நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நட்பான உறவு

Free Myspace Glitters @ GlitterUniverse.com


தோழமையே தோழமையே
தோள்கொடுக்கும்
தோழமையே
உனைபார்த்து நாளாச்சி
அதனால மனபாரம்
கூடிப்போச்சி

ராக்கால வானமாய்
மனம் மூட
கறுத்தமேகமாய்
முகம் சோம்ப

இடிசத்தம்போல்
இதயத்திற்க்குள் இன்னல்
மின்னல்வந்து கண்ணுக்குள்
மின்ன
வான்மழையை எதிர்பார்த்த
வாடிய பயிராய்
உன்வரவை
எண்ணி எதிர்பார்த்திருக்கிறேன்

கறுத்தமேகம் கொட்டிடுமா
மழையை
மூடியவானம் தூறிடுமா
தூறலை

மனதிற்குள்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மயிலிறகாய் வருவாயா
தவியாய் தவித்து
தாகித்து நிற்கிறேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் கொஞ்சம் தருவாயா..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

25 கருத்துகள்:

  1. ரொம்ப அற்புதுமா இருக்கு உங்களின் "நட்பான உறவு".நட்பின் வலிமை காரணமாக
    வார்த்தைகள் ரொம்ப நல்லா பொருந்தி நல்ல அர்த்தமுள்ள கவிதையா அமைந்திருக்கு..

    ஆமா.யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி தோழன்???

    பதிலளிநீக்கு
  2. /// தண்ணீர் கொஞ்சம் தருவாயா.. ///

    அட நீங்க வேற... சென்னையை தண்ணி புரட்டி போட்டு கொண்டிருக்கிறது !!!

    /// இறைவனை நேசி இன்பம் பெருவாய்
    இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ///

    பெருவாய் - பெறுவாய் அத கொஞ்சம் மாத்திடுங்க !!!

    பதிலளிநீக்கு
  3. நட்பு வாழ்க! அருமையான கவிதை மலிக்கா!

    பதிலளிநீக்கு
  4. தோழியே என்ன ஆச்சு வெகு நாட்களாகிவிட்டது தங்களுடன் உறையாடி.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி எழுதியிருக்கலாம்........
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்...........

    பதிலளிநீக்கு
  6. அன்புத் தோழி மலிக்காவின் கை வண்ணங்களை வார்த்தைகளால் வரைய முடியுமோ? எத்தனை நாட்கள் ஆகி விட்டது தோழியுடன் சுகமாய் உறவாடி. தோழி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அன்புத் தோழி மலிக்காவின் கை வண்ணங்களை வார்த்தைகளால் வரைய முடியுமோ? எத்தனை நாட்கள் ஆகி விட்டது தோழியுடன் சுகமாய் உறவாடி. தோழி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
    ரொம்ப அற்புதுமா இருக்கு உங்களின் "நட்பான உறவு".நட்பின் வலிமை காரணமாக
    வார்த்தைகள் ரொம்ப நல்லா பொருந்தி நல்ல அர்த்தமுள்ள கவிதையா அமைந்திருக்கு../

    தோழமையென்பது தாய்மையைப்போன்று இருக்கனும்
    அடிப்பது, அரவணைப்பது, அன்புபாரட்டுவது,கண்டிப்பது என அத்தனையும் கலந்திருக்கனும்
    அதுதான் தோழமையின் உறவு.

    மிக்க நன்றி பூங்குன்றன் தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...

    ஆமா.யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி தோழன்???/

    தோழமையின் பெயரை பட்டியல்போட இன்னொரு இடுகையிடனுமே... எப்படி?

    பதிலளிநீக்கு
  9. /அட நீங்க வேற... சென்னையை தண்ணி புரட்டி போட்டு கொண்டிருக்கிறது !!!/

    அப்ப ஏதோ ஒருவகையில் தண்ணீர்பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்குங்கிறீங்க..

    /// இறைவனை நேசி இன்பம் பெருவாய்
    இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ///

    /பெருவாய் - பெறுவாய் அத கொஞ்சம் மாத்திடுங்க !!!/

    மாற்றிவிட்டேன், எப்படி இத்தனைநாள் பார்க்காமல்போனேன்.. மிக்க நன்றி கேசவன்..

    பதிலளிநீக்கு
  10. //கறுத்தமேகம் கொட்டிடுமா மழையை
    மூடியவானம் தூறிடுமா தூரலை
    மனதிற்குள் மெளனமாய் காத்திருக்கிறேன்
    மயிலிறகாய் வருவாயா
    தவியாய் தவித்து தவிப்பாய் தெரிகிறேன்
    தாகம் தீர்க்க தண்ணீர் கொஞ்சம் தருவாயா..//

    ரசித்த வரிகள். தண்ணீருக்கா பஞ்சம். அதான் நல்லா மழைபெய்கிறதே.....

    பதிலளிநீக்கு
  11. நுட்பாமான நட்பு தோழி ...........................
    நட்பிலும் கற்பு உண்டு .................
    இது கவிதை அல்ல வரிகள் நான் பார்க்கவில்லை
    உன் நட்பு தெரிகிறது

    பதிலளிநீக்கு
  12. S.A. நவாஸுதீன் கூறியது...
    கவிதை ரொம்ப நல்லா இருக்குமா


    ரொம்ப நன்றி நவாஸண்ணா..


    அனுபவம் கூறியது...
    நட்பு வாழ்க! அருமையான கவிதை மலிக்கா!

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அனுபவம்..

    பதிலளிநீக்கு
  13. /sarusriraj கூறியது...
    தோழியே என்ன ஆச்சு வெகு நாட்களாகிவிட்டது தங்களுடன் உறையாடி./

    ஆமாம் தோழி யாஹூவில் வர நேரமே இல்லைபா முடிந்தால் இன்று நிச்சயம் வருகிறேன் பசங்க நல்லா இருக்காங்களா..

    பதிலளிநீக்கு
  14. புலவன் புலிகேசி கூறியது...
    நல்ல நட்பு...அருமை மலிக்கா

    மிக்க நன்றி புலிகேசி..

    பதிலளிநீக்கு
  15. /ஊடகன் கூறியது...
    இன்னும் கொஞ்சம் மெருகேற்றி எழுதியிருக்கலாம்........
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்..//


    அப்படியா!!!!! இனி எழுத முயற்ச்சிக்கிறேன் ஊடகன். கருத்துக்களுக்கு நன்றி அடிக்கடி வந்து இதுபோன்று கருத்துக்கள் தாருங்கள்..

    பதிலளிநீக்கு
  16. /SANTHOSHI கூறியது...
    அன்புத் தோழி மலிக்காவின் கை வண்ணங்களை வார்த்தைகளால் வரைய முடியுமோ? எத்தனை நாட்கள் ஆகி விட்டது தோழியுடன் சுகமாய் உறவாடி. தோழி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்../

    என்ன சந்தோஷி எப்படி இருக்கீங்க..
    சந்தோஷ் எப்படியிருக்கான்,, எத்தனை நாளாச்சிப்பா, எல்லாரையும் மிஸ் பண்ரேனா,அச்சோ
    இனி அப்படியிருக்கமாட்டேன் சந்தோஷி. டி கேக்கு வாங்கப்பா பேசலாம்..
    தோழியின் வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  17. /ரசித்த வரிகள். தண்ணீருக்கா பஞ்சம். அதான் நல்லா மழைபெய்கிறதே...../

    அது நம்ம நாட்டில பாலாஜி [எப்படி தப்பித்தேன்]
    இங்கு மழையே பெய்யலையே அதான்.. நன்றி பாலாஜி,,,

    பதிலளிநீக்கு
  18. /வானம்பாடிகள் கூறியது...
    நல்ல கவிதை மலிக்கா/

    நன்றி வானம்பாடிகள்...

    பதிலளிநீக்கு
  19. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
    நுட்பாமான நட்பு தோழி ...........................
    நட்பிலும் கற்பு உண்டு .................
    இது கவிதை அல்ல வரிகள் நான் பார்க்கவில்லை
    உன் நட்பு தெரிகிறது/

    நிச்சயம் நட்பிலும் கற்பு உண்டு..
    உங்கள் நட்புக்கு நன்றி தோழமையே...

    பதிலளிநீக்கு
  20. உண்மையா ஒரு நட்புக் கிடைத்துவிட்டால் அதுபோல் ஒரு உறவு உலகத்தில் வேறொன்றும் அமையாது மல்லிக்.கவிதையில் நல்ல மெருகு.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது