நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்


இறைவனின் துணைக்கொண்டு
இனிதே நிறைவேறியது
நோன்பென்னும் புனித விரதம்

இம்மாதம் முழுவதும் மகிழ்ந்த மனம்
கரையேரும் நோன்பை நினைத்து வருந்தும்
இனிதினம்

முடியும் மாதத்தை நினைத்து வருத்தம் ஒருபுறம்
முடிந்தபின் முதல் நாள் வரும் பெருநாளை நினைத்து
சந்தோஷம் மறுபுறம்

நாளை வரும் பெருநாளை வரவேற்கின்றேன்
இன்றே,
உங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்கின்றேன்

உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
தோழமைகளுக்கும் உள்ளங்களுக்கும்
என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்

உணர்வோடு உறவாடு


இது வெரும் வார்த்தகளுக்காக மட்டுமல்ல
நாம்வாழும் வாழ்க்கைக்காக,,வும்

உதிரம்தந்து உழைப்பும்தந்து

உயிரைக்கூட தரதுணிந்த
உறவுகளை உதறிவிட்டு
ஒதுங்கி வாழ்வதற்காக
பிரிவை தேர்ந்தெடுத்து

தனிமையை தேடிப்போகும்
உறவுகளே!

உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை

 பிரிவுகள் கொடுக்கிறதா?
உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள்,

பிரிவுகளில் கிடைக்கிறதா?
உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை

பிரிவுகளில்தான் உண்டாகிறதா?

நாமென்ன வானதில்

விளிம்பிலிருந்தா குதித்தோம்
இல்லையே
தந்தையென்னும்

உறவின் உதிரத்தில் உதித்து
தாயென்னும்

உறவின் கருவில் ஜனித்தவர்கள்தானே!

நம்கூடபிறந்தவர்களிடம்கூட எதற்கு பிணக்கு
நம்உறவுகளோடு ஏன் வம்பு வழக்கு
பிறப்பென்னும் பிரிவுமட்டும்போதுமே
கர்பத்திலிருந்து வெளியேவந்த நமக்கு,

விட்டுகொடுத்துப்போவதென்பது

அற்றுபோய்வருவதால்
உறவுகளெல்லாம்

வெட்டிக்கொண்டேபோகிறது
உணர்ச்சிவசப்பட்டு

உறவுகளை பிரிந்துவிடுவதால்,
உடல் உணர்வுகளை

இழந்துநிற்கும் நிலையில்
உள்ளம் உறவுகளை

தேடிக்கொண்டேஇருக்கிறது.

உயிரோட்டமுள்ள உறவுகளை

உதாசிணப்படுத்திவிட்டு
உயிரற்ற காகிதபணத்தின்

உறவைத்தேடி ஓடுகிறது மனிதஇனம்
ஓ உறவே;
உன் உயிர் உன்னைவிட்டு

விலகிவிடும்போது
நீ ஓடித்ஓடி தேடிய உயிரற்ற காசால்
கலங்கத்தான்முடியுமா--இல்லை”
ஒருசொட்டுகண்ணீர் விடதான்முடியுமா?

உறவுகள் சேர்ந்திருப்பின்

சிறுசிறு சங்கடங்கள் வருவது சகஜம்
உறவுகளை பிரிந்திருப்பின்

மனகஷ்டங்கள் வருவது சுலபம்
சங்கடங்களென்பது

கலைந்துபோகும் மேகம்-ஆனால்
மனகஷ்டங்களென்பது ஆராத்துயரம்.

உலன்றுபோனவனுக்கு நல்லுறவுகளிருப்பின்
உயிர்பித்து எழுவான் –அதுவே
பிரிந்துபோனவனுக்கு
நல்லுறவுகள் இல்லையேல்
பரிதவித்துப்போவான்.

உறவுகளின் உன்னதம்

பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை

உறவுகளைஇழந்திருக்கும்போது புரியும்
உறவுகளை பிரிந்துவாழும்

வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிருப்தி
உறவுகளை இணைத்து-இணைந்து

வாழ்வதே மனதுக்கு திருப்தி.

உறவுகள் பலவிதம்- அதைவிட

பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள்

விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-
ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள்

வெளியாகும் மனிதப்பிறவிகளே!

/ஆகவே/

உறவுகளோடு இணங்கி உறவாடு
பிரி”வினை” என்னும்

வினையை குழிதோண்டிப்போடு
உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

//இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதி வெளியான வரிகள் //

பாவமன்னிப்பு


எங்கள் இறைவா!
அகிலத்தின் அதிபதியே!
ஆட்சி செய்பவனே!
இரக்கமுள்ளவனே!

ஈகையாளனே!
உறுதியாளனே, உண்மையாளனே!
ஊக்கமளிப்பவனே!
எல்லைகளை கடந்தவனே!
ஏற்றமுடையவனே!
ஐபூதங்களையும் அடக்கி ஆள்பவனே!
ஒரு சிறு தீங்கும் இழைக்காதவனே!
ஓர்மை நிறைந்தவனே!
எங்கள் பிழைகளை பொறுக்கச் சொல்லிமன்றாடி நிற்கிறோம் இறைவா!

எங்கள் இறைவா!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்புரிந்தும்
புரியாமலும் கூட்டத்திலும் தனிமையிலும்
ரகசியமாகவும் பகிரங்கமாகவும் செய்த ஒவ்வொரு சிறிய பெரிய
பாவங்களையும் மன்னித்தருள்வாயாக
!

எங்கள் இறைவா!
எங்கள் உடல் உறுப்புக்கள் செய்த

ஒவ்வொருபாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

எங்கள் இறைவா!
பூமியில் பிறந்த நாங்கள் புண்ணியம் செய்வதை விட்டுவிட்டு
பாவங்களின் பக்கம் எங்கள் முகங்களையும் எங்கள் மனங்களையும்
பிணைத்துவைத்திருக்கின்றோம் அதிலிருந்து
எங்களை மீட்டெடுப்பாயாக
!

எங்கள் இறைவா!
எங்கள் இதயங்கள் அழுக்கடைந்திருக்கிறது பலவிதங்களில்
பாவங்கள் புதைந்துகிடக்கிறது எங்கள் உள்ளங்களை தூய்மைப்படுத்தி
எங்கள் எண்ணங்களை தெளிவானதாக்கி வைப்பாயாக!

எங்கள் இறைவா!
நாங்கள் பலவீனமானவர்கள்
ஒன்றும் தெரியாதவர்கள்
மாய உலகில் சிக்கியவர்கள்
வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்
நல்லது கெட்டது என்று தெரிந்தும் பல
நேரங்களில்தவறிழைக்ககூடியவர்கள் இறைவா!

எங்கள் ஒவ்வோர் உறுப்புகளும் பாவத்தில் மூழ்கியிருக்கிறது
எங்கள் குற்றங்களை மன்னித்துவிடு எங்கள் பாவங்களை போக்கிவிடு
எங்களின்
கவனக்குறைவுகளை நீக்கிவிடு

எங்கள் இறைவா!
பாவமன்னிப்புக்கேட்டு தலைகுனிந்து நிற்கிறோம்
கைகளை ஏந்தியவண்ணம் நிற்கிறோம்
எங்கள் கைகளை வெறுங்கைகளாக தட்டிவிடாதே!
உன் சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்
எங்கள் கோரிக்கைகளையேற்று எங்களின் பாவங்களை மன்னித்து
எங்களுக்கு நல்லருள் புரிவாயாக!

எங்கள் இறைவா!
எங்களை ஷைத்தான்களின் தீங்கைவிட்டும்
கொடியமனிதர்களின் தீங்கைவிட்டும்
கொடிய வியாதிகளின் தீங்கைவிட்டும்
நேரான பாதையிலிருந்து வழி தவறுவதைவிட்டும்
கெட்டவர்களிடம் கூட்டு சேர்வதைவிட்டும்
நல்லவர்களிடமிருந்து பிரிவதைவிட்டும்
தீயபழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதைவிட்டும்
எங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கிழைப்பதைவிட்டும்
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதைவிட்டும்
அடுத்தவர்களின் பொருள்களை அபகரிப்பதைவிட்டும்
அநியாங்கள் செய்வதைவிட்டும்
அத்துமீறிய செயல்களைவிட்டும்
எங்களை காப்பற்றுவாயாக! எங்களை காப்பாற்றுவாயாக!

எங்கள் இறைவா!
புனிதமாதத்தின் இறுதியில் இருக்கிறோம்
எங்கள் பிராத்தனைகளை ஏற்றுக்கொள்வாயாக
இம்மாதத்தின் பொருட்டால்
எங்கள் பிழைகளை மன்னித்தருள்வாயாக!
இந்நோன்பின் பொருட்டால்
எங்கள் குற்றங்களை மன்னித்தருள்வாயாக!
வணக்கங்களின் பொருட்டால்
எங்கள் தவறுகளை மன்னித்தருள்வாயாக!
இனி தவறுகளின், பாவங்களின், குற்றங்களின்
பக்கமே எங்கள் உடலும் உள்ளமும் திரும்பிவிடாதவாறு
நேரான வழியில் எங்களை நடத்திச்செல்வாயாக
எங்களை பாதுக்காப்பாயாக!
எங்களை பரிசுத்தப்படுத்துவாயாக!

எங்கள் இறைவா!
உன்னிடமே உதவி தேடுகிறோம்
உன்னிடமே எங்களை மன்னிக்கச்சொல்லி நாடுகின்றோம்
எங்களை மன்னித்து உன் அருளை எங்கள்மீது புரிந்தருள்வாயாக!
புரிந்தருள்வாயாக! புரிந்தருள்வாயாக! ஆமீன்...




அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்





அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது