நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்திப்பின் நிகழ்வில்.


பனிக்கொட்டும் இரவில்
படர்ந்திருந்த மெளனங்கள்
மெல்ல கலைகிறது
மேகத்தோடு சேர்ந்து கொ[கெ]ஞ்சலோடு

ஆழ்மனக்கிடங்கில் அமுங்கிடமுடியாமல்
ஆழிப்பேரலைபோல்
அடித்துக்கொண்டு கிடக்கும் அந்நிகழ்வுகள்
அதரங்களில் ஓரத்தில்
வழிந்தோட துடித்த நிலையில்

அந்நேரத்தில் அதிசயமாய்
அசைந்தாடிய அனிச்சமலரோடு
அசையமறுத்த இமைகளுக்குள்ளிருந்து
அசைந்தாடியது கருவிழிகள் அச்சத்தால்

விரசப் பார்வை உரசி உரசி
உயிரை உருக்கத் தொடங்க
ஒளியோடு நிலா உலாவரும் நேரத்தில்
ஒளிந்துக்கொள்ள இடம்தேடியது வெட்கம்

தன்னையறியாது தலையசைக்கும்
தவிப்புகளை தவிடுபொடியாக்கி
தனிமைக்கு விடைக்கொடுக்க
எண்ணிய வேளையில்

தட்டுத் தடுமாறி இமைகளைப்பிரித்து
நினைவுகளை மீட்டெடுத்து
சுதாரித்து கொண்டு விடைக்கொடுக்கிறது
விரக்தியோடு விழியைசைத்து
விசும்பல்களை சுமந்துகொண்டு..
----------------------------------------------------------------------
தமிழ்குறிஞ்சியில் வெளியான கவிதை
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்.




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஆதலால் காதலிக்காதே!


காதலிக்காதே!

கனவுகள் மெய்படட்டும்
கண்ணீர் பாதுகாக்கப்படட்டும்
கற்பனைகள் பொய்யாக்கபடட்டும்
கள்ளத்தனம் குடியேராதிருக்கட்டும்

காதலிக்காதே!

கிறுக்கல்கள் கவிதையாகதிருகட்டும்
காகம் குயிலாகாதிருக்கட்டும்
கனவுகளுக்கும் ஓய்வு கிடைக்கடும்
கடலலைகள் கலங்கப்படுத்தாதிருகட்டும்!

காதலிக்காதே!

தொண்டைக்கும் வயிற்றுக்குமிடையில்
துன்பங்கள் சேராதிருக்கடும்
இமைகளுக்கும் விழிகளுக்குமிடையில்
இன்னல்கள் கூடாதிருக்கட்டும்
தனிமைக்கும் கூட்டத்திற்கும் நடுவில்
தவிப்புகள் நிகழாதிருக்கடும்
இரவுக்கும் பகலுக்குமிடையில்
ஏக்கங்கள் தொடராதிருக்கட்டும்!

காதலிக்காதே!

நிலவு நிம்மதியாயிருக்கட்டும்
நித்திரைக்கு சுதந்திரம் கிடைக்கடும்
நிகழ்காலம் நின்றுவிடாமலிருக்கட்டும்
நிம்மதி பறிபோகாமலிருக்கடும்!

காதலிக்காதே!

கம்பனுக்கும் கவிக் கிறுக்கனுக்கும்
வித்தியாசம் தெரியட்டும்
உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்
வித்தியாசம் விளங்கட்டும்
வறுமைக்கும் வசதிக்கும்
வம்புகள் வராமலிருக்கட்டும்.!

பாவற்காய் கரும்பாகி!
பாம்பு கயிறாகி!
பச்சைத்தண்ணீர் பாலாகி!
பார்ப்பத்தெல்லாம் பரவசமாகி!
கிறுக்குப்பிடித்து! தனியே சிரித்து!
உருக்குழைந்து! ஒளிந்து அழுது!

இப்படி! - - இப்படியெல்லாம்
நிகழாதிருக்க வேண்டுமெனில்
காதலிக்காதே!
காதலை அலைக்கழிக்காதே!

இலண்டன் வானொலியில் சகோதரி பேகம் அவர்களால் வாசிக்கப்படும்
எனது கவிதை.

ப்ரியத்தின் வெளிப்பாடு!



இருபது வருட ஆவல்
இனம்புரியா இதயத்தின் தேடல்
அன்புகொண்டவர்களை இணைத்தது
இணையத்தின் சாதனை
இணைந்த மனங்களுக்கு கிடைத்தது
ஆத்மார்த்த நட்பின் ஆராதணை
 
நட்பு என்னும் பந்தமொன்று
நெடுநாளானபின்னும் படர்ந்து வந்து
நெஞ்சத்துக்குள் நுழைந்துகொண்டு
நேசப்பூக்களை பூத்துச் சொரிகிறது
 
கொடுக்கல் வாங்கலில்
அன்பு அதிகரிக்கும்
அன்பை கொடுக்க கொடுக்க
ஆத்மா மகிழ்வடைந்தும்
அன்பு கிடைக்க கிடைக்க
ஆத்மா நிறைவடைந்தும்
 
இயற்க்கைமீது இச்சைகொண்ட பச்சை
இதோ என்மீதும் கொண்டதுபோல்
எங்கிருந்தோ எனை நினைத்து
எனக்காக தேடியெடுத்து
இதயக்கண்ணால் எனக்கு போட்டு அழகுபார்த்து
ஹாஜியிடம் அனுப்பிவைத்த
இளம் பச்சைநிறத்து கழுத்தணியும் காதணியும்
அணிகலன்களாய் என்னிடம் வந்து சேர்ந்தது
 
எல்லையில்லா அன்புகோர்
எடுத்துக்காட்டு இதையென்பேன்
பாசம் தந்த பரிசுயிதை
பலங்காலந்தொட்டு வைத்திருப்பேன்
அன்பென்னும் அகராதிக்கு
அஸ்மா என்னும் நட்பை மொழிபெயர்ப்பேன்..
=============================================

நாம் எதிர்பார்க்காமல் நமக்கு பிடித்தது நடந்தால் எப்படியிருக்கும,அதைவிட மேலாக இருந்தது இந்நிகழ்வின் சந்தோஷம். என்மீது அஸ்மா அக்காவிற்க்கு எத்தனை ப்ரியம் அதனை வெளிப்படுத்தியது இந்தச்செயல்.

இவ்வருடம் ஹஜ்ஜிக்குசென்றிருந்த எனது நாத்தனார் அவர்களை, நேரில் சென்று பார்த்ததோடு, எனக்காக இந்த நெக்லஸ் செட்டையும், அனுப்பியிருந்தார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்தாலென்ன! கண்டங்கள்தாண்டி இருந்தாலென்ன! உண்மை நட்பு என்றேனும் ஒருநாள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் என்பதை சாத்தியமாக்கியது எங்களின் குரல்வழியே இதயங்களின் சந்திப்பு. இறைவன் நாடினால் வெகுவிரைவில் நேரிலும் சந்திப்போம்.

அக்கா நீங்கள் அனுப்பிய
நட்பின் அடையாளத்திற்க்கு நன்றிசொல்லபோவதில்லை 
அன்பாய்  அதீதப்ரியமாய்  
ஆத்மார்த்தமாய் எனக்குள் நீங்கள் குடியேறிக்கொண்டதால்..

இப்படியும் நடக்குமா?
இதையும் கிளிக் செய்து பார்க்கவும்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது