நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

செல்லச் சீமாட்டி.

எட்டடுக்கு மாளிகையில்
பத்தடுக்கு செல்வமிருந்தாலும்
ஈடாகுமா ஈன்றெடுக்கும்
மழலைக்கு ஒப்பாக!

ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையை
எளிதில் ஏக்கம் தீர்த்து
எல்லையில்லா மகிழ்வழிக்கும்
எதுவாகினும் ஒரு குழந்தை!

மூவேளை உண்டுகளிக்க
முடியாமலிந்தாலும்
ஒற்றைப் பிள்ளையிருந்தால்
ஒருபிடி உண்டாலும் போதும்!

கோடிகள் கொட்டிக் கிடந்தும்
கொஞ்சி விளையாட
குழந்தையில்லையெனில்
கூனிக்குறுகிடந்திடும் குடும்பம் முழுவதும்!

கூழைக் குடித்தாலும்
கொஞ்சிக் கொஞ்சி கூத்தாடி
குடிசைக்குள் கொட்டிக்கிடக்கும்
கோலாகலங்கள் ஆயிரமாயிரம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இறவாமல்!



என்றோ
நடந்து முடிந்தவைகள்
இறந்த காலம் என்றபோதும் 
என்றும் இறவா காலமாய்,
இதயத்தினுள் -சில
நினைவுப் பத்திரங்கள் மட்டும்
என்றென்றும் பத்திரமாய்
இதயங்கள் இருக்கும்வரை
 


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாடமானவன்!


படைத்தவனை பழித்துவிட்டு
தான்தான் படைத்தவனென்று
பறையடித்து திரிந்தவன்!

தன்னைவிட
பலசாலியே இல்லையென்று
தான்தோன்றியாய் நடந்தவன்!

அறிவற்ற எச்சமிவன்
ஆணவத்தின் உச்சமிவன்!

பேரழிவுகளை உண்டாக்கி
பேரானந்தம் கொண்டவன்!

மரணமே வராதென்று
மார்தட்டி அலைந்தவன்!

கொடுங்கோலின் மன்னனிவன்
கொடூரனின் பெயரோ ஃப்ரவுன்!

இவனின் கொட்டமடக்க எண்ணியே
இருகடலுக்கிடையில் - கோடு
உண்டாக்கினான் இறைவன்!

இவ்வுல மனிதர்களுக்கு
எச்சரிக்கை செய்யவே
இவனையே  பதப்படுத்தி பாடமாக்கினான்!

இவனின்  அட்டூளியங்கள் இவ்வுலமறியவே
இறந்தபின்பும்
இவனுடலழியாது பாதுகாக்கிறான்…



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது