காதல் கிறுக்கு!
என்னவென்பேன் பெண்ணவளின்
வண்ணமதை
கொண்டுவிட்டேன் அவளிடம்
காதல்போதை
நித்தமவளை நினைக்கின்றேன்
நெஞ்சமுறுகி
சத்தமின்றி தவிக்கின்றேன்
சிந்தை சிதறி
முத்துநகை வந்துவிட்டால்
போதுமென்பேன்
பித்தனாகி நானுமவள்
காலடியில்
சொத்துசுகம் அத்தனையும்
வேண்டாமென்பேன்
முக்தியாகி நானுமவள்
முந்தானையில்
பாரிஜாத முல்லையவள்
மணமணப்பில்
பாசாங்கு சோலையவள்
சிரி சிரிப்பில்
பைந்தமிழின் வார்த்தையிலே
வாயடைத்தேன்
பைங்கிளின் பேச்சினிலே
மூச்சடைத்தேன்.
அதிகாலையென்பது
எனக்கில்லை
அவளைக் காணுமுன்னே
அனுதினமும்
உறக்கமில்லை
அவளைக் கண்டபின்னே
என் நெஞ்சமதை
எடுத்துக்கொண்டால்
மொத்ததிலே
அதிலவளின்
நினைவைமட்டும் வைத்து
தைத்துவிட்டாள்
என் இதயத்திலே
பேதையவள் கண்களிலே
போதை கொண்டேன்
பேரழகி அவளேயென்று
வியந்து நின்றேன்
பெண்ணவளின் கைப்பிடித்து
காலம்தோறும்-இப்
பிரபஞ்சம் முழுதும்
நானும் சுற்றவேண்டும்
இப்பிறவி முடிந்தபின்னும்
மீண்டும் தோன்றும்
அப்பிறப்புமும் வேண்டும்
அவள் எனதருகில்
இணைத்துவைத்து இறுக்கிவைத்த
இருமனமும்
இணைபிரிந்திடாது
இருந்திடவேண்டும் சொர்கத்திலும்...
டிஸ்கி// ராகத்தோடு படித்துப்பாருங்கள். 2. 3. நாட்களாய் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால். ஆங்காங்கே இதுபோல் முணுமுணுப்பதுபோல் கேட்கிறது.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வீழ்வேன் என்று நினைத்தாயோ!
வாழவந்திருக்கும் பூமியில்
வசதிகளும் வாய்புகளும்
ஏராளம் ஏராளம்- அதை
வகையாய்
வகைப்படுத்திக்கொண்டால்
வசந்தம் கைகூடும் எந்நாளும்.
சாதிக்கத்துணிந்த பின்னே
சோதனைகளைகண்டு
சோகமெதற்கு-மனம்
அழுக்கானவர்களைக் கண்டு
அச்சம்கொண்டு
அடங்குவதெதற்கு- நீ
மறைவதுபோல
தோன்றிடும் இருட்டு-ஆனால்
மறுநாளே விடிந்திடும்
மங்கள கிழக்கு.
முக்காடிட்டு மறைத்திருப்பது
முகத்தையே தவிர
மூளையையல்ல –நீ
முன்னுக்கு வரும்வழியில்
முட்டுக்கட்டைகளைக்கண்டு
முடங்கிவிடாதே!
முயற்சிசெய்தால்- அதே
முட்டுக்கட்டைகளைக்கொண்டு
மேடைகளாக்கு! மேதைகள் கையால்
மாலைகள் கிடைக்கும்
மாபெரும் இறைவனின் அருளால்
மதிப்புகள் உயரும்.
உலகம் என்பது
ஒரு நாடகமேடை –அதில்
உலவும் மனிதரோ
ஓ ராயிரம் வகை
ஒவ்வொரு மனங்களும்
ஒவ்வொருவிதம்-அதில்
ஓடும் எண்ணமோ பலபல ரகம்
வீசிடும் தென்றலில்
வாஞ்சையுமுண்டு கோபமுமுண்டு
வாஞ்சையாய் நீயும் கோபத்தைப்பாரு
வருத்ததை உதறி வாரியணைத்து -உன்
வாஞ்சையை பகிரு
வந்துசேருமே- ஒன்றாய்
வசந்தங்கள் நூறு
கவிதை எழுதும் கடுகொ ன்று அங்கே
காலுன்றிகொண்டு வேரூன்றிவிடுமோயென
கவலை கொள்வோரின் முன்னே!
கவனமாய் நீயும்
கடந்திடு பெண்ணே-உன் கவனமெல்லாம்
களைகளைக் கலைந்து -நற்
க விதைகளை விதைப்பது தானே!
விசால மண்ணில்
[க]விதைகளை விதைத்து-அதில்
விசமில்லாத உரமும் தூவி-
விளைமண்ணைமுட்டி மோதிக்கொண்டே
வீரிட்டு எழுந்திடு!
வேர்விட்டு வளர்ந்திடு
வெட்டிதள்ளினும்
வேர்விட்டு தளைத்திடும்
ஆலமரம்போல
வரம்புமீராத உன்
வாழ்கையினாலே வளர்ச்சிகண்டிடு
ஆலம்விழுதினப்போல
வல்லோன் நினைத்தால் அதற்குமேலும்
வாழந்துகாட்டிடு
வாழையடி வாழை....
டிஸ்கி// சென்னை //ரஸ்மி// என்ற ரஸ்தாமாவிற்காக இக்கவிதை..
சிலர் சிலரை உயர்த்துவதும் தாழ்த்துவதும். தவறாக எடைபோடுவதும் .[ அவங்களுக்கு மட்டுமா எங்கும் இதுபோன்ற விசமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.குறுகியமனதோடு]
பூமியில் சகஜம். அதையெல்லாம் தாண்டி சாதிக்கத்துணிந்தவன்.
அது [செருப்பு தைய்பதாகட்டும்.
சிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.
தோல்வியன்றபோதும் தொடர்ந்த முயற்சி ஒருபோதும் வீணாகாது. ஒருமனிதனின் சிறு சாதனையும் அது சிலமனிதர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் சிலமனிதர்களை சங்கடத்திற்குள்ளாகும்.
நம்மைவிட அவன் முன்னேறுவதா என மனதுக்குள் முனங்கிக்கொண்டே வெளிவேசமாய் உலவும் மனிதர்கள் நிறைய இப்பூமியிலே!
உனக்கென்று எது கிடைக்க இருக்கிறதோ அது கிடைத்தேதீரும்
யார் தடுத்தாலும். ஆனால் உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.
இது இறைவனின் வாக்கு!
எவன்வசம் எல்லாம் இருக்கிறதோ அவன்வசமே அனைத்தும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
புத்தம் புதியதாய் பூத்திருக்கேன்!
//டிஸ்கியோ டிஸ்கி///இது புதுசு. நாம படித்த படிப்புக்கு ஏதோ எனக்கு தெரிந்தவரையில் கவிதையை படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன். எப்படியிருக்குன்னு சொன்னா ஹி ஹி இதபோல் இடையில் தொடர்வதான்னு யோசிக்கலாம்..
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



