நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்புத்தி பின்புத்தி.


எத்தனை பட்டாலும் புத்திவராதா?
இன்னும் எதிலெதில்தான் ஏமாறுவாய்?
ஏமாறுகிறாயா?
இல்லை மற்றவரை ஏமாற்றுகிறாயா?

சினிமாமோகத்தில்
சிட்டாய் பறந்துவரும் பெண்ணே!
யாரும்காண தேகத்தை
கைகுட்டை அணிந்து காட்டவா?
யாருக்கும் தெரியாமல் ஓடிவருகிறாய்!
பாழ்பட்டு போவதற்கா
பாசங்களை இழந்து
படிதாண்டி வருகிறாய்?

நெஞ்சடைக்கும் செய்திகள்
நாளேடுகளில் கண்டும்
நெஞ்சழுத்தக் காரியாய்
நம்பியோரைவிட்டு வெளியேறுகிறாய்!
தரங்கெட்டவளாகி
தலைப்பு செய்திகளில் வருகிறாய்!

நயவஞ்சத்தோடழையும்
குள்ளநரிகளுக்கு மத்தியில்
நீயே சென்று சிக்குவது சரியா?
கலைத்தெரியப்படுமே மானம்
அதைதான் விரும்புகிறாயா?

பெண்புத்தி பின்புத்தியென்ற
பலமொழியை உண்மையாக்கி
பட்டும் திருந்தாமல்
பரிதவிப்பது முறையா?

சீரழிவது சுலபமடி!
சீரழிந்த பின்னே-கண்ணீர்
சிந்தியும் லாபமில்லையடி!
சிலகால சொகுசிற்காக
சிறந்த பெண்மையை
சீர்கெடுப்பது பாவமடி!

சீரழிந்து கிடக்கிறதென
சமுதாயத்தின்மேல் பழியெதற்கு
சீரழிவது சமுதாயமல்ல
சீர்கெடுப்போரின்
நெறிமுறையற்ற வழிகேடுகளால்தான்
நெறிபடுத்த மகான்கள் வேண்டாமடி
நெறிதவறா நன்நடத்தை போதுமடி..

டிஸ்கி// இன்றைய செய்தியாக 6 பெண்கள் வீட்டைவிட்டு ஓடிவந்ததாம் சினிமாவில் நடிப்பதற்காக! நடிக்கவைப்பதாககூறி அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக.முதன்மைச்செய்திகள். இப்படி தினம் தினம் செய்திகள் வெளியாகியும் ஏன்? இப்படி இளம் பெண்கள் சீரழிந்து போவதற்காக முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என புரியாத புதிராகவே உள்ளது .
இசெய்தியை படித்ததும் மனவேதனைமேலிட எழுதியது தான் மேலே உள்ள வரிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாலையில் பவனிவந்த தமிழ்தேர்.

அமீரகத் தமிழ் இலக்கியக் கலைவிழா கடந்த 2011. மே- 27, அன்று வெள்ளி மாலை 6.மணி..துபை அல்கிசைஸ் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியின் அரங்கில் வானலை வளர்தமிழ் தமிழ்த்தேரின் 5 ஆண்டுவிழா.  நடைபெற்றது.

சிறப்பு விருந்திர்களாக
இலக்கியப் பேச்சாளர் தமிழ் ஆர்வலர். திரு பழநெடுமாறன் அவர்களும். கின்னஸ் புகழ். திருமதி ஆச்சி மனோரமா அவர்களும்[அவர்களின் குடும்பத்தார்களும்] மற்றும் பலர்கள் பங்கேற்றார்கள்.

திரு காவேரிமைந்தன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்துவழங்க, குழந்தை ஆனிஷா தமிழ்தாய் வாழ்த்துப்பாட. வானலை வளர் தமிழ் தமிழ்த்தேரின் தலைவர். சிவ் ஸ்டார் பவன் திரு கோவிந்தசாமி அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்த இனிதே தொடங்கியது விழா.
செல்வி நிவேதிதா குழுவினரின் நடனமும். மதர் டிரீம்ஸ் குழுவினரின் இசையும். மற்றும் அழகிய சிறுவனின் அழகான குரலில் கானமும்[மனநிலைகுன்றிய குழந்தையென்றே சொல்லமுடியாது அந்த அளவிற்கு மிக அற்புதமாக பாடிய கார்த்தி] மற்றும் தமிழ்தேரின் உறுபினர்களை வைத்து தொகுத்து , கீழைராசா அவர்கள் தயாரித்து வழங்கிய  மிக அருமையான குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. முகவை முகிலின் நூல்வெளியிடும் . மேஜிக் மேஜிக்  மற்றும் பலகுரல் மன்னரின் மிமிக்கிரியென  தொய்வில்லாமல் நடத்தப்பட்டது விழா.
விருந்தினர்களுக்கு பொன்னாடைபோர்த்தி பூங்கொத்துகள் வழங்கபட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
ஆச்சிமனோராவிற்க்கு பொன்னாடை போர்த்தபட்டபோது.
அய்யா திரு.பழநெடுமாறன் அவர்களுக்கு பூங்கொத்து வழங்கப்பட்டபோது.
வானலை வளர் தமிழ் தமிழ்த்தேரின் 5 ஆம்.ஆண்டுவிழா மலர் வெளியிடப்பட்டபோது
 கின்னஸ் ஆச்சி அவர்களுக்கு வானலை வளர்தமிழ் தமிழ்த்தேர் ”முத்தமிழ் காவியம்” எனும் பட்டம் வழங்கியபோது
அய்யா திரு பழநெடுமாறன் அவர்களின் உணர்வுப்பூர்வமான பேச்சு. தமிழார்வத் தொண்டர்களுக்கு மகிழ்வைத் தந்தது.
 மேடையில் என்கைகளைப் பிடித்தபடியே ஆச்சி பேசியபோது .
ஆச்சி அவர்களின் பேச்சு பாட்டு மற்றும் கவிதையென அனைத்தையும் கேட்டு எல்லோரும் அதிசயித்தார்கள். முழுமூச்சில். காகிதத்தில் எழுதிவைத்திடாமலே  மிகஅருமையாக, போரில் தன்மகன் புறமுதுகு காட்டியதாக கூறியதும் அந்த தாயின் மனநிலை எவ்வாறு இருந்ததென தனது கம்பீரக்குரலில் கவிதை பாடிய தோரணை அசரவைத்தது என்றால் மிகையில்லை.
அரங்கம் ஆனந்ததில் திளைத்தபோது
விழாவில் அய்யாவிற்காகவும். ஆச்சிக்காகவும். திருமதி ஜியா நர்கீஸ் அவர்கள் கவிதை தொகுத்ததளித்து பிரமாதம். அதோடு ஆச்சி அவர்களுக்காக, சந்திரசேகர் அவர்கள் எழுதிய வரிகளை செல்வி நிவேதிதா பாடலாய் பாடியது அருமை. இடையிடையே ஜெயாபழனியும் நிவேதிதாவும் தொகுத்து வழங்கியதும் அழகு.
.
மேடையில் தனது குடும்பாத்தார்களுடன் ஆச்சி.
------------------------------------------------
விழா மிக சிறப்பாக நடந்தேறியது. கெளரவிக்கபடவேண்டியவர்கள் சிறப்பாக கெளரவிக்கபட்டார்கள் இடையில் குலுக்கல் பரிசுச்சீட்டு வழங்கபட்டு கடைசியில் பரிசும் வழங்கபட்டது. இதற்காக உழைத்து மிக சிறப்பாக நடத்திய வானலை வளர்தமிழ் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
                                 ஆச்சியுடன் இந்த அசடு.
ஆச்சியோடு பேசியதில் ஆனந்தம். எனது  கவிதை நூலை கொடுததும் நீங்க எழுதியதாடா. ரொம்ப சந்தோஷமாக இருக்குமா என்றுஅவர்கள் என் கைகளைபிடித்துக்கொண்டு உரையாடியவிதம் பிடித்திருந்தது.

அய்யா திரு பழநெடுமாறன் அவர்களிடன் எனது உணர்வுகளின் ஓசை கவிதை நூலை கொடுத்துவிட்டு சிலமணித்துளிகள் உரையாடல். சாந்தமான குரலில் அன்பாக பேசினார்கள்.அவர்களின் எளிமையான தோன்றம். உணர்வுகலந்து பேசும்விதம் பிடித்திருந்தது.

மிக அருமையான அழகான இலக்கிய கலைவிழாவாக நடந்தேறியதில் மிகுந்த மகிழ்ச்சி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புழுங்கும் மலர்..

                                                                                    கிளிக்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது