நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதிரும் புதிரும்.

 
இருக்கு என்கிறேன்
இல்லை என்கிறாய்!

நெருப்பு என்கிறேன்
புகை என்கிறாய்!

நீர் என்கிறேன்
கானல் என்கிறாய்!

கவிதை என்கிறாய்!
கிறுக்கல் என்கிறேன்

மனம் என்கிறேன்
சிறை என்கிறாய்!

எதிர் என்கிறேன்
நீ புதிர் காண்கிறாய்!

நான் காதல் என்கிறேன்
நீ மோதல் கொள்கிறாய்!

நீ எனக்கு என்கிறேன்
நீ எதற்க்கு என்கிறாய்!

இருவருக்குள் எப்போதும்
எதிரும் புதிருந்தான்!

இருந்தபோதும் 
இனிக்கிறதே!இல்ல[ற]ம்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாவமன்றோ!

 
எல்லாம் சரியிருந்தும்
இருதயம் மட்டும் இறுக்கிப்போன
இரக்கமற்ற ஈனப் பிறவிகளாய்!
நலமிருந்தும்
மனமற்றுப் பேசித்திரியும்
மனசாட்சியற்ற மாக்களாய்!
மண்ணில் உலவும் மனிதசாதிகள்

வருவோர் போவோரை
வேடிக்கை பார்த்து!
வெடுக்குச் சிரிப்பு சிரித்து
வேசமிடத்தெரியா வெகுளிகளாய்!

கந்தலான ஒட்டுதுணியில்
கருவிழிகள் கலங்கியபடி! 
குழந்தைபோன்றே உணவை
குதறிப்போட்டு சேட்டை செய்து!
தனக்குத்தானே பேசியழும்
தன்னுணர்வற்ற செய்கைகளால்!

பணமில்லா சிரிப்பு சிரிப்பதால்
தான் பைத்தியமென்றும்
தனக்கொரு அந்தஸ்தில்லா நிலை
அதனால் அரைலூசு என்றும்
மனமிருந்தும் அது சற்று
நலமில்லாததால்
மனநலவாதியென்றும்!

குற்றமற்றிருந்தும்
குற்றவாளியைப்போல்பிறரின்
கேலிப் பார்வைகளால்
குன்றிபோவது கொடுமையன்றோ!

தன்னையறியாமல்
தன்னுணர்வு புரியாமல்
அடுத்தவர்களால் அவமதிக்கப்படும்
இந்நிலையிலுள்ளவர்களை
இழிவு செய்வது பாவமன்றோ!

எந்நிலையிலும் தனக்கும் வரும்
என்று உணர்வோராய்
மன ஊனமுற்றோரை
மனம் நோகும்படி செய்யாதிருப்பது
மனித தர்மமன்றோ!

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உணர்ந்துபார்!



உனக்குள் இருப்பதென்ன!
உன்னையே கேள்விகேட்க
உனக்கே தயக்கமென்ன!

உணர்ந்துபார்!
சந்தோஷங்களை
சந்தேகங்களுக்கு இறையாக்குவதை!

உணர்ந்துபார்!
உயிர்க் காதலை
உடல்காமத்திற்க்கு பலியாக்குவதை!

உணர்ந்துபார்!
உயர்ந்த நட்பை
உப்புசப்புக்காக ஒதுக்குவதை!

உணர்ந்துபார்
உன்னத உறவை
உதாசீனப்படுத்தி உதறுவதை!

உணர்ந்துபார்!
ஒப்பற்ற உதவிகளை
உணராது இருப்பவைகளை!

உணர்ந்துபார்!
ஒன்றுமில்லாதவைகளுக்கெல்லாம்
ஒரேடியாக அலட்டிகொள்வதை!


உணர்ந்துபார்!
வறட்டு கெளரவத்திற்கு
வாழ்வை தொலைப்பதை!

உணர்ந்துபார்!
பிறரை வசைபாடியே
பொழுதுக்கும் வம்பளப்பதை!

உணர்ந்துபார்!
விட்டுகொடுக்க முடியாமல்
வெட்டிக்கொண்டேபோவதை!

உணர்ந்துபார்!
கேவலம் பாராது
கேலிக்கூத்து ஆடுவதை!

உணர்ந்துபார்!
தனது அகத்தை உணராது
பிறர் முகத்தை பழிப்பதை!

உணர்ந்துபார்!
இன்னெதென்றே அறியாது
எப்படியோ வாழ்வதை!

உணர்ந்துபார்!
ஒழுக்கமில்லாது
புழுக்கையாய் அலைக்கழிவதை!


உணர்ந்துபார்!
ஒவ்வொரு நொடியும்
ஓய்வின்றி நகர்வதை!

உணர்ந்து சரிபார்!
உன்னைத் திருத்திக்கொள்ள
உன்னுள்ளத்தில் தயக்கமென்ன!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது