்றபெயரில் பண்ணிய சேட்டைகள் ஏராளம்.தற்போது மனசோர்வடைந்து எதிலும் ஓர் நாட்டமில்லாமல் ஒரு நடமாடும் மனிதனாய் உள்ளுக்குள் உருத்தலுடன் வாழ்கிறேன். பலருக்கு புரிவதேயில்லை சகோதரி அனுபவதை உணரும் சூழ்நிலை வரும்வரை. நல்லதொரு பதிவை தந்திருக்கிறாய் .

    யார் திருந்தப்போற என நினைக்காமல்
    நல்லவைகளை பிறருக்கு எடுதுசொல்கிறாயே அதுவே பெரியவிசயம்..

    மிக்க நன்றி சகோதரி.
    சேகர். சேலம்.
    தற்போது
    அல் அயினில்..

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் சொல்வது சரிதான் சம்பந்தி! ஒழுக்கமாக வாழ்ந்தால் எல்லோருக்குமே நல்லது தான். ஆனால் எங்கு தடை இருக்கிறதோ அங்கு மீறுதலும் இருக்கும் என்பதே இயற்கை விதி.

    நாம் இதை செய்யாதே, அதை செய்யாதே என்று சொன்னால், நாம் தான் அவர்களின் கோபத்திற்கு உள்ளாவோம். அவர்களே அனுபவ பூர்வமாக தெரிந்துக்கொண்டால் அன்றி ஒழுக்கம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.

    இது தான் நடைமுறை உண்மை. சினிமாக்கள் 45 வருட காலங்களாக கலச்சார சீரழிவுக்கு இட்டுச் சென்றுக் கொண்டே இருக்கிறது. அதை ரசிக்கும் கூட்டம் ஏன் என்றுக் கேள்விக் கேட்பதில்லை. அதனால் மாற்றங்கள் நடந்துக்கொண்டே இருக்கிறது.

    வேகமாக சுற்றத்தொடங்கி விட்டது. இன்னும் பாருங்கள், நம் தலைச்சுற்றப்போகிறது என்ன என்ன மாற்றங்கள் வரபோகிறது என்று வேடிக்கையை பார்க்கத்தானே போகிறோம்.

    பதிலளிநீக்கு
  19. ///இது ஒரு மனிதமுள்ள மனிதரின் [காஞ்சி முரளி] பார்வையில்///

    அட... இப்பத்தான் பார்க்கிறேன்...!
    பல பேரில்... என்னை //ஒரு மனிதமுள்ள மனிதன்///

    நன்றி... சகோதரி...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  20. //கிட்டதட்ட இந்த பதிவை 440 மேற்பட்டவர்கள் பார்த்தும்
    நான் கேட்ட கேள்விகளுக்கு ஏனோ யாரும் பதில்
    சொல்ல முன்வரவில்லை[ஒரு சிலரைத்தவிர] அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில், ஏதோ ஒன்று தடுக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை. இல்லை அப்படி கேட்கக்கூடாத கேள்வியா? என்றும் புரியவில்லை. //



    ஒரு வார பிசியில வரலமுடிய இந்த பக்கம்... :-(

    பதிலளிநீக்கு
  21. //கிட்டதட்ட இந்த பதிவை 440 மேற்பட்டவர்கள் பார்த்தும்
    நான் கேட்ட கேள்விகளுக்கு ஏனோ யாரும் பதில்
    சொல்ல முன்வரவில்லை[ஒரு சிலரைத்தவிர] அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில், ஏதோ ஒன்று தடுக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை. இல்லை அப்படி கேட்கக்கூடாத கேள்வியா? என்றும் புரியவில்லை. //



    ஒரு வார பிசியில வரலமுடிய இந்த பக்கம்... :-(

    பதிலளிநீக்கு
  22. //எந்நாடு சென்றபோதும் தமிழ்நாட்டுகென்ற மரியாதையையும். கலாச்சாரத்தையும்.தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்பவந்தானே தமிழன். //

    இந்த ஒரு கேள்வி போதுமே..!! சாட்டிலைட் டீவி பார்த்துட்டு இல்லாட்டி எங்காவது வெளிநாட்டில போய் யாரையாவது பாத்துட்டு கேள்வி கேக்குற ஆட்களுக்கு சரியான நெத்தியடி பதில் ...சூப்பர் ...

    ஒரு வேளை ஹாஸ்டல்ல படிச்சே வளர்ந்தவங்களுக்கு இந்த மாதிரி புத்தி இருக்கலாம் :-( so sad

    பதிலளிநீக்கு
  23. //440 மேற்பட்டவர்கள் பார்த்தும்//
    நான் 441

    பதிலளிநீக்கு
  24. மிக அருமையான பகிர்வு மலிக்கா.. ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.. என்ன சொல்வது..

    பதிலளிநீக்கு
  25. ஆத்தாடி....இம்பூட்டு விஷயம் இருக்கா அக்கா யு ரியலி கிரேட்...உங்க தம்பியா இருக்க எனக்கு பெருமையா இருக்கு...

    பதிலளிநீக்கு
  26. மலிகாக்கா, உங்களை ஒரு மெகா தொடருக்கு அழைத்துள்ளேன். எந்த வேலையிருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும். ப்ளீஸ். :)


    http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  27. மிகவும் அவசியமான் கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.
    உங்களைப் போன்று எடுத்துச்சொல்ல சிலராவது நம் நாட்டுக்கு தேவை

    பதிலளிநீக்கு
  28. சொல்லிட்டு போயிட்டாங்களா தாத்தா.
    எங்க தாத்தா சொல்லிட்டுபோனதுதான் இதெல்லாம் பின்பு ஒருகாலம் வரும்
    அதில் மனதைரியத்தோடு இரு. வரம்பு மீறிவிடாதே!இறைவனுக்கு பயந்துநட. என சொல்லிய பல வார்கைகளின் தாக்கம்தான் இதெல்லாம் நன்றி வினோ..



    நேரம்கிடைக்கும்பொது நிச்சயம் அடுத்தும்வரும் சைகோ பா.


    மிக்க நன்றி குமார்.


    ஆகா யாதவா இப்படிச்சொல்லி தப்பிகிறீங்க. நன்றிமா.

    பதிலளிநீக்கு
  29. காஞ்சி முரளி கூறியது...
    நன்றி..! நன்றி...! நன்றி...!

    நான் என்றைக்கோ போட்ட கருத்துரையை மீண்டும் மறுபதிவேற்றியதற்கு...!//

    நாந்தான் தங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். இப்படி ஒரு ஆழமான கருத்துக்கள்கொண்ட ஓர் நல்லவிசயம் எனக்கு கருத்தாய் தந்தமைக்கு. மிக்க நன்றி சகோ..

    ////மிக ஆழமாக இதைவிடசொல்லமுடியாது சுதந்திரமென்றபெயரில் சுற்றித்திரியும் அவலங்களை////

    உண்மைதான்... மலிக்கா... தங்கள் இப்பதிவில் சொன்னது அத்தனையும் உண்மை...!

    நீங்கள் நம்பமாட்டீர்கள்...!

    நான் ஒரு சமூக சீர்திருத்தவாதியோ...! சமூக சிந்தனைவாதியோ அல்ல...!

    ஆனால்... இன்றுகூட சாலைகளில் நான் காணும் காட்சிகள்... மிகவும் வேதனைபட வைக்கும்.. காரணம்... நான் சாதாரண மனிதன் என்பதோடு... ஓர் சமூக ஆதங்கம்...

    அதனை எல்லோரும்தான் பார்க்கிறார்கள்... அவர்கள் அதனை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை...அது ஏனென்று புரியவில்லை...? அது புரியாத புதிராய்த்தான் உள்ளது...!//


    ஐந்து விரலும் ஒன்றாக இல்லையே நம்மிடமிருந்தும் அதுபோல்தான். நடுநோட்டில் துடிகும் ஒர்ருயிரைக்கண்டும் காணமல்போகும் மனிதமாக மாறிவருகிறது இன்றைய மனிதம் நமக்கேன் வீண்வம்பு என எல்லாருமே ஒதுங்கிபோனால். ஓர் உயிர்கூட மிஞ்சாது உலகில்.

    ஆங்காங்கே தங்களைபோன்ற நல்லுள்ளம் படைதவர்களும் இருபதல்தான் என்னவோ இன்னும் பூமி பொருமையோடுயிருக்கிறது.



    cont...

    பதிலளிநீக்கு
  30. காஞ்சி முரளி கூறியது...
    ///தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு.../////

    தங்கள் மேல சொன்னதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கு...!
    ஓருயிர் முதல் ஆறறிவு வரை அனைத்திற்கும் ஓர் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும்... உதாரணமாய்... மலைமேல் விழும் மழைநீர்... பெருவெள்ளமாய்... மலைமுகட்டிலிருந்து... கானகத்தின் வழியே.... ஆர்ப்பரித்து வரும்போது செடி, கொடி, மரம் இவற்றை முறித்துக் கொண்டு... ஓர் கட்டுப்பாடில்லாமல்... "காட்டாறாய்" வந்தால்... அது அந்த மலைக்கும்... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் பயனேதுமின்றி... வீணே கடலில் கலந்து... அது யாருக்கும் பயனில்லாமல் வீணாகும்...

    அதே.. காட்டாறு... இரு கரைகள் எனும் கட்டுப்பாட்டிற்குள் ஓடினால்... அது ஏரி.. குளம்... அணைக்கட்டு இவற்றில் கட்டுப்பட்டு... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் இப்படி அனைத்திற்கும் பயன்படும்...

    எனவே கட்டுப்பாடு என்பது... இயற்கை... விலங்கினம்.. மனிதயினம் அணைத்திருக்கும் தேவை... அது இல்லை என்றால்... வீண்தான்... குறிப்பாக ஆறறிவு உள்ள மனிதனுக்கு.. கட்டுப்பாடு... அதிலும் சுயக்கட்டுப்பாடு தேவை. இது இல்லையெனில் என்ன நடக்கும் என்பதையும்... விளைவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்... //

    கட்டுப்பாடே வேண்டாமென்னும் மனிதர்களுக்கு சொல்லி லாபமில்லைதான் இருந்தபோதும் சொல்லவேண்டியதை சொல்லியாகவேண்டும் என்ற நோக்கில்தான் இப்பதிவே!

    அடிபடும்முன் காத்துக்கொள்வதே தற்காப்பு. அடிபட்டபின் வருந்துவதோ
    அலச்சிபொடுபோக்கு. அதனால் அவசி அவர்களையும் அவர்களைச்சார்ந்தவர்களையுமே என நினைக்கதவருவதால் வரும் விளையட்டே விபரீதமாய்..

    இன்னும் நிறைய சொல்லலாம்..!
    அப்புறம்... கருத்துரையே ஓர் பதிவாகிவிடும்....!//

    நல்லவிசயங்களை சொல்ல தடையேதுமில்லை..

    பதிலளிநீக்கு
  31. காஞ்சி முரளி கூறியது...
    ///தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு.../////

    தங்கள் மேல சொன்னதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கு...!
    ஓருயிர் முதல் ஆறறிவு வரை அனைத்திற்கும் ஓர் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும்... உதாரணமாய்... மலைமேல் விழும் மழைநீர்... பெருவெள்ளமாய்... மலைமுகட்டிலிருந்து... கானகத்தின் வழியே.... ஆர்ப்பரித்து வரும்போது செடி, கொடி, மரம் இவற்றை முறித்துக் கொண்டு... ஓர் கட்டுப்பாடில்லாமல்... "காட்டாறாய்" வந்தால்... அது அந்த மலைக்கும்... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் பயனேதுமின்றி... வீணே கடலில் கலந்து... அது யாருக்கும் பயனில்லாமல் வீணாகும்...

    அதே.. காட்டாறு... இரு கரைகள் எனும் கட்டுப்பாட்டிற்குள் ஓடினால்... அது ஏரி.. குளம்... அணைக்கட்டு இவற்றில் கட்டுப்பட்டு... காட்டிற்கும்.. நாட்டிற்கும்... உயிரினத்திற்கும்... மக்களுக்கும் இப்படி அனைத்திற்கும் பயன்படும்...

    எனவே கட்டுப்பாடு என்பது... இயற்கை... விலங்கினம்.. மனிதயினம் அணைத்திருக்கும் தேவை... அது இல்லை என்றால்... வீண்தான்... குறிப்பாக ஆறறிவு உள்ள மனிதனுக்கு.. கட்டுப்பாடு... அதிலும் சுயக்கட்டுப்பாடு தேவை. இது இல்லையெனில் என்ன நடக்கும் என்பதையும்... விளைவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்... //

    கட்டுப்பாடே வேண்டாமென்னும் மனிதர்களுக்கு சொல்லி லாபமில்லைதான் இருந்தபோதும் சொல்லவேண்டியதை சொல்லியாகவேண்டும் என்ற நோக்கில்தான் இப்பதிவே!

    அடிபடும்முன் காத்துக்கொள்வதே தற்காப்பு. அடிபட்டபின் வருந்துவதோ
    அலச்சிபொடுபோக்கு. அதனால் அவசி அவர்களையும் அவர்களைச்சார்ந்தவர்களையுமே என நினைக்கதவருவதால் வரும் விளையட்டே விபரீதமாய்..

    இன்னும் நிறைய சொல்லலாம்..!
    அப்புறம்... கருத்துரையே ஓர் பதிவாகிவிடும்....!//

    நல்லவிசயங்களை சொல்ல தடையேதுமில்லை..

    பதிலளிநீக்கு
  32. காஞ்சி முரளி கூறியது...
    any have...
    மிக சிறந்த... தேவையான... அருமையான பதிவு...!
    நல்ல சமூக சிந்தனை... சமூக அக்கறை கொண்ட பதிவு...!
    வாழ்த்துக்கள்... மலிக்கா...!//


    வாழ்த்துக்களுக்கும் ஆழமான கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    //இதுதான் மலிக்காவின் ஸ்பெஷல்...!
    நான் தொடர்ந்து இந்த பதிவில் மட்டும் வந்துபோக காரணமே... மற்ற பதிவு போலில்லாமல்... சினிமா..கிண்டல்..கேலி..நையாண்டி போன்ற பதிவிட்டு... பொழுதுபோக்கு சாதனமாய் வலைதளத்தை பயன்படுத்தாமல்... "யார் எக்கேடு கேட்டால் நமக்கென்ன" என நினைக்காமல்.... ஓர் சமூக அக்கறை... சமூக சிந்தனை... கொண்ட இதுபோன்ற பதிவிடுவதால்தான்... நீரோடையின் தொடர் வாசகனாய்... விமர்சகனாய்...//

    ஆன்மீகத்தோடும். சமூக அக்கரையோடும்.
    பொழுதுபோக்கோடும்
    பொறுப்புணர்வோடும் நகைச்சுவையோடும்.
    கலந்தேதான் நம் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளல் வேண்டும்.

    இதில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பதல்ல.

    ஆகவே மனிதர்கள் மனிதத்தோடு, நல்லபழக்கவழக்கங்களோடு. வாழ நினைதார்களேயானால் நிச்சயம் மனிதன் மனிதனாக மதிப்புமிக்கவனாக வாழமுடியும்..


    மீண்டும் ஒரு முறை...
    நன்றி...! நன்றி...! நன்றி...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....///.

    THE END


    நன்றி...! நன்றி...! நன்றி...!
    நன்றி...! நன்றி...! நன்றி...!
    நன்றி...! நன்றி...! நன்றி...!

    என்றும் அன்புடன்
    சகோதரி மலிக்கா

    பதிலளிநீக்கு
  33. எதிர்பாத்தது கிடைத்துடுதா? என்னாமா சமாளிக்கிறாங்கப்பா இந்தகாலத்து பிள்ளைங்க.

    நன்றி ஸ்டீபன்.

    வாழ்த்துக்களுக்கும்
    மிகுந்த சந்தோஷம் தியா.
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  34. ஆழமான கருத்துக்களுக்கு போட்டாச்சு ஒரு ஒ

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது