கனகாமரச் செடியோரம்
கைகோத்து நடக்கையில
கரிச்சாங்குருவி ஒன்னு
கான பாடிச்சி -குருவி
கான பாடிச்சி
கானவ கேட்டுகிட்டே
கதபேசிப் போகையில
கருவேல முல்லு ஒன்னு
நறுக்குன்னு குத்திச்சி -என்காலில்
நறுக்குன்னு குத்திச்சி அத
கண்ட கண்ல கண்ணீர் -என்
கண்ணன் கண்ல வழிய -உன்
கையில எங்கால எடுத்து
வழிஞ்ச ரத்தம் துடைக்க
மனசெல்லாம் மனசெல்லாம்
காத்துல பறந்துச்சி -பஞ்சாகி
காத்துல பறந்துச்சி
குத்தினமுல் வலியெல்லம்
காணாம போயிடுச்சி -காத்துல
காணாம போயிடுச்சி
[கருவேலங்காட்டுக்குள்ள]
நெஞ்சுக்குள் வலியெடுத்து
நொடிகூட ஆகவில்ல
துடியா துடிச்சிபோயி
நெஞ்சில சாச்சிக்கிட்ட -உன்
நெஞ்சில சாச்சிக்கிட்ட
விடிய விடிய முழிச்சிருந்து
விழி மூடாம காத்திருந்து
விரலாலே என்ன நீயும்
நீவிகொண்டிருந்த நெஞ்ச
நீவி கொண்டிருந்த -அத
பாத்த என்னோட மனசு
பச்சபுள்ளையா மாறிப்போக -ஒங்கைய
புடிச்சிக்கிட்டே
புலம்பிகொண்டு நானுங்கரைய
மனசெல்லாம் மனசெல்லாம்
பனியா உருகிடிச்சி -வெயில்பட்ட
பனியா உருகிடிச்சி
பட்டாம் பூச்சிபோல
சிறக விறிச்சிச்சி -மனசு
சிறக விறிச்சிச்சி
[கருவேலங்காட்டுக்குள்ள]
என்னவனே என்ன வனே
என்னையாளும் மன்னவனே
என் னுயிருக்கு ஏதுமுன்ன
உள்ளம் துடிக்குது ஓங்
உள்ளம் துடிக்குது -அத
நானும் காணும் போது
நெஞ்சம் நெகிழுது என்
நெஞ்சம் நெகிழுது
உங்கூட காலமெல்லாம்
ஒன்னா இருக்கோனும் -சேந்து
ஒன்னாயிருக்கோனும்
உயிருக்குள் ஊடுருவி
உதிரமா ஓடனும் உனக்குள்
உயிரா ஆகனும்..
[கருவேலங்காட்டுக்குள்ள]
[டிஸ்கி:: நமக்கும் நாட்டுபுற பாட்டு வருதான்னு ஒரு டெஸ்டுதான்.
புதுவருசத்துல இதெல்லாம் தேவையான்னு யாரோ!!!!!!!!! முனங்குவது என்காதில் கேட்கிறது சரி சரி ]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
புத்தாண்டே வா வா
பூத்துக்குலுங்கும்
பிறக்கும்
புத்தாண்டே!!
புத்தம் புதிதாய்
புவிமீது விழும்
நிழலாய்
கரும்புச் சாராய்
கற்க்கண்டு
துகளாய்
மண்ணின் மணமாய்
மாசற்ற
மனமாய்
தேனின் ருசியாய்
தென்றலில்
இசையாய்
மழலையின் சிரிப்பாய்
மனங்களின்
பூரிப்பாய்
வேறுபாடுகளை கழைந்து
வெவ்வேறு
இனமென்பதை மறந்து
மனிதமென்னும்
புனிதமாய்
மனிதர்களென்னும்
எங்களை
மனமொத்து மகிழ்வாய்
வளமான வாழ்வை
வாழ்வதற்கு வழிசெய்ய
வல்ல இறைவனிடம்
வேண்டி வா
வரவேற்கிறோம்
புத்தாண்டே
வசந்தமாய் வா வா...
அரையடி நாக்கு
அரையடி
ஆறடியை
வீழ்த்துகிறது
எலும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது
தன் நாவால்
பிறருக்குத் தரும்
துன்பங்கள்
தனக்கே புரிந்தும்
தடம் புரள்கிறது
பிறரை
தடுமாறவைக்கிறது
நாவிலிருந்து
நழுவி விழும்
சொல்லில்
நேர்மை தவறுகிறது
நாளொரு பேச்சி
நிமிடத்திற்கொரு
வார்த்தை –என
நன்மதிப்பை
இழந்து விடுகிறது
அரையடி நாவின்
பொய்களை நம்பி
அநியாயமாய் பலரை
அழியவைக்கிறது
நாவைக்கொண்டு
நம்பிக்கை துரோகம்
நாளும் செய்து
நன்மையை இழக்கிறது
அரையடி நாக்கே
அன்பாயிருக்க அழகாய்
பழகிக்கொள்
அனைவரின் மனதிலும்
ஆட்சி செய்திட
விழிப்பாய் இருந்துகொள்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
ஆறடியை
வீழ்த்துகிறது
எலும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது
தன் நாவால்
பிறருக்குத் தரும்
துன்பங்கள்
தனக்கே புரிந்தும்
தடம் புரள்கிறது
பிறரை
தடுமாறவைக்கிறது
நாவிலிருந்து
நழுவி விழும்
சொல்லில்
நேர்மை தவறுகிறது
நாளொரு பேச்சி
நிமிடத்திற்கொரு
வார்த்தை –என
நன்மதிப்பை
இழந்து விடுகிறது
அரையடி நாவின்
பொய்களை நம்பி
அநியாயமாய் பலரை
அழியவைக்கிறது
நாவைக்கொண்டு
நம்பிக்கை துரோகம்
நாளும் செய்து
நன்மையை இழக்கிறது
அரையடி நாக்கே
அன்பாயிருக்க அழகாய்
பழகிக்கொள்
அனைவரின் மனதிலும்
ஆட்சி செய்திட
விழிப்பாய் இருந்துகொள்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


